முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவில் தொடர்ந்து கேட்கும் பீரங்கி குண்டு சத்தம் : தென்கொரியா சந்தேகம்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      உலகம்
KIM 2022 06 13

Source: provided

சியோல் : வடகொரியாவில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ச்சியாக கேட்டதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய ராணுவம் தரப்பில் கூறியிருப்பதாவது,  நட்பு நாடான அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நிலையான ராணுவ வழிமுறைகளைப் பேணுகிறது.

இந்த நிலையில், வடகொரியாவின் எல்லையில் ஞாயிறு காலை பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. சில மணி நேரங்கள் இந்தச் சத்தம் தொடர்ந்தது என்று தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், வடகொரிய ராணுவமோ நாங்கள் ஆயுத பரிசோதனைதான் நடத்தினோம் என்று விளக்கமளித்துள்ளது. ஆனால், எம்மாதிரியான சோதனை, எதற்காக நடத்தப்பட்டது போன்ற தகவல்களை வெளியிடவில்லை. 

வடகொரியா மீண்டும் ஒருமுறை ஏவுகணை பரிசோதனை செய்வதை நாங்கள் விரும்பவில்லை என்று சீனா ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து