எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதில் ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.ஆண்களுக்கான பளுதூக்குதலின் (109 கிலோ) இறுதி போட்டியில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் இப்போட்டியில் மொத்தம் 355 கிலோ தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான ( 109+ கிலோ) பளுதூக்குதலில் இறுதி போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் பங்கேற்றார். அவர் இந்தப் போட்டியில் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை கைபற்றினார். இதன் மூலம் 1 வெள்ளி , 4 வெண்கலம் வென்றது.காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 18 பதக்கங்களுடன் 7-ம் இடத்தில் நீடிக்கிறது.
_______________
பாரா டேபிள் டென்னிஸ் போட்டி:
அரையிறுதியில் பவினா பட்டேல்
7-வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நேற்று தொடங்கின.
அந்த வகையில் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் தனது 3-வது குரூப் 1 ஒற்றையர் ஆட்டத்தில் நேற்று களம் கண்டார். பிஜியை சேர்ந்த அகானிசி லாடுவுடன் மோதிய பவினா பட்டேல் 11-1, 11-5, 11-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
________________
குத்துச்சண்டை: இந்தியாவுக்கு
மேலும் ஒரு பதக்கம் உறுதி
நேற்று நடைபெற்ற குத்துச்சண்டை ஆண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அமித் பங்கால் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த லெனான் முல்லிகன் உடன் மோதினார்.இந்த போட்டியில் அமித் பங்கால் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். குத்துச்சண்டை போட்டியில் இரு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வெண்கல பதக்கம் உண்டு.
இதன் மூலம் அமித் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமித் பங்கால் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
______________
குத்துச்சண்டை அரை இறுதி:
இந்தியர்கள் 3 பேர் தகுதி
குத்து சண்டையில் இந்தியா சார்பில் 5 வீரர்கள், 5 வீராங்கனைகள் ஆக மொத்தம் 10 பேர் பங்கேற்று உள்ளனர். இதில் ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே கால் இறுதியில் தோற்று வெளியேறி இருந்தனர். கால் இறுதியில் 3 இந்தியர்கள் வெற்றி பெற்றனர். இதனால் குத்து சண்டையில் 3 பதக்கம் உறுதியானது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிஹாத் ஜரீன் கால் இறுதியில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ஹெலன் ஜோன்சை எதிர் கொண்டார்.
இதில் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதியில் அவர் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டப்லேயை 6-ந்தேதி சந்திக்கிறார். இதே போல 48 கிலோ பிரிவில் வீராங்கனை நித்து, 57 கிலோ பிரிவில் வீரர் ஹூசைன் ஆகியோரும் கால் இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற லவ்லினா கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். 70 கிலோ பிரிவில் பங்கேற்ற அவர் கால் இறுதியில் 2-3 என்ற கணக்கில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ரோசியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தார்.
_____________
குத்துச்சண்டை அரையிறுதி :
இந்தியாவின் ஜெய்ஸ்மின் தகுதி
பெண்களுக்கான லைட்வெயிட் 60 கிலோ எடை பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா நியூசிலாந்தின் டிராய் கார்டனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஜெய்ஸ்மின் 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
குத்துச்சண்டை போட்டியில் இரு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வெண்கல பதக்கம் உண்டு. இதன் மூலம் ஜெய்ஸ்மின் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் அமித் பங்கால் (இந்தியா) 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார்.
______________
ஸ்குவாஷ் - அடுத்த சுற்றுக்கு
முன்னேறிய இந்திய இணை
ஸ்குவாஷ் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் சுனைனா சாரா குருவில்லா (23 வயது) -அனாஹத் சிங் (14 வயது) இணை இலங்கையை சேர்ந்த எஹெனி-சனித்மா ஜோடியுடன் மோதினர்.
இந்த போட்டியில் இந்திய இணை 11-9, 11-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய ஜோடி ஆஸ்திரேலியாவின் டோனா அவுஸ்லோபன் மற்றும் ரேச்சல் க்ரின்ஹாமை எதிர்கொள்கிறார்கள்.
____________________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக நீடித்த சி.பி.ஐ. விசாரணை
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் நேற்று 3 -வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
4 மாவட்டங்களில் ரூ.48 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு பணிகள் துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்
31 Dec 2025சென்னை, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா? காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பதில்
31 Dec 2025காரைக்குடி, காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பிப்ரவரி மாதமே தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு
-
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு அரசு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசாணை வெளியீடு
31 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு
-
ஒரே நாளில் இரண்டு முறை குறைந்தது தங்கத்தின் விலை: சவரன் ரூ. 99,840-க்கு விற்பனை
31 Dec 2025சென்னை, ஒரே நாளில் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது.
-
தமிழ்நாடு மக்களுக்கு நிம்மதியை வழங்கும் ஆண்டாக 2026 புத்தாண்டு அமையட்டும் : எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
31 Dec 2025சென்னை, புத்தாண்டு தமிழக மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கும் ஆண்டாக அமையட்டும் என்றும் நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும் வழங்கும் ஆண்டாக அமையட்ட
-
சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்..? தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கேள்வி
31 Dec 2025சென்னை, போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
-
ஏற்றமிகு ஆண்டாக 2026 அமையட்டும்: முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து: நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்
31 Dec 2025சென்னை, 2025 ஆண்டில் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டங்களுக்கு குறைவே இல்லை என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வ
-
சாலை வரி விலக்கு நீட்டிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி
31 Dec 2025சென்னை, சாலை வரி விலக்கு நீட்டிப்பு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.
-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை
31 Dec 2025சென்னை, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
-
நியூசிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
31 Dec 2025வெலிங்டன், 2026 புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் நியூசிலாந்து வரவேற்றது.
-
2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு முழுவதும் டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் துவக்கம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தல்: விருப்ப மனுக்கள் வழங்கும் கால அவகாசத்தை நீட்டித்த காங்கிரஸ்
31 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசத்தை ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
கல்வி நிதி விடுவிப்பதை தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம்: மத்திய அமைச்சர் மீது கனிமொழி விமர்சனம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ. 2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ.க.
-
ஆபரேஷன் சிந்தூரின்போது சீனா மத்தியஸ்தம் செய்ததா? இந்தியா திட்டவட்டமாக மறுப்பு
31 Dec 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின் போது மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறி வரும் நிலையில் தற்போது சீனாவும் இதே கருத்தை கூறியுள்ளதை இந்தியா திட்டவட
-
தமிழகத்தில் 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் வரி விலக்கு நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
31 Dec 2025சென்னை, தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான 100 சதவீதம் சாலை வரி விலக்கு 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
-
தமிழ்நாட்டில் மீண்டும் இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை ஜன. 6-ம் தேதி கூடுகிறது
31 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப் அரசுக்கு பதிலடி: அமெரிக்கர்கள் மீது பயணத்தடை விதித்தது 2 ஆப்பிரிக்க நாடுகள்...!
31 Dec 2025மாலி, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய 2 நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன.
-
இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு: பிரதமர் மோடியின் இரங்கல் கடிதம் கலீதா ஜியா மகனிடம் ஒப்படைப்பு
31 Dec 2025டாக்கா, மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா நகரத்துக்குச் சென்ற நிலையில் பிரதமர்
-
பிறந்தது 2026 புத்தாண்டு: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
31 Dec 2025புதுடெல்லி, 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்
31 Dec 2025சென்னை, சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமா...? த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-01-2026
01 Jan 2026



