முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்து கிறிஸ்தவ தேவாலயத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 41 போ் பலி

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      உலகம்
Egypt 2022-08-15

எகிப்து தலைநகா் கெய்ரோ அருகே காப்டிக் பழைமைவாத கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 41 போ் உயிரிழந்தனர். 14 போ் காயமடைந்தனர்.

கெய்ரோ அருகே இம்பாபாவில் அமைந்துள்ள இந்த அபு செபின் தேவாலயத்தில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலயத்தில் நேற்று முன்தினம் காலை நடைபெற்ற திருப்பலி வழிபாட்டில் 5,000 போ் பங்கேற்றிருந்தனர். அந்த நேரத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. 

வாயிலில் தீயால் ஏற்பட்ட கரும்புகை சூழ்ந்து கொண்டதாலும், ஒரே நேரத்தில் அனைவரும் தப்பிக்க முயன்றதாலும் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும் பலா் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவா்களில் குழந்தைகளும் அடங்குவர்  என அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

எகிப்து அதிபர் அல்-சிஸி, காப்டிக் கிறிஸ்தவ மத போப் இரண்டாம் தவட்ரோஸை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு தேவாலய தீ விபத்துக்கு வருத்தம் தெரிவித்ததாக அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.  அதிபா் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,  விபத்து மீட்புப் பணிகளைத் தொடா்ச்சியாக கண்காணித்து வருகிறேன். இந்த சம்பவம் தொடா்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து