முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2022      இந்தியா
Nirmala-Seetharaaman- -2022-10-20

Source: provided

திருப்பதி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். 

மூன்று நாள் பயணமாக குடும்பத்துடன் ஆந்திரத்துக்கு வருகை தந்துள்ள நிர்மலா சீதாராமன், நேற்று முன்தினம் இரவு ஸ்ரீ பத்மாவதி தேவி கோயிலுக்குச் சென்றார், பின்னர் 70 கி.மீ தொலைவில் உள்ள சித்தூர் காணிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகரை வழிபாடு செய்தார். 

 

திருப்பதியில் இரவு தங்கிய மத்திய அமைச்சர் நேற்று காலை ஏழுமலையானை வழிபட்டார். அவருக்கு தேவஸ்தான தலைவர் ஒய்.பி.சுப்பாரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.  திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை வளாகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். பின்னர், ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள புகழ்பெற்ற பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஸ்ரீவாயுலிங்கேஸ்வர சுவாமியைத் தரிசிக்க நிர்மலா சீதாராமன் செல்லவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து