முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவசேனை விவகாரம்: டிச.12-ல் விசாரிக்கிறது தேர்தல் ஆணையம்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      இந்தியா
Election-Commission 2022 09

Source: provided

மும்பை : சிவசேனை கட்சியின் சின்னத்திற்கு இரு தரப்பினர் உரிமை கோரி வரும் நிலையில், டிசம்பர் 12-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை தொடங்குகிறது.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரேவும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் சிவசேனை கட்சியின் பெயருக்கும், சின்னத்திற்கும் உரிமை கோரிய நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சின்னத்தை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. இந்நிலையில், சின்னம் தொடர்பான சர்ச்சை வழக்கை டிசம்பர் 12ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை டிசம்பர் 9 மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்த காரணத்தால் சிவசேனையில் இருந்து விலகிய 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை மாற்றினா். அவா்கள் சிவசேனையின் கட்சிப் பெயரையும், சின்னத்தையும் கோரியதால், தோ்தல் ஆணையம் கடந்த அக்டோபா் 8-ம் தேதி சின்னத்தை முடக்கி உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து