முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஊழியர்களை குறிவைத்து ஆப்கனில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      உலகம்
Afghanistan 2021 12-06

ஆப்கானிஸ்தானில் நேற்று காலையில் அரசு ஊழியர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பால்க் மாகாணத்தின் மசார்-இ ஷரிப் நகரில் சாலையோரம் இருந்த வண்டிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. ஹியரடன் எரிவாயு மற்றும் பெட்ரோலியத் துறை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அப்பகுதியை கடந்த போது, வெடிகுண்டு வெடித்தது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. 

மேலும் அருகில் உள்ள வாகனம் மற்றும் அங்கிருந்த கடைகளும் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ். அமைப்பின் துணை அமைப்பான கொராசன் மகாண ஐ.எஸ். அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

தலிபான்களின் போட்டி அமைப்பான இந்த ஐ.எஸ். அமைப்பானது, ஆப்கானிஸ்தானில் 2021-ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து