முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் புதிதாக 19 மாவட்டங்கள் உதயம் : முதல்வர் கெலாட் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      இந்தியா
Ashok-Khelat 2023 03 19

Source: provided

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் புதிதாக 19 மாவட்டங்களை உருவாக்கி முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் அசோக் கெலாட் 19 புதிய மாவட்டங்கள், 3 புதிய கோட்டங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தலைநகர் ஜெய்ப்பூரை 4 சிறிய மாவட்டங்களாக பிரித்து  அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் அமைப்பது தொடர்பான பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தானில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்படும் 19 மாநிலங்களுடன் சேர்த்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து