எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார். இந்நிலையில் அவரிடம் தற்சமயத்தில் உலக அரங்கில் அசத்தும் டாப் 3 ஃபீல்டர்களை பெயரிடுமாறு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மட்டும் தான் தற்போதைய நிலையில் ஒரே சிறந்த ஃபீல்டராக இருப்பதாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு., தற்போதைய நிலைமையில் ரவீந்திர ஜடேஜா மட்டும்தான் இருக்கிறார். பொதுவாக ஐபிஎல் துவங்கும் போது தான் அனைவரும் பீல்டிங் துறையில் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். இப்போதும் அனைத்து அணிகளிலும் பீல்டிங் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை. இப்போது அணியில் அனைவரும் மிகச் சிறந்த ஃபீல்டர்களாக இருக்க வேண்டும் என்ற வளர்ச்சியை நோக்கி வந்துள்ளோம். மேலும் பீல்டிங் துறையில் கவனம் செலுத்துவது அவ்வளவு கடினமானதல்ல. ஏனெனில் அது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய துறையாகும் என கூறினார்.
டெல்லி அணியில் ரிஷப்க்கு பதிலாக அபிஷேக் போரல்
கடந்த டிசம்பரில் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கிய டெல்லி அணியின் முக்கிய வீரரான ரிஷப் பண்ட் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவர் ஐபிஎல் 2023 சீசன் பங்கேற்காத நிலையில், அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பணிகளை யார் மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அந்த இடத்தை அபிஷேக் போரல் நிரப்புகிறார். 25 வயதாகும் போரல், முதல் தர கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய 26 இன்னிங்சில் 6 முறை அரைசதம் விளாசி பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் காமடைந்திருக்கும் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்க்கு பதிலாக வங்காளத்தை சேர்ந்த இளம் வீரர் அபிஷேக் போரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ள அபிஷேக் போரல், அணியின் பயிற்சி போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது அணியில் இடம்பிடித்திருக்கும் அண்கேப்ட் விக்கெட் கீப்பர்களான ஷெல்டன் ஜாக்சன், லுவ்னித் சிசோடியா, விவேக் சிங் ஆகியோருடன் அபிஷேல் போரலும் இணைந்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் மீது மார்க் பவுச்சர் நம்பிக்கை
முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தனது ஐ.பி.எல். முதல் ஆட்டத்தில் வருகிற 2-ந்தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பெங்களூருவில் எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் கடைசி இடத்தை பெற்று விமர்சனத்திற்குள்ளான மும்பை அணி இந்த முறை எழுச்சி பெறும் உத்வேகத்துடன் தயாராகி வருகிறது. இதையொட்டி மும்பை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறுகையில்:-
அணியில் சூர்யகுமார் யாதவ் நன்றாக இருக்கிறார். அவர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவரிடம் பேசினேன். அப்போது அவர் 'நான் பந்தை நன்றாக அடித்து ஆடுகிறேன்' என்று கூறினார். அதற்கு நான், 'பதற்றமின்றி அமைதியாக இருங்கள்' என்று சொன்னேன். ஒரு வீரர் முதல் பந்தை தாண்டவில்லை என்பதற்காக அவர் நல்ல ஆட்டத்திறனுடன் இல்லை என்று சொல்ல முடியாது. துரதிர்ஷ்டவசமாக அவர் 3 ஆட்டங்களிலும் முதல் பந்திலேயே வெளியேறி விட்டார். ஐ.பி.எல்.-ல் அவர் முதல் பந்தை சந்திக்கும் போது, ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டமும் அவரை உற்சாகப்படுத்தும். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று நம்புகிறேன் என்றார்.
சச்சினின் மகனுக்கு வாய்ப்பு: பயிற்சியாளர் பவுச்சர் பதில்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளார். இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அவர் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை. நடப்பு தொடரிலாவது அவர் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாக சாத்தியமுள்ளதா என்று மார்க் பவுச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து பயிற்சியாளர் பவுச்சர் கூறும் போது., காயத்தில் இருந்து அர்ஜூன் மீண்டு வந்து அணியில் இணைந்துள்ளார். எனவே பயிற்சியில் அவரது செயல்பாடுகளை கவனிப்போம். உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 6 மாதங்களாக சிறப்பாக பந்து வீசி வருவதாக நினைக்கிறேன். எனவே முழு உடல்தகுதியுடன் அணித்தேர்வுக்கு தயாராக இருந்தால் அவரது பெயரை பரிசீலிப்போம்' என்றார்.
டோனிக்கு பதில் கேப்டன்சி: ஸ்மித் சொன்ன ருசிகர பதில்
2017 ஐபிஎல் தொடரில்தான் ஸ்டீவ் ஸ்மித் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்தபோது, ஒரு வீரராக டோனியை கேப்டன்சி செய்ய நேரிட்டது. குறிப்பாக அணி உரிமையாளர்கள் தன்னை கேப்டன்சி செய்ய வேண்டும் என்று கேட்ட போது தனக்கு பதற்றம் அதிகரித்தது என்றார் ஸ்டீவ் ஸ்மித். 2017 சீசனில் எம்.எஸ்.டோனிக்குப் பிறகு புனே அணியின் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டார். இதற்கு முந்தைய சீசனில் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 14 ஆட்டங்களில் 5ல் மட்டுமே வெற்றி பெற்று 7ம் இடத்தில் முடிந்தது. பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அந்த சீசனில் ஸ்மித் சதம் அடித்த நிலையில், காயம் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய ஸ்டீவ் ஸ்மித், கேப்டன்சியில் வளமான அனுபவம் பெற்ற எம்.எஸ்.டோனியிடமிருந்து பொறுப்பை ஏற்பது குறித்து ஆர்வமாக இருப்பதாகவும் டோனி தனக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் எவ்வாறு உதவினார் என்பதையும் எடுத்துரைத்தார் ஸ்மித். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஸ்மித் இது தொடர்பாகக் கூறிய போது, “நான் கேப்டனாக வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புவதாகக் கூற எனக்கு அழைப்பு வந்தபோது, கொஞ்சம் கடினமாக இருந்தது, ஆனால் அந்த சீசனில், எம்.எஸ்.டோனி அற்புதமாக இருந்தார். உங்களுக்குத் தெரியும், அவர் தன்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் உதவினார், அவர் ஒரு அரிதான மனிதர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மட்டர் பன்னீர் மசாலா18 hours 1 min ago |
கோபி மஞ்சூரியன்![]() 3 days 17 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 1 week 17 hours ago |
-
திரும்பிய பக்கமெல்லாம் ரத்தம், சடலங்கள்: ஒடிசா ரயில் விபத்து குறித்து உயிர் பிழைத்தவர் வேதனை
03 Jun 2023புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்து குறித்து அந்த விபத்தில் இருந்து தப்பிய நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விபத்து குறித்த வேதனையை பகிர்ந்துள்ளார்.
-
நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடிய உக்ரைன் ராணுவ வீரர்கள்
03 Jun 2023கீவ் : உக்ரைன் ராணுவ வீரர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 03-06-2023
03 Jun 2023 -
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு : மருத்துவத்துறை செயலாளர் பேட்டி
03 Jun 2023சென்னை : ஒடிசா விபத்தில் சிக்கி சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மருத்துவத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள
-
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஒடிசா ரயில் விபத்து: சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் : காயமடைந்தோரை சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தார்
03 Jun 2023பாலசோர் : ஒடிசாவில் ரயில் விபத்து நேரிட்ட பகுதிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
-
ஒடிசா ரயில் விபத்து: உலக தலைவர்கள் இரங்கல்
03 Jun 2023டோக்கியோ : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: மத்திய அமைச்சர் பதவி விலக கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
03 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதவி விலக வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.
-
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து: சிறப்பு ரயில்கள் மூலம் இன்று 383 பேர் சென்னை வருகை
03 Jun 2023சென்னை : ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தை தொடர்ந்து சிறப்பு ரயில்கள் மூலம் 383 பேர் இன்று சென்னை வந்தடைகின்றனர்.
-
ரயில்வே என் குழந்தை போன்றது; ஆலோசனைகளை வழங்கத் தயார் : ஒடிசா ரயில் விபத்து பகுதியில் மம்தா பேட்டி
03 Jun 2023புவனேஸ்வர் : "ரயில்வே என் குழந்தையைப் போன்றது.
-
ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது : ரஷ்ய அதிபர் புடின் இரங்கல்
03 Jun 2023டோக்கியோ : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா ரயில் விபத்து காரணமாக 11 ரயில்கள் ரத்து: ரயில்வே அறிவிப்பு
03 Jun 2023சென்னை : ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து காரணமாக சென்னை, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில்கள் உள்பட 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை அறிவித்துள்
-
ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தது தி.மு.க.
03 Jun 2023புவனேஷ்வர் : ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தி.மு.க. தலைமை கழகம் நேற்று அறிவித்தது.
-
ஒடிஷா ரயில் விபத்து குறித்து அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவு : குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை: பிரதமர் மோடி
03 Jun 2023புவனேஷ்வர் : ஒடிஷா ரயில் விபத்து குறித்து அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படு
-
பலி எண்ணிக்கை 288: ஒடிசா ரயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவு: சீரமைப்பு பணி தொடக்கம்
03 Jun 2023புவனேஸ்வர் : தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து
-
சென்னை வரும் பயணிகளுக்கு உதவ சென்ட்ரல், விமான நிலையத்தில் காவல் துறை சார்பில் ஏற்பாடுகள்
03 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, சென்னை வரும் பயணிகளுக்கு உதவவும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவவும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள்
-
ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் : மத்திய அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்
03 Jun 2023சென்னை : ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
'நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி' - கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
03 Jun 2023சென்னை : நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கருணாநிதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது : பாக். பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இரங்கல்
03 Jun 2023இஸ்லாமாபாத் : ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து பயணித்த 1,257 பேர்
03 Jun 2023புவனேஸ்வர் : விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் 2296 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளதாகவும், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தத
-
ஒடிசாவில் ஒரே கிழமையில், ஒரே நேரத்தில் 2 முறை விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
03 Jun 2023பாலசோர் : ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரே கிழமையில், ஒரே நேரத்தில், 2 முறை விபத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.
-
ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
03 Jun 2023சென்னை : ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வானார் : முதன்மைச்செயலாளராக துரை வைகோ தேர்வு
03 Jun 2023சென்னை : ம.தி.மு.க. பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் வைகோ தேர்வு செய்யப்பட்டார். அக்கட்சியின் முதன்மைச் செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டார்.
-
127 கி.மீ. வேகத்தில் மாற்று தண்டவாளத்தில் சென்றதா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்? - விபத்து குறித்த அதிர்ச்சி தகவல்கள்
03 Jun 2023புவனேஷ்வர் : சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 127 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
-
பால் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ள இடங்களில் கொள்முதல் நிலையங்கள் : அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவு
03 Jun 2023சென்னை : பால் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ள இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று
அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார்.