எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.10 லட்சம் கோடி கொடுத்ததாக பச்சை பொய் சொல்கிறார்கள் என்று மாதவரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.
திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மாதவரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தின் நுழைவு வாயிலான தொண்டை மண்டலத்திற்கு வந்துள்ளேன். தி.மு.க.,வுக்கும் வட சென்னைக்குமான உறவும், தாய்க்கும் சேய்க்குமான உறவு. இது மிக முக்கியமான தேர்தல், இந்தியாவில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல். பா.ஜ.க.வும் பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா? அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? ஆர்.எஸ்.எஸ்-ன் சட்டம் இருக்க வேண்டுமா? இடஒதுக்கீடு வேண்டுமா என்பதை தீர்மானிக்கப்போவது உங்களின் வாக்குதான்.
பிரதமர் மோடி இரவுகளில்தான் சட்டம் கொண்டு வருவார். அப்படி திடீரென ஓர் இரவில்தான் ஊழலை ஒழிக்க வந்த அவதாரப்புருஷனாக டிவியில் தோன்றி பணமதிப்பிழப்பை அறிவித்தார். பொருளாதாரப் புலி மாதிரி ஜி.எஸ்.டி சட்டத்தை கொண்டு வந்து தொழில் முனைவோரையும், நடுத்தர மக்களையும் கொடுமைப்படுத்தினார் மோடி. மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம். திமுக-காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஹீரோ, பா.ஜ.க தேர்தல் அறிக்கையானது மக்களுக்கு வில்லன். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை ஒரு காபி பேஸ்ட் மட்டுமே.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கை, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன்.சானிட்டரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. வரி போட்டதுதான் பா.ஜ.க. அரசு. செய்த சாதனைகள் என சொல்ல பா.ஜ.க.,விடம் எதுவும் இல்லை. சென்னையில் 3-வது ரெயில் முனையம், பழவேற்காடு- கடம்பாக்கம் வரை மேம்பாலம் அமைக்கப்படும். மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம். அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வைத்து மிரட்டி வசூல் செய்யும் வசூல் ராஜாவாக பிரதமர் மோடி உள்ளார். இலங்கை மீனவர்கள் கைதை மோடி கண்டிக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கவில்லை.
மெட்ரோ பணிகள் தாமதமாக நடைபெறுவதற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்காததே காரணம். மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. மற்றவர்கள் உண்ணும் உணவை விமர்சிக்கிறார் பிரதமர் மோடி.உணவு என்பது தனி மனிதரின் விருப்பம். அடுத்தவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்ய முடியாது. தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பு திட்டத்தையாவது பிரதமர் மோடி செய்தாரா? வெள்ள பாதிப்புக்கு கூட மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.10 லட்சம் கோடி கொடுத்ததாக பச்சை பொய் சொல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
12 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்துள்ளது.
-
செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோட்டா தரணிக்கு முதல்வர் வாழ்த்து
12 Nov 2025சென்னை : செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோடா தரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இங்கு திறமையானவர்கள் இல்லை: ஹெச் -1பி நடைமுறையில் பின்வாங்கிய அதிபர் ட்ரம்ப்
12 Nov 2025வாஷிங்டன் : வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவில் திறமையானவர் இல்லை என்றும், அதனால் ஹெச் -1பி விசா
-
கனடா அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
12 Nov 2025ஒண்டாரியா : கனடா அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள்
12 Nov 2025துபாய் : ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலின் புதிய பட்டியலில் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
நிலவில் கால் பதிக்க தயாராகும் சீனா
12 Nov 2025பெய்ஜிங் : 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
-
அசாமில் நிலநடுக்கம்
12 Nov 2025திஸ்பூர் : அசாமில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பூடான் பயணம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
12 Nov 2025புதுடெல்லி : பூடான் மன்னருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது என்று பிரதமர் மோடி சமூக வலைத்தள பதிவில் பதிவிடடுள்ளார்.
-
டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு
12 Nov 2025சென்னை : டிசம்பர் 16-ந் தேதி முதல் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
-
தோட்டா தரணிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
12 Nov 2025சென்னை : செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட கவிஞர் தோட்டா தரணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
எகிப்து: விபத்தில் 2 பேர் பலி
12 Nov 2025கெய்ரோ, எகிப்து: சுற்றுலா பஸ் மீது லாரி மோதி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: ஜிம்பாப்வே உள்ளிட்ட மேலும் 3 அணிகளை சேர்க்கிறது ஐ.சி.சி.
12 Nov 2025துபாய் : துபாயில் சமீபத்தில் நடந்த ஐ.சி.சி.
-
சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்தது
12 Nov 2025பெய்ஜிங் : சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் நிலச்சரிவால் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்
12 Nov 2025புது டெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
-
டிச. 17-ல் சிறை நிரப்பு போராட்டம்: அன்புமணி
12 Nov 2025சென்னை : டிசம்பர் 17-ல் சிறை நிரப்பு போராட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
துருக்கியில் சோகம்: ராணுவ விமானம் மலையில் மோதி விபத்து - 20 பேர் பலி
12 Nov 2025திபிலீசி, ராணுவ விமானம் மலையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர்.
-
த.வெ.க.வுக்கு ‘ஆட்டோ ரிக்ஷா’ சின்னம் கிடைக்குமா?
12 Nov 2025சென்னை : விஜய் கட்சிக்கு ‘ஆட்டோ ரிக்ஷா’ சின்னம் குறித்து தேர்தல் கமிஷனில் த.வெ.க. மனு அளித்துள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி
12 Nov 2025டெல்லி, டெல்லி கார் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதியை டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
-
இஸ்ரோ பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்: ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் சோதனை வெற்றி
12 Nov 2025சென்னை : மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் விமான விபத்து - 2 பேர் பலி
12 Nov 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்த விபத்தில் தந்தை - மகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
சென்னையில் கொள்ளை சம்பவம்: அ.தி.மு.க. கடும் குற்றச்சாட்டு
12 Nov 2025சென்னை : சென்னையில் கொள்ளை சம்பம் தொடர்பாக காவல்துறை முற்றிலுமாக சீரழிந்து உள்ளதாக அ.தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 3 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
12 Nov 2025கரூர், கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் காயம் அடைந்தவர்கள் புதன்கிழமை காலை சி.பி.ஐ. அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
-
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய மாநில அரசுகளுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Nov 2025சென்னை, தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
சிவகங்கை விபத்து சம்பவம்: பொதுமக்கள் சாலை மறியல்
12 Nov 2025திருப்புவனம் : சிவகங்கையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் போலீசார் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
-
தீவிரவாத செயல்களை தடுப்பதில் பா.ஜ.க. அரசு தோல்வி: அமைச்சர் மனோ தங்கராஜ்
12 Nov 2025சென்னை, தீவிரவாத செயல்களை தடுப்பதில் பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.


