எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கவும் சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இந்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் துறை பிறப்பித்த உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாகவும் இந்த உத்தரவு சென்னைக்குள் மட்டும் பொருந்துமா? அல்லது மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்துமா? என்று விளக்கப்படவில்லை.
கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை. வாகனங்களின் முன்பக்கம், பின்பிக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஸ்டிக்கர்களாக ஒட்ட தடை விதிக்க வேண்டும்.பேருந்துகளின் பின்புறம் மற்றும் இருபுறங்களில் வணிக விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுநல மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.
முன்னதாக தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஸ்ரீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணையில், மருத்துவர்கள் விதிமீறலில் ஈடுபடவில்லை.பணி நிமித்தமாக அவசர பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ்-க்கு விலக்கு தரப்பட்டுள்ளது; மருத்துவர்களுக்கு தனியாக விலக்கு தர சட்டத்தில் இடமில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. மேலும் , மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்2 days 16 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை6 days 16 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 2 days ago |
-
தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
31 May 2024சென்னை : தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
வரும் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை
31 May 2024சென்னை : மக்களவைத் தேர்தல் விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின், வரும் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 4 நாட்கள் மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா
-
சீர்காழி நாகநாதசாமி கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்
31 May 2024சீர்காழி : சீர்காழி கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி கோவிலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று சாமி தரிசனம் செய்தார்.
-
கர்நாடக மேல்சபையில் காங். சார்பில் தமிழருக்கு வாய்ப்பு : வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
31 May 2024பெங்களூரு : கர்நாடக மேல்சபையில் காங்கிரஸ் சார்பில் தமிழருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
31 May 2024சென்னை : உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை உதவித்தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா
-
உதகை கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நடந்த படகு போட்டி
31 May 2024உதகை : ஊட்டியில் கோடை விழாவின் ஒரு பகுதியாக நேற்று (வெள்ளிக்கிழமை) படகுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
சென்னையில் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
31 May 2024சென்னை : சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
100 டன் தங்கம்: இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டு வந்த ரிசர்வ் வங்கி
31 May 2024புதுடில்லி : இங்கிலாந்து வங்கியில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.
-
சென்னையில் தாய்ப்பால் விற்கப்பட்ட கடைக்கு சீல் : உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
31 May 2024சென்னை : சென்னையில் தடையை மீறி தாய்ப்பால் விற்பனை செய்த கடையை பூட்டி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
பாலியல் வழக்கில் கைது: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்
31 May 2024பெங்களூரு : பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ம.ஜ.த. எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
-
டெல்லியில் இன்று இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் : முதல்வர் ஸ்டாலினின் பயணம் ரத்து
31 May 2024சென்னை : டெல்லியில் இன்று சனிக்கிழமை நடைபெற உள்ள இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது பயண
-
நீண்ட பயணத்தின் தொடக்கம்: பள்ளிக்கல்வி துறையின் சாதனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
31 May 2024சென்னை : நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் தொடக்கம் தான் இது என பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறைகள், புதிய திட்டங்களின் சாதனைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
சர்வாதிகாரத்திடம் இருந்து நாட்டை காப்பாற்ற சிறைக்கு செல்வேன் : வீடியோ பதிவில் கெஜ்ரிவால் ஆவேசம்
31 May 2024புதுடெல்லி : சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நான் சிறைக்கு செல்கிறேன் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 6-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
31 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
யூடியூபர் இர்பான் பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது : மருத்துவத்துறையினர் தகவல்
31 May 2024சென்னை : யூடியூபர் இர்பான், தனது குழந்தையின் பாலினம் அறிவித்த விவகாரத்தில் அவரின் பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பால் பிரிட்டன் பார்லிமென்ட் கலைப்பு
31 May 2024லண்டன் : பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் ஜூலை 04-ம் தேதி நடைபெறுவதையொட்டி அந்நாட்டு பார்லிமென்ட் கலைக்கப்பட்டதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரம்
31 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
-
பிரஜ்வல் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை : கர்நாடக உள்துறை அமைச்சர் விளக்கம்
31 May 2024புதுடெல்லி : பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
-
துப்பாக்கியால் சுடப்பட்ட சுலோவேகியா பிரதமர் உடல் நலம் தேறினார்
31 May 2024பிராடிஸ்லா : துப்பாக்கியால் சுடப்பட்ட சுலோவேகியா பிரதமர் ராபர்ட் பிகோ நலமுடன் இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராபர்ட் கலினாக் தெரிவித்துள்ளார்.
-
வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க மாநில அரசுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை
31 May 2024ஜெய்ப்பூர் : வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள்: தேர்தல் காலத்தில் பறிமுதல் செய்த வருமான வரித்துறை
31 May 2024புதுடெல்லி : தேர்தல் காலத்தில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
-
வட இந்தியாவில் வெப்ப அலைக்கு இதுவரை 54 பேர் உயிரிழப்பு
31 May 2024புதுடெல்லி : வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலைகளால் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
-
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு மனு தாக்கல்
31 May 2024புதுடெல்லி : டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
-
கலவர வழக்குகளில் இருந்து இம்ரான்கான் விடுதலை
31 May 2024இஸ்லாமாபாத் : கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
-
ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை சஸ்பெண்ட்: பணி ஓய்வுக்கு முந்தைய நாளில் உத்தரவு
31 May 2024சென்னை : என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என அறியப்பட்ட ஏ.டி.எஸ்.பி.யான வெள்ளதுரை நேற்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்து உள்துறைச் செயலாளர் அமுதா உத்த