எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் குறைந்த அளவில் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளனர் என்று மதுரையில் அ.தி.மு.க. மாநில மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா. சரவணன் தெரிவித்தார்.
இது குறித்து அ.தி.மு.க. மாநில மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா. சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகிறது இதில் 55 சகவீதம் அரசு மருத்துவமனைகளும், 45 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடைபெறுகிறது.
குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் தற்பொழுது 19,000 மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர் இதில் ஆயிரம் பேர் தான் மகப்பேறு மருத்துவர் உள்ளதாக கூறப்படுகிறது.இதன் மூலம் மகப்பேறு மருத்துவர்களுக்கு கூடுதலாக 3 முதல் 4 விழக்காடு பணிச்சுமை ஏற்படுகிறது.ஆனால் தனியார் மருத்துவமனைகளில் 10,000 பேர் அளவில் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளனர்.
பொதுவாக தமிழகத்தில 2000 மகப்பேறு மருத்துவர்கள் மருத்துவமனைகளில் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் அப்படி இருந்தால் தான் அரசு மருத்துவமனைகளில் மீது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்.ஏற்கனவே செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டதால் மன்னார்குடியில் உள்ள மருத்துவமனையில் தூய்மை பணியாளரே நோயாளிக்கு ட்ரிப் போட்டது அனைவருக்கும் தெரியும்.இன்றைக்கு தமிழகத்தில் பிரசவங்களில் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சு. கூறுகிறார்,
கடந்த 10 ஆண்டுகளில் புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் சுகாதாரத் துறையை சிறப்பாக செயல்படுத்திய காரணமாகத்தான் இந்த நிலையை எட்ட முடிந்தது. குறிப்பாக கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மருத்துவத்துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது, 11 அரசு மருத்துவக் கல்லூரியை திறந்து அதன் மூலம் 1450 கூடுதலாக மருத்துவ இடங்களை தமிழகத்தில் கிடைக்க செய்தார். தமிழகத்தில் அதிக அளவில் மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டிய பெருமை எடப்பாடியாரை சாரும்.
அதனை தொடர்ந்து 2019 ஒரு ஆய்வில் வெளியிட்ட தகவல்படி தமிழகத்தில் 253 நபர்களுக்கு ஒரு மருத்துவரும், இதேடெல்லி எடுத்துக் கொண்டால் 334 மக்களுக்கு ஒரு மருத்துவர், கர்நாடகாவை எடுத்துக் கொண்டால் 507 நபர்களுக்குஒரு மருத்துவர்,கேரளாவை எடுத்துக் கொண்டால் 535 நபர்களுக்கு ஒரு மருத்துவர், கோவா எடுத்துக் கொண்டால் 713 நபர்களுக்கு ஒரு மருத்துவர்,பஞ்சாபை எடுத்துக் கொண்டால் 787 நபர்களுக்கு ஒரு மருத்துவர், பீகாரை எடுத்துக் கொண்டால் 3,207 நபர்களுக்கு ஒரு மருத்துவர், உ.பியை எடுத்துக் கொண்டால் 3,767 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருந்தது. 2000 அம்மா மினி கிளினிக் மூலம் ஆண்டுதோறும் 25 லட்சம் மக்களை பயனடைய செய்தார் எடப்பாடியார் மத்திய அரசிடம் போராடி பெற்று தந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கூட தற்போது மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளது இதையெல்லாம் எதையும் செய்யாமல், எடப்பாடியார் செய்த திட்டங்களை, சாதனைகளை பின்பற்றி தங்கள் சாதனை போல சொல்லி வருகின்றனர்.
இனியாவது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் துணை மருத்துவமனைகள், வட்டார அளவில் உள்ள மருத்துவமனைகள், மாநகராட்சி பகுதியில் உள்ள மருத்துவமனைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு காலியாக உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணிஉதவியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.