எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வேலூர் : வேலூர் மத்திய சிறைக் கைதியை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்திய விவகாரத்தில் வேலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி மற்றும் மத்திய சிறை ஜெயிலர், போலீசார் மற்றும் கைதிகளிடம் சிபிசிஐடி போலீஸார் நேரில் விசாரணை நடத்தினர்.
வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதியான கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டையைச் சேர்ந்த சிவக்குமாரை சிறைத் துறை டிஐஜியின் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி, தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து சென்னை சிபிசிஐடி போலீஸார் வேலூர் மத்திய சிறையில் விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார்(30) என்பவர் கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில், வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமியின் வீட்டில், வீட்டு வேலைகளை செய்ய சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது ரூ.4.50 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கைதி சிவக்குமார் திருடியதாக குற்றச்சாட்டை முன்வைத்து சிறைத்துறை வார்டன்கள் கண்மூடித்தனமாக தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனது மகன் சிறைத்துறை டிஐஜி வீட்டில் திருடியதாக சிறையில் தனி அறையில் அடைத்து வைத்து வார்டன்கள் சித்ரவதை செய்வதாகவும், எனது மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி வியாழக்கிழமை இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வு, ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது தொடர்பாக வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் சிறைத்துறை கண்காணிப்பாளர் ரகுமான், சிறைத் துறை ஜெயிலர் உள்பட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது சிபிசிஐடி போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டனர்.
அதுமட்டுமின்றி சிவக்குமாரை உடனடியாக சேலம் மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும். சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து, நடவடிக்கை தொடர்பாக சிபிசிஐடி அறிக்கையை அரசிடம் வருகிற 17-தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை போலீஸ் காவலுடன் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது குறித்து சிறையில் சென்று நேரடி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சிறைக்குள் சென்ற நிலையில் விசாரணை நடத்தினர். அங்கே சிறை கைதிகளிடமும் மற்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிறை வார்டன்களிடமும், போலீசாரிடமும் சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இது சம்பந்தமாக நேற்று முன்தினம் சேலம் மத்திய சிறையில் கைதி சிவக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 days ago |
-
நவம்பரில் பூமி மீது வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு? விஞ்ஞானிகள் தகவலால் அதிர்ச்சி
30 Jul 2025நியூயார்க், பூமி மீது நவம்பரில் வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
எங்கெங்கெல்லாம் நடக்கிறது உங்களுடன் ஸ்டாலின் முகாம்? இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
30 Jul 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த தகவல்களை இனிவரும் காலங்களில் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-07-2025.
30 Jul 2025 -
கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட ஜே.பி.நட்டா
30 Jul 2025புதுடெல்லி, கார்கேவிடம் ஜே.பி. நட்டா மன்னிப்பு கேட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-07-2025.
30 Jul 2025 -
கூட்டணி குறித்து இன்று அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
30 Jul 2025மதுரை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக இன்று பதிலளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
30 Jul 2025மேட்டூர் : காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததை அடுத்து புதன்கிழமை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியது.
-
ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை: 9 லட்சம் பேர் வெளியேற்றம்
30 Jul 2025டோக்கியோ : ரஷ்யாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
-
நெல்லையில் இளைஞர் கொலை: குண்டர் சட்டத்தில் சுர்ஜித் கைது
30 Jul 2025தூத்துக்குடி, தூததுககுடி கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
முதலிடத்தை இழந்தார் மந்தனா
30 Jul 2025மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
-
சூதாட்ட செயலி வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜர்
30 Jul 2025ஐதரபாத், சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக அமலாக்கதத்துறை விசாரணைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜரானார்.
-
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2 முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
30 Jul 2025சென்னை : தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆகஸ்ட் 2-ல் தவணைத்தொகை விடுவிப்பு
30 Jul 2025டெல்லி : விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் தவணைத்தொகை விடுவிப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
10 நாட்களுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகம் வருகை : பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்
30 Jul 2025சென்னை : முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகம் வருகிறார். பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
30 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,680-க்கு விற்பனையானது.
-
'மை டிவிகே' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை செயலி: த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டார்
30 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் சேர்க்கை செயலியை விஜய் வெளியிட்டார்.
-
கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
30 Jul 2025சிவகங்கை : கீழடி தொடர்பாக மாநில அரசு கேட்பவைக்கு நாங்கள் துணை நிற்போம் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்ற
-
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? இ.பி.எஸ்.க்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி
30 Jul 2025சென்னை, மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.
-
'நிசார்' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
30 Jul 2025சென்னை : பூமியின் மேற்பரப்பை கண்காணிக்கும் இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான ‘நிசார்' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.
-
லாலு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
30 Jul 2025புதுடெல்லி, ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான விசாரணையை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
-
கடைசி டெஸ்ட் ஓவலில் இன்று தொடக்கம்: இந்திய அணியில் ஆகாஷ் தீப்
30 Jul 2025லண்டன் : இந்தியா தொடரைச் சமன் செய்வதற்கும் இங்கிலாந்து தொடரை 3-1 என்று கைப்பற்றுவதற்குமான 5வது டெஸ்ட் போட்டி இன்று ஓவலில் தொடங்குகிறது.
-
புகையிலை பயன்படுத்தினால் அபராதம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை
30 Jul 2025சென்னை, மெட்ரோ ரயிலில் மெல்லக்கூடிய புகையிலை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ஆடிப்பெருக்கு, வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 1,090 சிறப்பு பஸ்கள் இயக்கம்
30 Jul 2025சென்னை : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,090 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
-
நெல்லை ஆணவக்கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழ்நாடுஅரசு உத்தரவு
30 Jul 2025தூத்துக்குடி : விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய நெல்லை ஆணவக்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
1967,1977-ம் ஆண்டில் நடந்தது போல் தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் மாற்றம் வரும் - விஜய் பேச்சு
30 Jul 2025சென்னை : மை டிவிகே செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார் விஜய்.