எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதுரை கள்ளழகர், இராமேசுவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களில் ரூ.217.98 கோடி மதிப்பீட்டிலான 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.21.50 கோடி செலவிலான 33 முடிவுற்ற பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காணொலிக் காட்சி...
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது., தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.6.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 217 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 திருக்கோவில்களில் 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, 21 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் அலுவலகம், 15 ஆய்வர் அலுவலகங்கள் மற்றும் 16 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
வசதிகளை மேம்படுத்துதல்....
இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
திருவள்ளூர், திருச்சி...
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பெருந்திட்டப் பணிகளின் கீழ் 86.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம், மலர்மாலை, பூஜை பொருட்கள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் விற்பனை நிலையம், சுதைவேலைபாடுகளுடன் கூடிய நுழைவு வாயில், அடிப்படை வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம், ஒன்பது நிலை இராஜகோபுரத்தினையும், தேர்வீதியினையும் சுதைவேலைபாடுகளுடன் கூடிய இணைப்புபடி கட்டும் பணிகள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், குமாரவயலூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 30.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்டப் பணிகளின் கீழ் சமுதாயக் கூடங்கள், ஒரு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி, நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள் மற்றும் குளியலறைகள், முடிகாணிக்கை மண்டபம், திருமண மண்டபம், அன்னதானக் கூடம், செயல் அலுவலர் குடியிருப்பு, திருக்குளம் சீரமைத்தல், வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள்; திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 14.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைமை அலுவலக வளாகத்தில் கூடுதல் நிர்வாக கட்டிடம் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மதுரை, இராமேசுவரம்...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் 12.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு நிலை இராஜகோபுரம், ஐந்து நிலை இராஜகோபுரங்கள் கட்டுதல் மற்றும் மூன்றாம் பிரகாரத்தில் மேற்கு பகுதியில் உபசன்னதிகள் அமைக்கும் பணிகள்; விழுப்புரம் மாவட்டம், சிங்கவரம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி: இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் 6.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பவித்ரபுஷ்கரணி மற்றும் பொய்கை கரைப்பட்டி தெப்பக்குள படிக்கட்டுகள் அமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திருவண்ணாமலை...
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம், அருள்மிகு பயறனீஸ்வரர் திருக்கோயிலில் 4.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளம் மேம்படுத்தும் பணி; கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், அருள்மிகு வனபத்திரகாளியம்மன் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; கடலூர் மாவட்டம், மருதூர், திரு அருட்பிரகாச வள்ளலார் அவதரித்த இல்லம் 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீண்டும் கட்டும் பணி; சென்னை, பாடி, அருள்மிகு திருவல்லீசுவரர் திருக்கோயிலில் 3.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; திருவண்ணாமலை மாவட்டம், ஆவணியாபுரம், அருள்மிகு லெட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் 3.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம், அன்னதானக் கூடம் மற்றும் செயல் அலுவலர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணிகள்; கிருஷ்ணகிரி மாவட்டம், கண்ணம்பள்ளி, அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் 2.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராஜகோபுரம் புதுப்பித்தல் மற்றும் முன் மண்டபம் கட்டும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னிமலை, ஸ்ரீவில்லி...
தென்காசி மாவட்டம், பண்பொழி, அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் 2.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி; கடலூர் மாவட்டம், திருநாரையூர், அருள்மிகு சுயம்பிரகார ஈஸ்வரர் திருக்கோயிலில் 2.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளம் மேம்படுத்தும் பணி; கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு, தேவசம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டும் பணி; ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 2.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயிலுடன் இணைக்கப்பட்ட அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயிலில் 2.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளம் மேம்படுத்தும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
புதிய அன்னதானக் கூடம்...
திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான பூம்பாறை, அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயிலில் 1.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக மூன்று நிலை இராஜகோபுரம் கட்டும் பணி; நாமக்கல் மாவட்டம், மோகனூர், அருள்மிகு காந்தமலை பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 1.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் மற்றும் விருந்து மண்டபம் கட்டும் பணிகள்; நாமக்கல், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் 1.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அலுவலர் குடியிருப்பு மற்றும் கண்காணிப்பாளர் குடியிருப்பு கட்டும் பணி; தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர், அருள்மிகு பால்வண்ணநாதசுவாமி திருக்கோயிலில் 1.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் கட்டும் பணி மற்றும் பல்நோக்கு கட்டடம் கட்டும் பணி; திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயிலில் 1.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அன்னதானக் கூடம் கட்டும் பணி; நாகப்பட்டினம் மாவட்டம், பொய்கைநல்லூர், அருள்மிகு சொர்ணபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் 1.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரவை காய்கறி சந்தை கட்டடம் கட்டும் பணி என மொத்தம் 217.98 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை முதல்வர் மு. க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 21.50 கோடி ரூபாய் செலவிலான 33 முடிவுற்ற பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
சேலத்தில் அன்புமணி தலைமையில் இன்று கட்சி கூட்டம்: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி : எம்.எல்.ஏ. அருளும் சிகிச்சைக்காக அனுமதி
18 Jun 2025சென்னை : அன்புமணி தலைமையில் சேலத்தில் இன்று கட்சிக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், பா.ம.க., முக்கிய தலைவர்கள் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-06-2025.
18 Jun 2025 -
கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Jun 2025சென்னை : கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது
-
அதர்வா நடிக்கும் டி என் ஏ.
18 Jun 2025ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் டி என் ஏ' ( DNA) இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு வி
-
நன்றி அறிவிப்பு சொன்ன மெட்ராஸ் மேட்னி படக்குழு
18 Jun 2025குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ வரிசையில் மிகச்சாதாரணமான மனிதர்களையும் குடும்ப அமைப்பின் வலிமையையும் வெளிக்காட்டுகிற இன்னொரு வெற்றிப்படமாக மாறியிருக்கிறது ‘மெட்ராஸ் மே
-
சிறிய நாடுகளுக்கான டெஸ்ட் போட்டி 4 நாட்களாக குறைப்பு : ஐ.சி.சி. தலைவா் ஜெய்ஷா ஆதரவு
18 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளை நடத்த செலவு அதிகமாவதாக டெஸ்டை நடத்தும் சிறிய நாடுகள் தயக்கம் காட்டும் நிலையில், சிறிய நாடுகளுக்கான டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி
-
படப்பிடிப்பை தொடங்கி வைத்த புதுச்சேரி முதலமைச்சர்
18 Jun 2025விதா ஸ்டுடியோ P.R விஜய் தயாரிக்கும் படம் பிட்பாக்கெட் இப்படத்தில் P. R.
-
தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வி.சி.க. வெளியேறும்: திருமாவளவன்
18 Jun 2025சென்னை : தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.
-
கிருஷ்ணகிரியில் 'மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க. சார்பாக நாளை உண்ணாவிரத போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jun 2025சென்னை, 'மா' சாகுபடி விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கு முன்வராத திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகங்களின் சார்பில், வரும் வெள்ளி
-
‘சமரசத்துக்கு வாய்ப்பில்லை - போர் தொடங்கியது’ : அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் உச்சத் தலைவர் கமேனி எச்சரிக்கை
18 Jun 2025தெஹ்ரான் : ஈரான் - இஸ்ரேல் போர் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், “போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட முடியாது.
-
ஆக்சியம் 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு: மேலும் தள்ளிப்போன சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்
18 Jun 2025புதுடெல்லி : ஆக்சியம் 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பால் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் பயணம் மேலும் தள்ளிப்போகியுள்ளது.
-
நாசா- இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை ஜூலை 14-ல் ஏவ திட்டம்
18 Jun 2025பெங்களூர் : நாசா- இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை அடுத்த மாதம் 14-ம் தேதி ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள்: 'டாப் 10'-ல் ஆஸ்திரேலியாயை சேர்ந்த 3 நகரங்கள்
18 Jun 2025புதுடில்லி : 2025ம் ஆண்டில், உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல் இடத்தை டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் பிடித்துள்ளது.
-
உமாபதி தயாரிக்கும் ஹும் திரைப்படம்
18 Jun 2025ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ்.
-
ஜூலை 4 ல் வெளியாகும் பறந்து போ
18 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கியிருக்கும் படம் பறந்து போ.
-
சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து
18 Jun 2025சென்னை : சிங்கப்பூர் செல்ல இருந்த 2 ஏர் இந்தியா விமானங்கள் சென்னையில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
-
மாணவி ஞானதர்ஷினியின் கனவு நிச்சயம் நிறைவேறும் : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
18 Jun 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த புதுக்கோட்டை மாணவி ஞானதர்ஷினியின் கனவு நிச்சயம் நிறைவேறும் என்று அமைச்சர் உறுதி அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ள
-
கனடா பயணத்தை நிறைவு செய்து குரோஷியா சென்றார் பிரதமர் மோடி
18 Jun 2025ஒட்டாவா : கனடா பயணத்தை நிறைவு செய்து குரோஷியா சென்றார் பிரதமர் மோடி. அங்கு ஜனாதிபதி சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பென்கொவிக்கை சந்திக்கிறார்.
-
மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை
18 Jun 2025சென்னை : சென்னையில் நேற்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,000-க்கு விற்பனையானது.
-
அரசுக்கு அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
18 Jun 2025சென்னை, அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா
18 Jun 2025தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
டாஸ்மாக் கடைகள் மீது மக்கள் புகார் தந்தால் 30 நாட்களில் நடவடிக்கை: தமிழக அரசு உத்தரவு
18 Jun 2025சென்னை : டாஸ்மாக் கடைகள் மீது மக்கள் புகார் தந்தால் 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நான்கு துறைகளின் ஆய்வுக்கூட்டம் : துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு
18 Jun 2025சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை உள்ளிட்ட 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
-
இந்தியா, கனடா உறவுகள் முக்கியமானவை: பிரதமர்
18 Jun 2025ஒட்டாவா : இந்தியா, கனடா உறவுகள் மிக முக்கியமானவை. ஜனநாயகத்தை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கிரிக்கெட்டைதான் அதிகம் நேசிக்கிறேன்: டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்காதது ஏன்? - பும்ரா விளக்கம்
18 Jun 2025மும்பை : இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை தான் நான் அதிகம் நேசிக்கிறேன்