முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரகுமான் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM-1-2025-08-21

சென்னை, ரகுமான்கானின் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் எழுதிய 5 நூல்களை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரகுமான் கானின் பேச்சுக்கும் எழுத்துக்கும் நான் ரசிகன்.

தொகுதி மக்கள் மத்தியில் ரகுமான் கானுக்கு மிகுந்த அன்பு உள்ளது. ஒரு திறமைசாலியை கண்டு கொண்டால் அவர்களை அரவணைக்கும் பழக்கம் கலைஞரிடம் இருந்தது. கலைஞரின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ரகுமான் கான். ரகுமான் கானை அ.தி.மு.க.வுக்கு வரச்சொல்லி எம்.ஜி.ஆர். அழைத்தபோதும் அவர் செல்லவில்லை.

ரகுமான் கான் மீது வெடிகுண்டு வீசப்பட்ட போதிலும் அவர் அஞ்சவில்லை. மாநாடுகளில் ரகுமான் கான் பேச எழுந்தாலே கூட்டம் ஆர்ப்பரித்து விடும். என்னுடைய உடல்நிலை குறித்து அக்கறையுடன் நலம் விசாரித்தார் ரகுமான் கான். இன்றைக்கும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ரகுமான் கான். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து