எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை: த.வெ.க. கூட்டத்தில் விஜய் இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் என்று பேசினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணி ஆற்றுகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு நேற்று மதுரையில் பிரமாண்டமாக நடந்தது. இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
மாநாட்டு மேடையின் உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் காரில் புறப்பட்ட த.வெ.க. தலைவர் விஜய், இரவு 7 மணியளவில் மதுரை வந்தடைந்தார்.
முன்னதாக மாநாட்டு திடல் அருகே 100 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவுவதற்கான பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றபோது, எதிர்பாராதவிதமாக கிரேனின் பெல்ட் அறுந்து, கொடிக்கம்பம் அப்படியே திடலில் இருந்த ஒரு கார் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொடர்ந்து மாநாட்டு மேடையின் அருகே தற்காலிகமாக புதிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதலே மாநாட்டு திடலுக்கு த.வெ.க. தொண்டர்கள் வருகை தர ஆரம்பித்தனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட நிலையில், மாநாட்டின் நிகழ்வுகள் முன்கூட்டியே தொடங்கின. மாநாட்டு மேடைக்கு விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் ஷோபா, த.வெ.க. மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். மாநாட்டின் தொடக்கத்தில் நாட்டுப்புற இசையுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த 300 அடி நீள ரேம்ப் மீது நடந்து சென்று தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து 40 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை விஜய் ஏற்றினார். இதையடுத்து த.வெ.க. நிர்வாகிகள் அருண்ராஜ், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-
சிங்கம் எப்போதும் தனித்துவமானாது. ஒரு சிங்கம் கர்ஜனை செய்தால் அந்த சத்தத்தில் 8 கி.மீ. வரை அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கும் மட்டும்தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. அதிலும் கூட தன்னை விட பெரிய விலங்குகளை தான் குறிவைத்து தாக்கும், ஜெயிக்கும். எவ்வளவு பசியில் இருந்தாலும் உயிர் இல்லாததை, கெட்டுப் போனதை தொட்டுக் கூட பார்க்காது.
அப்படிப்பட்ட சிங்கம் அவ்வளவு சுலபமாக எதையும் தொடாது, தொட்டால் விடாது. காட்டின் நான்கு பக்கமும் தனது எல்லையை தானே வகுக்கும். காட்டையே தனது கட்டுப்பாடில் வைத்திருக்கும். சிங்கத்திற்கு கூட்டமாக இருக்கவும் தெரியும், தனியாக இருக்கவும் தெரியும். தனியாக வந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் அனைவருக்கும் தண்ணி காட்டும். எப்போதும் தனது தனித்தன்மையை இழக்காது. சிங்கத்தைப் பற்றி பேசிவிட்டு நமது சிங்கக் குட்டிகளையும், சிங்கப் பெண்களையும் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், அம்மாக்கள், அக்கா, தங்கைகள், நண்பர்கள் அனைவருக்கும் எனது உயிர் வணக்கம்.
இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும். யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. நமது கொள்கையில் சமரசம் இல்லை. நமது கொள்கை எதிரி பா.ஜ.க., அரசியல் எதிரி தி.மு.க. சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர். அவருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர்தான்.
நாம் அனைவரும் இந்தியாவின் மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மகத்தான மக்கள் படை. பா.ஜ.க.வுடன் மறைமுக கூட்டணிக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் உறுதியாக பங்களிப்பு தரப்படும். 2026-ல் இரண்டு பேருக்கு இடையில்தான் போட்டியே, ஒன்று தி.மு.க. மற்றொன்று த.வெ.க. 1967, 1977-ல் நடந்தது போல் 2026-ல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்கும்.
பா.ஜ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் எதிராக மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா? பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்யவா? அல்லது இஸ்லாமிய நண்பர்களுக்கு எதிராக சதி செய்யவா? மக்களுக்கு உங்களிடம் கேட்க ஏராளமான கேள்விகள் உள்ளன. நமது தமிழ்நாட்டு மீனவர்கள் சுமார் 800 பேர் தாக்கி அழிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுக் கொடுங்கள். நீட் தேர்வால் இங்கு என்னென்ன நடக்கிறது என்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அந்த தேர்வு தேவையில்லை என்று அறிவித்து விடுங்கள்.
த.வெ.க.வினர் இடையே எந்த அரசியலும் நுழைய முடியாது. என்னை சகோதரனாக நினைக்கும் அனைத்து தாய்மார்களின் குழந்தைக்கும் நான் தாய் மாமன் தான். தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர் என நினைத்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும். மற்றவர்கள் கட்சி ஆரம்பித்த பிறகுதான் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் போவார்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரின் விட்டுக்குள்ளும் போன பிறகுதான் கட்சியே ஆரம்பித்திருக்கிறோம். உங்கள் வீட்டில் ஒருவர் வேட்பாளராக இருப்பார், அவரும் நானும் வேறு இல்லை.
நான் சினிமாவில் மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு வரவில்லை. நான் வந்ததற்கு ஒரே காரணம் நன்றிக்கடன். என் கடன் இனி என் மக்களுக்கு பணி செய்து கிடப்பதே. தமிழக மக்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். உங்களுக்காக பேச, உங்களுடன் நிற்க, உங்களுக்கு சேவை செய்ய உங்கள் விஜய் நான் வரேன். உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்திருக்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 11 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-08-2025.
21 Aug 2025 -
இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள்: பிரதமர் மோடி
21 Aug 2025டெல்லி, இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னையில் 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
21 Aug 2025சென்னை, சென்னையில் இன்று 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்படுகிறது.
-
ரகுமான் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Aug 2025சென்னை, ரகுமான்கானின் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்
21 Aug 2025புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
-
பிரதமர், மாநில முதல்வர்களின் பதவியை பறிக்கும் மத்திய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
21 Aug 2025சென்னை, பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வழக்கில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை நீக்கம் செய்வதற்கான சட்டமசோதா நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் த
-
ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல்
21 Aug 2025புதுடெல்லி, ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஆக. 26-ம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்
21 Aug 2025சென்னை, 26-ம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு: மத்திய அரசு
21 Aug 2025புதுடெல்லி, அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதம்
-
அமெரிக்காவின் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
21 Aug 2025அமெரிக்கா: அமெரிக்காவின் எப்.பி.ஐ.-ஆல் தேடப்பட்டு வரும் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைப்பு
21 Aug 2025தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்
21 Aug 2025வாஷிங்டன்: உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
-
யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிப்பு
21 Aug 2025வாஷிங்டன்: யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிக்கப்பட்டது.
-
வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தல்
21 Aug 2025மாஸ்கோ: வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தப்பட்டது.
-
த.வெ.க. மாநாட்டில் தொண்டர்களிடம் விஜய் சொன்ன குட்டி கதை
21 Aug 2025மதுரை: த.வெ.க.மாநாட்டில் விஜய் தனது வழக்கமான பாணியில் குட்டிக் கதை ஒன்றை கூறினார். விஜய் சொல்லிய குட்டிக்கதை வருமாறு: "ஒரு குட்டிக்கதை சொல்றேன்.
-
இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் த.வெ.க. கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சு
21 Aug 2025மதுரை: த.வெ.க. கூட்டத்தில் விஜய் இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் என்று பேசினார்.
-
வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலை திரும்பும் மும்பை
21 Aug 2025மும்பை: வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு மும்பை திரும்பி கொண்டு இருக்கிறது.
-
ராகுல் வாகன ஓட்டுநருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு
21 Aug 2025நவாடா: கான்ஸ்டபிள் மீது வாகனம் மோதிய விவகாரம்; ராகுல் காந்தியின் வாகன ஓட்டுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
தேசிய சீனியர் தடகள போட்டி: தமிழக அணிக்கு 7 பதக்கம்
21 Aug 2025சென்னை: தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணிக்கு 7 பதக்கம் வழங்கப்பட்டது.
-
ஐதராபாத்-சென்னை புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆய்வு
21 Aug 2025திருப்பதி: ஐதராபாத்-சென்னைக்கு புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆய்வு நடத்தப்படுகிறது.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலை தள்ளுபடி செய்து ரஷ்ய அறிவிப்பு
21 Aug 2025மாஸ்கோ: அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்க
-
ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர் ராணுவ உடை: பெற்றோர் அதிர்ச்சி
21 Aug 2025கடலூர்: ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர் ராணுவ உடையில் இருப்பதை புகைப்படத்தில் கண்ட பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு
21 Aug 2025டெல்லி: அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
-
ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி
21 Aug 2025நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி கூறினார்.
-
மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
21 Aug 2025நெல்லை: மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நயினார் நாகேந்திரன் பேச்சு