முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்காரில் 7 நக்சல்கள் சரண்

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      இந்தியா
Nakselit

ராய்ப்பூர், சத்தீஷ்காரில் நக்சல்கள் பாதுகாப்பு படையினரி டம் ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தனர்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சல் பயங்கரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் நக்சல்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நக்சல் அமைப்பை சேர்ந்த பலர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சத்தீஷ்காரில் உள்ள கரியாபந்த் பகுதியில் 7 நக்சல்கள், தங்களது ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தனர். இவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 37 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பாதுகாப்பு படையினர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர்கள் 7 பேரும் சரணடைந்துள்ளனர். அவர்களின் மறுவாழ்க்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்தியாவில் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள், நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து