எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவ- மாணவிகளின் ஆப்சென்ட்' எண்ணிக்கையை குறைக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும். உயர்கல்விக்கு செல்வதற்கான நுழைவுக்கதவு பிளஸ்-2 பொதுத் தேர்வு என்பதால், மாணவ-மாணவிகள் அதிக கவனமுடன் இந்த தேர்வை எதிர்கொள்வார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், பிளஸ்-2 பொதுத் தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி வருகிறார்கள். இது சில ஆண்டுகளில் அதிகரிக்கவும், குறையவும் செய்யும்.
அவ்வாறு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளில் சிலர் இந்த தேர்வை எழுத வராமல் 'ஆப்சென்ட்' ஆகும் விவகாரம் பள்ளிக் கல்வித்துறைக்கு தொடர்ந்து தலைவலியை கொடுத்து வருகிறது. கடந்த 2022-23-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் மொழிப் பாடத் தேர்வை அதாவது தமிழ்த் தேர்வை 50,674 பேர் எழுதாதது பேரதிர்ச்சியை கொடுத்தது.
கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு பிறகு, ஓரளவுக்கு சகஜ நிலைக்கு திரும்பியதும் நடந்த இந்த தேர்வில், இவ்வளவு பேர் ‘ஆப்சென்ட்' ஆனது ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், இதுவரை இல்லாத எண்ணிக்கை பள்ளிக்கல்வித் துறையையே மிரளச் செய்தது.
இதற்கு பல குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. அரசின் நலத்திட்டங்களை வழங்குவதற்காக கணக்கு காட்ட கல்வித்துறை இந்த புள்ளி விவரங்களை பராமரித்ததாகவும் பேசப்பட்டது. ஆனால் அந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக யாரையும் பள்ளியில் இருந்து நீக்காமல், ஒரு நாள் பள்ளிக்கு வந்திருந்தாலும் அவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டதன் விளைவுதான் இவ்வளவு ஆப்சென்ட்டுக்கு காரணம் எனவும் கல்வித்துறை தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக 2023-24-ம் ஆண்டில் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த ஆண்டில் மொழிப் பாடத்தில் 12,364 பேரும், ஆங்கில பாடத்தில் 12,696 பேரும் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல், கடந்த கல்வியாண்டில் (2024-25) 8 லட்சத்து 2 ஆயிரத்து 567 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் மொழிப் பாடத்தை 11,430 பேர் எழுதவில்லை.
இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்துக்கு குறையாமல் மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வில் ஆப்சென்ட் ஆகும் நிகழ்வு தொடர் கதையாகி வருவது மறுக்க முடியாத புள்ளி விவரங்களாகிவிட்டது. இந்த நிலையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2026) மார்ச் 2-ந்தேதி தொடங்க உள்ளது. 8 லட்சத்து 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். அதற்கான தேர்வு அட்டவணையை சமீபத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த நிலையில் நடப்பாண்டில் பொதுத்தேர்வில் 'ஆப்சென்ட்' எண்ணிக்கை இல்லாத வகையில் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
அதன்படி, முறையாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஹால் டிக்கெட் வெளியிடுவது, மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு குறித்த அச்சத்தை தவிர்க்க ஆசிரியர்கள், ஆலோசகர்களை கொண்டு அறிவுரைகள் வழங்கி அனைவரையும் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள செய்வது, தேர்ச்சி பெற முடியாதோ என நினைக்கக் கூடிய மாணவ-மாணவிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை கையில் எடுத்திருக்கிறது. இது நிச்சயம் வரும் தேர்வில் பிரதிபலிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை
08 Nov 2025ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
-
தொகுதிவாரியாக நேர்காணல்: கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
08 Nov 2025கிருஷ்ணகிரி : ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என கிருஷ்ணகிரி தி.மு.க.
-
59-வது பிறந்தநாள்: சீமானுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Nov 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் காயம்: வரும் 14-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவாரா ரிஷப் பண்ட்?
08 Nov 2025பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் காயமட
-
தருமபுரியில் இன்று பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப்பயண நிறைவு விழா
08 Nov 2025தருமபுரி : தருமபுரியில் பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா இன்று நடக்கிறது.
-
சாதி, மத மோதலை உருவாக்குகிறது: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
08 Nov 2025சசராம் : மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.
-
ஆந்திரா-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
08 Nov 2025சேலம் : ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்ததால் சர்ச்சை
08 Nov 2025பாட்னா : பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-11-2025.
08 Nov 2025 -
செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்த புதிய வசதி
08 Nov 2025டெல்லி : செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டை திருத்த புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
-
உல்லாசத்திற்கு இடையூறு; கணவரை கொன்ற மனைவி
08 Nov 2025மீரட் : உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவி கழுத்தை நெரித்து கொன்ற மனைவியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் தாக்குதலில் பெண் உயிரிழப்பு
08 Nov 2025இட்டாநகர் : பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழந்தார்.
-
சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
08 Nov 2025சென்னை : சீமானின் கொள்கையில் பிடிவாதம் வியத்தலுக்குரியவை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்பு : ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Nov 2025துபாய் : 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ளதாக ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
08 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
கால்மேகி புயலால் கடும் பாதிப்பு: பிலிப்பைன்ஸில் பலி 188 ஆனது
08 Nov 2025மணிலா : பிலிப்பைன்ஸில் கால்மேகி புயல் ஏற்பட்டது இதில் 188 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
08 Nov 2025டெல்லி : அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா ஜனாதிபதி திரெளபதி முர்மு புறப்பட்டு சென்றார்.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் விபரீதம்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் திடீர் தற்கொலை
08 Nov 2025லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது : இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு
08 Nov 2025புதுடெல்லி : பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத நடவடிக்கை குறித்து இந்தியா குற்றச்சாட்டியுள்ளது.
-
கடைசி டி-20 போட்டி மழையால் ரத்து: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
08 Nov 2025பிரிஸ்பேன் : கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது த.வெ.க.
08 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை த.வெ.க. ஒப்படைத்தது.
-
ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு
08 Nov 2025வாஷிங்டன், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து ஹங்கேரிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விலக்கு அளித்துள்ளார்.
-
98-வது பிறந்தநாளை முன்னிட்டு அத்வானிக்கு பிரதமர் வாழ்த்து
08 Nov 2025டெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் 98-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
-
இதய நோய், புற்றுநோய் இருந்தால் விசா ரத்து - அமெரிக்க அரசு முடிவு
08 Nov 2025வாஷிங்டேன் : இதய நோய், புற்றுநோய் இருந்தால் வெளிநாட்டினருக்கான விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
-
மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டி: நேரலையில் 18.5 கோடி பேர் கண்டுகளித்து புதிய சாதனை
08 Nov 2025மும்பை : இந்தியாவில் மகளிர் உலககோப்பை போட்டியில் அதிக அளவிலான பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


