எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்கிற வாய்ப்பு உள்ளது நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆற்றிய உரை:-
அவைத் தலைவருக்கு வணக்கம். எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் இதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.
எஸ்.ஐ.ஆர். தேர்தல் காலம் அல்லாத பிறகாலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று. வழக்கமாக வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை சுருக்க திருத்தம் அல்லது தீவிர திருத்தம் என்கிற பெயரில் அவ்வப்போது நடந்திருக்கின்றன. ஆனால் இப்பொழுது வாக்காளர்களின் குடியுரிமையை பரிசோதிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இதனை மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி செயல்படக்கூடிய தேர்தல் ஆணையம் ஒரு வாக்காளரின் குடியுரிமையை சோதிக்க அதிகாரம் கொண்டிருக்கிறதா? அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் இப்படி செயல்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். வாக்குரிமையை பறிப்பது மட்டுமில்லாமல் இந்த மண்ணின் மைந்தர்களின் குடியுரிமையை பறிக்கும் முயற்சியாக இது அமைந்திருக்கிறது. பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவி வரக்கூடியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்கிற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆளும் கட்சித் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தின் தரப்பிலும் சொல்லப்படுகிறது. ஆனால் பீகாரில் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்ற 47 லட்சம் பேரில் யாராவது ஒருவர் அண்டைய நாட்டைச் சார்ந்தவர் என்று அடையாளம் காட்ட முடியுமா? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அத்தனை பேரும் இந்திய குடிமக்கள். பீகாரை சார்ந்த மண்ணின் மைந்தர்கள். ஆக இந்த நாட்டின் குடிமக்களின் வாக்குரிமையை பறிப்பது மட்டுமில்லாமல் குடியுரிமையையும் பறிக்கின்ற முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதைத்தான் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் பேசுகிறபோது எதிர்காலத்தில் இந்த நாட்டின் குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கிற நிலை உருவாகும் என்கின்ற அச்சத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்தார். அந்தக் கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்பதை இந்தச் சூழலில் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். அம்பேத்கர் முன்வைத்த அந்தக் கோரிக்கையை நான் மீண்டும் இந்த அவையில் வழிமொழிய கடமைப்பட்டிருக்கிறேன். இந்த குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும். அதுதான் இன்றைக்கு மிக முக்கியமான ஒரு கோரிக்கையாக இருக்கிறது என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
தேர்தல் ஜனநாயகம் நமது தேசத்தின் உயிர் மூச்சு கொள்கையாகும். தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாப்பதிலும் அதனை வெற்றிகரமாக இயங்கச் செய்வதிலும் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இந்த தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்க வேண்டும். பிஜேபி ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கியமான அரசு நிறுவனங்கள் அரசியல் தலையீடு உள்ள சிக்கலாக மாறியிருக்கிறது. தேர்தல் ஆணையம் மட்டுமில்லாமல் புலனாய்வு நிறுவனங்கள் நீதித்துறைகள் இவை அனைத்திலும் இன்றைக்கு ஆளுங்கட்சியினரின் தலையீடு இருக்கிறது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஏதுவாக செயல்பட்டு வருகிறது என்பதை நாடே இன்றைக்கு உணர்ந்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
தேர்தல் ஆணையத்திற்கு குடியுரிமையை பரிசோதிக்கிற எந்த அதிகாரமும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்காத போது சி.ஏ.ஏ. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எப்படி அது துணிந்தது? 13 ஆவணங்களை கூறுகிறது. இந்த 13 ஆவணங்களும் குடியுரிமையை பரிசோதிப்பதற்கான ஆவணங்கள். எனவே எஸ்.ஐ.ஆர். என்கிற இந்த நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். குடியுரிமையை பரிசோதிக்கிற முயற்சியை கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களின் வாக்குரிமையைப் பறிக்கிற வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது. இது எந்த வகையிலும் ஏற்க முடியாது. அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவல் நடக்கிற மாநிலங்களில் தமிழ்நாடு ஒருபோதும் இடம்பெறாது. இலங்கைத் தமிழர்கள் அங்கே வருகிறார்கள் என்றாலும் கூட அவர்கள் சட்ட விரோதமாக குடியேறவில்லை. அரசின் அனுமதி பெற்று தான் தங்கியிருக்கிறார்கள். ஆகவே, எந்த வகையிலும் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாத சூழல் உள்ளது. இதனை உடனடியாக கைவிட வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் முன்மொழிந்த கோரிக்கையை மீண்டும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். வாக்குரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும். குடியுரிமையை பரிசோதிக்கிற முயற்சியாக இதை மேற்கொள்ளக் கூடாது தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதை மீண்டும் பதிவு செய்து இந்த ஈ.வி.எம். முறையை கைவிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து முடிக்கிறேன். நன்றி வணக்கம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –25-01-2026
24 Jan 2026 -
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்: சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்
24 Jan 2026சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
-
விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பேச்சு
24 Jan 2026சென்னை, தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய் என்று தெரிவித்துள்ள செங்கோட்டையன், விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
24 Jan 2026சென்னை, காவல்துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சென்னை மாநகராட்சி ஊழியர்களால் வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் குறித்து மேயர் விளக்கம்
24 Jan 2026சென்னை, வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் மாநகராட்சி அறிவிப்பாளர் செய்யப்பட்டது இல்லை.
-
துபாய் - சென்னை ஏர் இந்தியா விமான சேவை திடீர் நிறுத்தம்
24 Jan 2026சென்னை, 30 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டு வந்த சென்னை- துபாய் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.
-
தி.மு.க.வில் இணைகிறாரா..? அமைச்சர் சேகர்பாபு-ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
24 Jan 2026சென்னை, அமைச்சர் சேகர்பாபு - ஓ.பி.எஸ். சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நாளை குடியரசு தின விழா: சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை
24 Jan 2026சென்னை, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் ரோஜ்கார் மேளா: 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கினார்
24 Jan 2026புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் நடந்த ரோஜ்கார் மேளாவில் 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
-
ஜெர்மனியில் பனிப்பொழிவால் சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு
24 Jan 2026பெர்லின், ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
24 Jan 2026ஜம்மு, காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவால் பனிக்கட்டிகள் மலைபோல் குவிந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
-
துருக்கியில் நிலநடுக்கம்
24 Jan 2026அங்காரா, துருக்கியின் மேற்கே பலிகேசிர் மாகாணத்தில் சிந்திர்கி மாவட்டத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் பனிப்புயல் எச்சரிக்கை: ஜார்ஜியா, மேரிலேண்ட் உள்ளிட்ட 15 மாகாணங்களில் அவசரநிலை
24 Jan 2026ஜார்ஜியா, சுமார் 15 கோடி அமெரிக்க மக்களை பனிப்புயல் தாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் அனுமதி தேவையில்லை என்ற அரசாணைக்கு ஐகோர்ட் தடை
24 Jan 2026மதுரை, வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் முன் அனுமதி சான்று பெற தேவையில்லை என்ற அரசாணைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டம்
24 Jan 2026நியூயார்க், அமேசான் நிறுவனம் தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வரும் 27ம் தேதி முதல் சுமார் 14,000 முதல் 16,000 வரையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.&
-
2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிப்பு
24 Jan 2026டெல்லி, 2026ம் ஆண்டுக்கான கலை, சமூகம், தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
-
நாளை குடியரசு தின விழா: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை
24 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றுகிறார்.
-
வருமானத்தை மறைத்ததற்காக அபராதம்: விஜய் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு தள்ளிவைப்பு
24 Jan 2026சென்னை, வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சு: அதிபர் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க இங்கிலான்து பிரதமர் வலியுறுத்தல்
24 Jan 2026லண்டன், நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சுக்கு அதிபர் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி
24 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 82 பேர் மாயமாகியுள்ளனர்.
-
அமெரிக்காவில் உறவினர்கள் மற்றும் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
24 Jan 2026ஜார்ஜியா, அமெரிக்காவில் மனைவி மற்றும் உறவினர்களை சுட்டுக்கொன்றதாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சத்துணவு, அங்கன்வாடி மற்றும் தூய்மை ஊழியர்களுக்கு பணி நிறைவு தொகை, ஓய்வூதியம் அதிகரிப்பு: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
24 Jan 2026சென்னை, சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் விடியலை தந்துள்ளோம்:நான் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்காக வாழ்கிறேன்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
24 Jan 2026சென்னை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால் ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான், மக்களுக்காகத் திட்டங்களை தீட்டினான், மாநிலத்தை வளர்த்தெடுத்தான் என்ற
-
வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ள துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
24 Jan 2026சென்னை, வரும் கல்வி ஆண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படவுள்ள நீட் தேர்வை கைவ
-
கவர்னர் உரையில் மாற்றுக் கருத்து இருந்தால் மத்திய அரசைதான் கவர்னர் கேள்வி கேட்க வேண்டும்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Jan 2026சென்னை, கவர்னர் உரையில் மாற்றுக் கருத்து இருந்தால், மத்திய அரசைத்தான் கவர்னர் கேட்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


