எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்கிற வாய்ப்பு உள்ளது நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆற்றிய உரை:-
அவைத் தலைவருக்கு வணக்கம். எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் இதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.
எஸ்.ஐ.ஆர். தேர்தல் காலம் அல்லாத பிறகாலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று. வழக்கமாக வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை சுருக்க திருத்தம் அல்லது தீவிர திருத்தம் என்கிற பெயரில் அவ்வப்போது நடந்திருக்கின்றன. ஆனால் இப்பொழுது வாக்காளர்களின் குடியுரிமையை பரிசோதிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இதனை மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி செயல்படக்கூடிய தேர்தல் ஆணையம் ஒரு வாக்காளரின் குடியுரிமையை சோதிக்க அதிகாரம் கொண்டிருக்கிறதா? அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் இப்படி செயல்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். வாக்குரிமையை பறிப்பது மட்டுமில்லாமல் இந்த மண்ணின் மைந்தர்களின் குடியுரிமையை பறிக்கும் முயற்சியாக இது அமைந்திருக்கிறது. பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவி வரக்கூடியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்கிற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆளும் கட்சித் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தின் தரப்பிலும் சொல்லப்படுகிறது. ஆனால் பீகாரில் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்ற 47 லட்சம் பேரில் யாராவது ஒருவர் அண்டைய நாட்டைச் சார்ந்தவர் என்று அடையாளம் காட்ட முடியுமா? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அத்தனை பேரும் இந்திய குடிமக்கள். பீகாரை சார்ந்த மண்ணின் மைந்தர்கள். ஆக இந்த நாட்டின் குடிமக்களின் வாக்குரிமையை பறிப்பது மட்டுமில்லாமல் குடியுரிமையையும் பறிக்கின்ற முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதைத்தான் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் பேசுகிறபோது எதிர்காலத்தில் இந்த நாட்டின் குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கிற நிலை உருவாகும் என்கின்ற அச்சத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்தார். அந்தக் கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்பதை இந்தச் சூழலில் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். அம்பேத்கர் முன்வைத்த அந்தக் கோரிக்கையை நான் மீண்டும் இந்த அவையில் வழிமொழிய கடமைப்பட்டிருக்கிறேன். இந்த குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும். அதுதான் இன்றைக்கு மிக முக்கியமான ஒரு கோரிக்கையாக இருக்கிறது என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
தேர்தல் ஜனநாயகம் நமது தேசத்தின் உயிர் மூச்சு கொள்கையாகும். தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாப்பதிலும் அதனை வெற்றிகரமாக இயங்கச் செய்வதிலும் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இந்த தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்க வேண்டும். பிஜேபி ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கியமான அரசு நிறுவனங்கள் அரசியல் தலையீடு உள்ள சிக்கலாக மாறியிருக்கிறது. தேர்தல் ஆணையம் மட்டுமில்லாமல் புலனாய்வு நிறுவனங்கள் நீதித்துறைகள் இவை அனைத்திலும் இன்றைக்கு ஆளுங்கட்சியினரின் தலையீடு இருக்கிறது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஏதுவாக செயல்பட்டு வருகிறது என்பதை நாடே இன்றைக்கு உணர்ந்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
தேர்தல் ஆணையத்திற்கு குடியுரிமையை பரிசோதிக்கிற எந்த அதிகாரமும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்காத போது சி.ஏ.ஏ. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எப்படி அது துணிந்தது? 13 ஆவணங்களை கூறுகிறது. இந்த 13 ஆவணங்களும் குடியுரிமையை பரிசோதிப்பதற்கான ஆவணங்கள். எனவே எஸ்.ஐ.ஆர். என்கிற இந்த நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். குடியுரிமையை பரிசோதிக்கிற முயற்சியை கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களின் வாக்குரிமையைப் பறிக்கிற வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது. இது எந்த வகையிலும் ஏற்க முடியாது. அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவல் நடக்கிற மாநிலங்களில் தமிழ்நாடு ஒருபோதும் இடம்பெறாது. இலங்கைத் தமிழர்கள் அங்கே வருகிறார்கள் என்றாலும் கூட அவர்கள் சட்ட விரோதமாக குடியேறவில்லை. அரசின் அனுமதி பெற்று தான் தங்கியிருக்கிறார்கள். ஆகவே, எந்த வகையிலும் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாத சூழல் உள்ளது. இதனை உடனடியாக கைவிட வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் முன்மொழிந்த கோரிக்கையை மீண்டும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். வாக்குரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும். குடியுரிமையை பரிசோதிக்கிற முயற்சியாக இதை மேற்கொள்ளக் கூடாது தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதை மீண்டும் பதிவு செய்து இந்த ஈ.வி.எம். முறையை கைவிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து முடிக்கிறேன். நன்றி வணக்கம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு
10 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
10 Dec 2025சென்னை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
10 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் ஆலோசனை நடைபெறுகிறது.
-
ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை: கோலி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்
10 Dec 2025துபாய், ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய முன்னணி வீரர் 2 இடங்கள் முன்னேறி கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
10 Dec 2025சென்னை, வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி: இந்திய அணி புதிய சாதனை
10 Dec 2025சென்னை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
அபார வெற்றி....
-
3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்கள்: ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை
10 Dec 2025புவனேஷ்வர், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம்: சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
11 Dec 2025சென்னை, தமிழகத்தில் விடுப்பட்ட மகளிருக்கு 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
எஸ்.ஐ.ஆர். தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
11 Dec 2025புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
தமிழ் கவிஞர் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
11 Dec 2025சென்னை, தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்திப்பு
11 Dec 2025சென்னை, சென்னையில் த.வெ.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசி கொண்டனர்.
-
பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் உக்ரைனில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்: அதிபர் ட்ரம்புக்கு ஜெலன்ஸ்கி பதிலடி
11 Dec 2025கீவ், உக்ரைனில் தேர்தலை நடத்தாமல் இருக்க போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி என்று அதிபர் ட்ரம்ப் கடுமையாக தாக்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தா
-
தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்க வாய்ப்பு உள்ளது: திருமாவளவன்
11 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்கிற வாய்ப்பு உள்ளது நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு முழுவதும் 1.50 லட்சம் ஈ.வி.எம். சரிபார்ப்பு பணி துவக்கம்
11 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் 1.50 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பு பணி நேற்று முதல் தொடங்கியது.
-
டிசம்பர் 14 முதல் பா.ம.க.வில் விருப்ப மனுக்கள் விநியோகம்: அன்புமணி அறிவிப்பு
11 Dec 2025சென்னை, வருகிற 14-ம் தேதி முதல் பா.ம.க.வில் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்று அன்புமணி தெரிவித்தார்.
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
11 Dec 2025சென்னை, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? பி.டி.செல்வகுமார் விளக்கம்
11 Dec 2025சென்னை, நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார்.
-
கூட்டணி விவகாரத்தில் விஜய்க்கு முழு அதிகாரம்: த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள்
11 Dec 2025சென்னை, த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.




