முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

13 ஆயிரம் கிமீ நிற்காமல் கடல் மேல் பறக்கும் பறவை

Image Unavailable

மனிதர்களுக்கு அதிலும் பயிற்சி பெற்றவர்களுக்கே சும்மா ஒரு 2 கிமீ ஓடினாலே நாக்கு வறண்டு விடும். தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். 13 ஆயிரம் கிமீ அதிலும் 10 நாட்கள் நிற்காமல் அன்னம் தண்ணி புழங்காமல் ஒரு சிறிய பறவை பறக்கிறது என்றால் ஆச்சரியம் தானே. Bar-tailed Godwit என்ற நாரை வகையைச் சேர்ந்த பறவைதான் இந்த சாகசக்காரி. அமெரிக்காவின் அலாஸ்காவில் வசிக்கும் இது இனப்பெருக்கத்துக்காக பசிபிக் பெருங்கடலை கடக்கிறது. 13 ஆயிரம் கிமீ கடந்து நியூஸிலாந்து செல்கிறது. இடையில் எங்கும் நிற்காமல்.. எங்கு நிற்க.. அதுதான் கடலாச்சே.. இரை தண்ணீர் கூட எடுக்காமல் 10 நாள் பயணம்.  இதை நம்பாத விஞ்ஞானிகள் இருக்கிறார்களே... அதற்காகவே இதன் காலில் ஜிபிஎஸ், சென்சர் என்ற கண்ட கருமாந்திரங்களையும் வைத்து ஆராய்ந்ததில் அது உண்மை தான் என்பது உறுதியானது. ஆனால் எப்படி? 10 நாள் எதுவும் சாப்பிடாமல்... விஞ்ஞானிகள் மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவும் தெரியாமல் Bar-tailed Godwit அது தன்பாட்டுக்கு கடல் மீது பறந்து கொண்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்