முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மர்மமான எலும்புக்கூடு ஏரி எங்குள்ளது தெரியுமா

lake

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூப் குந்த் என்ற இடத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான மலைகளில் ஒன்றான திரிசூலில் ஒரு செங்குத்தான சரிவில், கடல் மட்டத்திலிருந்து 16,500 அடி உயரத்தில் ஒரு ஏரி அமைந்துள்ளது. 1942 ஆம் ஆண்டு இங்கிலாந்து வன பாதுகாவலர் ரோந்து பணியின் போது அங்கே ஏராளமான எலும்புக் கூடுகள் பனியில் புதைந்திருப்பதை கண்டு தெரிவித்தார். அவை அங்கு எப்படி வந்தன என்பது புரியாத மர்மமாகவே இன்று வரை நீடித்து வருகிறது.  அவர்கள் 9 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புயல் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அப்போது முதல் அந்த ஏரி எலும்புக்கூடுகளின் ஏரி என அழைக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்