LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'திருநாள்' படத்தின் இசை வெளியீட்டு விழா
'திருநாள்' படத்தின் இசை வெளியீட்டு விழா
ஜீவா-நயன்தாரா நடித்துள்ள படம் 'திருநாள்'. இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ளார். கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. 'திருநாள்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசும்போது
"இன்று ஒரு நல்ல நாள். இந்த திருநாளில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. இது ஒரு பாசிட்டிவான டீம். நல்ல எண்ணம் கொண்ட நண்பர்கள் கொண்ட படக்குழு. இந்தப் படத்தின் கதையை நீண்டநாட்கள் முன்பே கேட்டேன்.
பிறகு தயாரிப்பாளராக செந்தில்குமார் அமைந்தார். அவர் வெறும் தயாரிப்பாளர் அல்ல, எங்கள் குடும்ப நண்பர். சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் 'சூர்யவம்சம்', 'திருப்பாச்சி' போன்ற பல வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்தவர். அவர்தான் படத்தைத் தயாரிப்பது என்று முடிவானதும் உடனே படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டோம். ஒரே மூச்சில் படத்தை முடித்தோம். பொதுவாகப் படப்பிடிப்பில் எல்லாம் தினம் ஒரு பிரச்சினை வரும். படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்கு பிரச்சினை வரக்கூடாது. எந்தப் பிரச்சினையும் வராமல் இருந்தால்தான் நிம்மதியாக நன்றாக நடிக்க முடியும்.
இப்படத்தில் அப்படி எதுவும் தெரியவே இல்லை. நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எல்லாவற்றையும் செந்தில்குமார் பார்த்துக் கொள்வார் அவர் பார்க்காத பிரச்சினையா? அப்படிப்பட்ட அனுபவசாலி அவர். படத்தின் இயக்குநர் ராம்நாத் திட்டமிட்டு எடுப்பவர் எல்லாவற்றிலும் தெளிவாக இருப்பவர்.
இந்தப் படம் முழுக்க வேட்டியில்தான் வருகிறேன். நீண்டநாட்களாகவே லோக்கலாக இறங்கி படம் பண்ணவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி லோக்கலாக அமைந்த படம்தான் 'திருநாள்'.
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சத்தம் போட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. பதற்றமாகி நான் பார்த்ததில்லை .அவருடன் 100 படங்கள் கூட வேலை பார்க்கலாம். கலை இயக்குநர் சீனு ராவ் கடினமான உழைப்பாளி. இசையமைப்பாளர் ஸ்ரீ அழகழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஈ' 'தெனாவட்டு' படங்களுக்குப் பிறகு அவருடன் இதில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதலில் இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஸ்ரீ எப்போதும் குத்துப் பாட்டுதான் போடுவார் என்று நினைத்தேன் . ஆனால் இதற்காக இனிமையான மெலடி பாடல்கள் போட்டுள்ளார்.
நயன்தாராவுடன் 9 ஆண்டுகளுக்குப் பின் நடித்திருக்கிறேன். படத்தில் முதலிலேயே அவரைத்தான் நடிக்க வைக்க நினைத்தோம் .ஆனால் அப்போது அவர் பிஸியாக இருந்தார். பிறகு வேறு நடிகைகள் எல்லாம் பார்த்தோம். சரிப்பட்டு வரவில்லை. ஆனால் தாமதமானாலும் நயன்தாராதான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.
பிறகு அவரே வந்து சேர்ந்துவிட்டார். முதல்நாள் படப்பிடிப்பு முதல் கடைசிநாள் படப்பிடிப்பு வரை இயக்குநர் சொன்னதை மட்டும்தான் ஆர்வமாகச் செய்தேன். இப்படத்தில் விருப்பமாக நடித்தேன்., சுதந்திரமாக நடித்தேன். பிளேடு வாயில் வைப்பது போன்ற பல காட்சிகளில் சிரமப்பட்டு நடித்தேன். . இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும். " என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீ பேசும் போது
"என்னைக் குத்துப்பாட்டு இசையமைப்பாளர் என்பார்கள். இதில் 'உருமாறிய கருமாரி' போல முழுக்க முழுக்க மாறி இருக்கிறேன். நாலு இனிமையான பாடல்கள் போட்டு இருக்கிறேன். கங்கை அமரன், டி.இமான் போன்ற இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்கள். எஸ். ஜானகியம்மா பாடியிருக்கிறார். அது என் நீண்டநாள் கனவு ''என்றார்.
இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் பேசும் போது
'அம்பா சமுத்திரம் அம்பானி' என் முதல் படம். இது என் இரண்டாவது படம். 'திருநாள்' படத்தின் முழுக்கதையையும் பைண்ட் செய்து 5 ஆண்டுகள் தேடினேன். தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் செந்தில்குமார் சார் இரண்டே கால் மணிநேரம் கதை கேட்டார். மறுநாளே ஜீவாவும் இரண்டே கால் மணிநேரம் கதை கேட்டார். உடனே ஓகே சொன்னார். நயன்தாராவும் முழுக் கதையும் கேட்டார். .இது கும்பகோணத்தின் பின்னணியில் நடக்கும் ரவுடியிசம் சார்ந்த கதை. இதற்காக ஜீவாவை அவர் நடித்த கடந்த 25 படங்களில் அவர் செய்யாத நடை, உடை, பாவனை, தலைமுடி, சட்டை, நிறம் வேட்டி என எல்லாமும் மாற்றினோம். இதில் நயன்தாரா பள்ளி ஆசிரியையாக வருகிறார். ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி எனக்கு பக்கபலமாக இருந்தார். இது மாதிரி படம் தொடங்கியது முதல் படம் முடியும் வரை அதே உற்சாகத்துடன், பலத்துடன் இருக்கும்படியான ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம்.'' என்றார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எம்.செந்தில்குமார், ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி, பாடலாசிரியர் ஜீவன்மயில், கலை இயக்குநர் சீனுராவ், நடன இயக்குநர் பாலகுமார் ஆகியோரும் பேசினார்கள்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 3 days 6 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 5 days 8 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டிசல் விலை நிலவரம்-15-08-2022
15 Aug 2022 -
லால்சிங் சத்தா விமர்சனம்
15 Aug 2022அமீர்கான், கரீனா கபூர் நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கியுள்ள படம் லால் சிங் சத்தா.
-
தியாகிகள் ஓய்வூதியம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Aug 2022சென்னை : மாநில அரசின் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.
-
விடுதலைப்போரில் தமிழகம்: சென்னையில் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
15 Aug 2022சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
-
புதிய இலக்குகளுடன் புதிய திசையில் நாடு பயணிக்க வேண்டிய தருணம்: தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரை
15 Aug 2022புதிய இலக்குகளுடன் புதிய திசையில் நாடு பயணிக்க வேண்டிய தருணம் இது என்று தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்.
-
எகிப்து கிறிஸ்தவ தேவாலயத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 41 போ் பலி
15 Aug 2022எகிப்து தலைநகா் கெய்ரோ அருகே காப்டிக் பழைமைவாத கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 41 போ் உயிரிழந்தனர். 14 போ் காயமடைந்தனர்.
-
விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு: 76-வது சுதந்திர தினம் என்று இந்த ஆண்டை குறிப்பிடுவது ஏன்?
15 Aug 2022புதுடெல்லி : இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
-
பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
15 Aug 2022இன்று டெல்லி புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து மாநிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார்.
-
கடமையைச்செய் விமர்சனம்
15 Aug 2022எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெங்கட்ராகவன் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் கடமையைச் செய்.
-
சுதந்திர தின உரையில் காகித குறிப்புகளை பயன்படுத்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி..!
15 Aug 2022நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.
-
கடாவர் விமர்சனம்
15 Aug 2022அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் கடாவர். இப்படத்தினை அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார்.
-
தமிழ் ரசிகர்களுக்கு நன்றி - துல்கர்
15 Aug 2022துல்கர் சல்மான் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்ககதில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வறவேற்பை பெற்றிருக்கும் படம் சீதா ராமம்.
-
100-வது ஆண்டு சுதந்திர தின விழா நடக்கும் போது 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
15 Aug 2022திருமங்கலம் : நூறாவது ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும்போது உணவு கல்வி விஞ்ஞானம் பல்வேறு துறைகளில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உரு
-
இந்திய துணை கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Aug 2022சென்னை : இந்திய துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
செப். 9ல் வெளியாகும் பிரம்மாஸ்திரா
15 Aug 2022ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரம்.
-
இரண்டு ஆண்டுகள் நிறைவு: எம்.எஸ்.டோனி ஓய்வை சிறப்பிக்கும் விதமாக பதிவிட்ட வீடியோ ஐ.சி.சி.
15 Aug 2022சென்னை : எம் எஸ் டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன.
-
தேசப்பற்றையும், ராணுவத்தையும் அரசியலுக்காக இழுப்பது நல்லதல்ல: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
15 Aug 2022நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது.
-
அரசு உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு: அமெரிக்க எம்.பி.க்கள் குழு தைவான் பயணம்
15 Aug 2022நான்சி பெலோசியின் வருகையால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க எம்.பி.க்கள் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி தேநீர் விருந்து;முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
15 Aug 2022சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
-
76-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் 9-வது முறை தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி: அமைச்சர்கள், எம்.பி.க்கள், பொதுமக்கள் பங்கேற்ப்பு
15 Aug 2022நாடு 76வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் 9-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.
-
சுதந்திர தின உரையில் பிரதமர் பட்டியலிட்ட ஐந்து உறுதிமொழிகள்
15 Aug 2022சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 5 உறுதிமொழிகளைப் பட்டியலிட்ட்டார்.
-
இளைஞர்கள் அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க வேண்டும்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வேண்டுகோள்
15 Aug 2022அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ஒருநாள், டெஸ்ட் போட்டிகளை காக்க ஐ.சி.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் வீரர் கபில் தேவ் வேண்டுகோள்
15 Aug 2022ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
-
சுதந்திர தின விழா: சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தேசிய கொடி ஏற்றினார்
15 Aug 2022சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தேசிய கொடி ஏற்றினார்.
-
எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் : புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்
15 Aug 2022சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.