எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'திருநாள்' படத்தின் இசை வெளியீட்டு விழா
'திருநாள்' படத்தின் இசை வெளியீட்டு விழா
ஜீவா-நயன்தாரா நடித்துள்ள படம் 'திருநாள்'. இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ளார். கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. 'திருநாள்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசும்போது
"இன்று ஒரு நல்ல நாள். இந்த திருநாளில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. இது ஒரு பாசிட்டிவான டீம். நல்ல எண்ணம் கொண்ட நண்பர்கள் கொண்ட படக்குழு. இந்தப் படத்தின் கதையை நீண்டநாட்கள் முன்பே கேட்டேன்.
பிறகு தயாரிப்பாளராக செந்தில்குமார் அமைந்தார். அவர் வெறும் தயாரிப்பாளர் அல்ல, எங்கள் குடும்ப நண்பர். சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் 'சூர்யவம்சம்', 'திருப்பாச்சி' போன்ற பல வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்தவர். அவர்தான் படத்தைத் தயாரிப்பது என்று முடிவானதும் உடனே படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டோம். ஒரே மூச்சில் படத்தை முடித்தோம். பொதுவாகப் படப்பிடிப்பில் எல்லாம் தினம் ஒரு பிரச்சினை வரும். படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்கு பிரச்சினை வரக்கூடாது. எந்தப் பிரச்சினையும் வராமல் இருந்தால்தான் நிம்மதியாக நன்றாக நடிக்க முடியும்.
இப்படத்தில் அப்படி எதுவும் தெரியவே இல்லை. நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எல்லாவற்றையும் செந்தில்குமார் பார்த்துக் கொள்வார் அவர் பார்க்காத பிரச்சினையா? அப்படிப்பட்ட அனுபவசாலி அவர். படத்தின் இயக்குநர் ராம்நாத் திட்டமிட்டு எடுப்பவர் எல்லாவற்றிலும் தெளிவாக இருப்பவர்.
இந்தப் படம் முழுக்க வேட்டியில்தான் வருகிறேன். நீண்டநாட்களாகவே லோக்கலாக இறங்கி படம் பண்ணவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி லோக்கலாக அமைந்த படம்தான் 'திருநாள்'.
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சத்தம் போட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. பதற்றமாகி நான் பார்த்ததில்லை .அவருடன் 100 படங்கள் கூட வேலை பார்க்கலாம். கலை இயக்குநர் சீனு ராவ் கடினமான உழைப்பாளி. இசையமைப்பாளர் ஸ்ரீ அழகழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஈ' 'தெனாவட்டு' படங்களுக்குப் பிறகு அவருடன் இதில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதலில் இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஸ்ரீ எப்போதும் குத்துப் பாட்டுதான் போடுவார் என்று நினைத்தேன் . ஆனால் இதற்காக இனிமையான மெலடி பாடல்கள் போட்டுள்ளார்.
நயன்தாராவுடன் 9 ஆண்டுகளுக்குப் பின் நடித்திருக்கிறேன். படத்தில் முதலிலேயே அவரைத்தான் நடிக்க வைக்க நினைத்தோம் .ஆனால் அப்போது அவர் பிஸியாக இருந்தார். பிறகு வேறு நடிகைகள் எல்லாம் பார்த்தோம். சரிப்பட்டு வரவில்லை. ஆனால் தாமதமானாலும் நயன்தாராதான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.
பிறகு அவரே வந்து சேர்ந்துவிட்டார். முதல்நாள் படப்பிடிப்பு முதல் கடைசிநாள் படப்பிடிப்பு வரை இயக்குநர் சொன்னதை மட்டும்தான் ஆர்வமாகச் செய்தேன். இப்படத்தில் விருப்பமாக நடித்தேன்., சுதந்திரமாக நடித்தேன். பிளேடு வாயில் வைப்பது போன்ற பல காட்சிகளில் சிரமப்பட்டு நடித்தேன். . இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும். " என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீ பேசும் போது
"என்னைக் குத்துப்பாட்டு இசையமைப்பாளர் என்பார்கள். இதில் 'உருமாறிய கருமாரி' போல முழுக்க முழுக்க மாறி இருக்கிறேன். நாலு இனிமையான பாடல்கள் போட்டு இருக்கிறேன். கங்கை அமரன், டி.இமான் போன்ற இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்கள். எஸ். ஜானகியம்மா பாடியிருக்கிறார். அது என் நீண்டநாள் கனவு ''என்றார்.
இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் பேசும் போது
'அம்பா சமுத்திரம் அம்பானி' என் முதல் படம். இது என் இரண்டாவது படம். 'திருநாள்' படத்தின் முழுக்கதையையும் பைண்ட் செய்து 5 ஆண்டுகள் தேடினேன். தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் செந்தில்குமார் சார் இரண்டே கால் மணிநேரம் கதை கேட்டார். மறுநாளே ஜீவாவும் இரண்டே கால் மணிநேரம் கதை கேட்டார். உடனே ஓகே சொன்னார். நயன்தாராவும் முழுக் கதையும் கேட்டார். .இது கும்பகோணத்தின் பின்னணியில் நடக்கும் ரவுடியிசம் சார்ந்த கதை. இதற்காக ஜீவாவை அவர் நடித்த கடந்த 25 படங்களில் அவர் செய்யாத நடை, உடை, பாவனை, தலைமுடி, சட்டை, நிறம் வேட்டி என எல்லாமும் மாற்றினோம். இதில் நயன்தாரா பள்ளி ஆசிரியையாக வருகிறார். ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி எனக்கு பக்கபலமாக இருந்தார். இது மாதிரி படம் தொடங்கியது முதல் படம் முடியும் வரை அதே உற்சாகத்துடன், பலத்துடன் இருக்கும்படியான ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம்.'' என்றார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எம்.செந்தில்குமார், ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி, பாடலாசிரியர் ஜீவன்மயில், கலை இயக்குநர் சீனுராவ், நடன இயக்குநர் பாலகுமார் ஆகியோரும் பேசினார்கள்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிம்பிள் சிக்கன் கறி![]() 3 days 6 hours ago |
முட்டை பக்கோடா![]() 6 days 5 hours ago |
ஸ்பைசி சிக்கன் கிரேவி![]() 1 week 3 days ago |
-
ஜூலை மாதம் சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் தகவல்
29 May 2023புதுடெல்லி : சந்திரயான்-3 வருகிற ஜூலையில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
-
ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
29 May 2023புதுடெல்லி : நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
மைசூரு அருகே சாலை விபத்தில் 10 பேர் பலி
29 May 2023மைசூர் : கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் - டி நரசிபுரா சாலையில் குருபுரு கிராமத்தின் பிஞ்சரா கம்பத்தில்இன்றி மதியம் நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர்
-
டென்னிஸ் பந்தால் கோலியின் ஓவியத்தை தீட்டிய தீவிர ரசிகர்
29 May 2023இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் ரன் குவித்து வருகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 30-05-2023.
30 May 2023 -
தமிழகத்தில் மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸை ஸ்மார்ட் கார்டாக வழங்க அரசு திட்டம்
29 May 2023சென்னை, தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸை ஸ்மார்ட் கார்டாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
பெண்கள் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் : சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதி
29 May 2023திருப்பதி : பெண்கள் வங்கி கணக்கில் ரூ.15000 செலுத்தப்படும் என்று சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
-
பா.ஜ.க. எதிரான நிலைப்பாடு: பீகாரில் ஜூன் 12-ம் தேதி நடக்கிறது: எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்
29 May 2023புதுடெல்லி, வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க பீகாரில் ஜூன் 12-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியு
-
விடுமுறையால் அதிகரித்த பக்தர்கள் வருகை: திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு நீண்டநேம் காத்திருக்கும் சூழ்நிலை
29 May 2023திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: போட்டி நடுவர்களை அறிவித்த ஐசிசி
29 May 2023துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
ஓவல் மைதானத்தில்...
-
சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா
30 May 2023பெய்ஜிங் : தனது சொந்த விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்களை சீனா அனுப்பி வைத்துள்ளது.
-
சென்னையில் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
30 May 2023சென்னை : போக்குவரத்து கழகத்தில் காலிப் பணியிடங்களை முறையாக நிரந்தர அடிப்படையில் நிரப்பிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
ராணுவ உளவு செயற்கைகோள் ஜூனில் ஏவப்படும்: வடகொரியா
30 May 2023பியாங்கியாங் : ராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்து உள்ளது.
-
ஐ.எஸ். அமைப்புக்கு பிரச்சாரம்: லிபியாவில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்
30 May 2023திரிபோலி : லிபியாவில் ஐ.எஸ்.
-
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் இருந்து 2 ஆசிரியர்கள் நீக்கம் : விழுப்புரம் தலைமை நீதிமன்றம் உத்தரவு
30 May 2023விழுப்புரம் : கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் இருந்து 2 ஆசிரியர்களை நீக்கி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நைஜீரியாவின் 16-வது அதிபராக போலா தினுபு பதவியேற்பு
30 May 2023அபுஜா : நைஜீரியா நாட்டின் புதிய அதிபராக போலா தினுபு நேற்று பதவியேற்று கொண்டார்.
-
தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் பஸ் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை
30 May 2023சென்னை : தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
30 May 2023சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான NEC Future Creation Hub-க்கு சென்று பார்வையிட
-
மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்று பட்டம் பெற்ற வளர்ப்பு நாய்
30 May 2023வாஷிங்டன் : அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்று பட்டம் பெற்ற வளர்ப்பு நாய் குறித்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
ஆக. 14-ல் மவுன்ட்பேட்டன் டெல்லியிலேயே இல்லை : ப.சிதம்பரம் சொல்கிரார்
30 May 2023புதுக்கோட்டை : 1947, ஆகஸ்ட் 14-ம் தேதி மவுன்ட் பேட்டன் டில்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தானில் இருந்தார் எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
-
அரிசிக்கொம்பன் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்
30 May 2023சென்னை : அரிசிக்கொம்பன் யானை தாக்கியதில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க.
-
ஆரவாரம் செய்த ரசிகர்கள்: கோபித்துக் கொண்டு சென்ற நடிகர் ஆர்யா
30 May 2023சேலம் : ஆரவாரம் செய்த ரசிகர்களால் நடிகர் ஆர்யா கோபித்துக் கொண்டு சென்ற சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தகுதித்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை உடனே நியமிக்க அன்புமணி கோரிக்கை
30 May 2023சென்னை : தகுதித்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் மூலம் அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க நடவடிக்கை தீவிரம்
30 May 2023கம்பம் : அரிசிக்கொம்பன் யானையை பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் மூலம் பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் ரூ. 128 கோடியில் தொழிற்சாலையை நிறுவும் ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
30 May 2023சென்னை : ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஓம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழ