முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலைவிபத்தில் மரணமடைந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.25 - அம்பத்தூர் அருகே சாலை விபத்தில் பலியான பிரியா குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டம், அம்பத்தூர் ஓ.டி அருகே 21.3.12 அன்று இருசக்கர வாகனம் ஒன்றின் மீது, மாநகர அரசு பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மனைவி பிரியா பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்தச் சாலை விபத்தில் அகால மரணமடைந்த பிரியாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த துயரச் சம்பவத்தில் காலமான பிரியா குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒருலட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்