முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வேட்பாளர்கள் சென்னையில் வேட்பு மனு தாக்கல்

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச். 24 - டி.ஜெயக்குமார், வி.பி.கலைராஜன், சைதை துரைசாமி, பழ.கருப்பையா, ஜே.சி.டி.பிரபாகரன்,கோகுலஇந்திரா, வளர்மதி உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் சென்னையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் நேற்று தமிழகம் முழுவதும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதன்படி சென்னையில் நேற்று வேட்புமனுக்கலை தாக்கல் செய்தவர்கள் விவரம் வருமாறு:

ராயபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமார், மூலகொத்தளத்தில் உள்ள மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சுந்தரவள்ளியிடம்  வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அ.தி.மு.க. பகுதி செயலாளர் பழனி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி 4​வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ராஜரத்தினத்திடம் பகல் 11 மணிக்கு மனுதாக்கல் செய்தார். அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணை செயலாளர் பாலகங்கா எம்.பி., பகுதி செயலாளர் வெற்றிநகர் மு.சுந்தர், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் வசந்த ராமன், பகுதி செயலாளர் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக மனுதாக்கல் செய்ய வந்த சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏ.எஸ். முருகன், ஜெகதீசன், ஐ.சி.எப். உதயகுமார், வெற்றி துரைசாமி, மெய்யப்பன், வேலு, சாரதி, லில்லி, சந்திரன், நைனியப்பன், கடும்பாடி, சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். அப்போது புரட்சித் தலைவி வாழ்க, வெற்றி உறுதி என்று கோஷமிட்ட னர். 

மனுதாக்கல் செய்த பின் சைதை துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்னை தேர்வு செய்துள்ளார். நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பம். எனவே இந்த தொகுதி மக்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பார்கள். எங்களுடன் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும், 350​க்கும் மேற்பட்ட அமைப்புகளும் ஆதரவு அளிக்கின்றன. எனவே எங்கள் கூட்டணி பலமான கூட்டணி.

தமிழ்நாடு முழுவதும் அமோக ஆதரவு பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்​அமைச்சர் ஆவார். தற்போதைய ஆட்சி மாறும். கொளத்தூர் தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.

கேள்வி:​ தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி எப்படி இருக்கும்? 

பதில்:​ அ.தி.மு.க. வெற்றி யில் எந்த சந்தேகமும் இல்லை. அம்மா என்ற சக்தி சுனாமியாக இருக்கும்போது எந்த சக்தியும் தடையாக இருக்காது.

இவ்வாறு சைதை துரைசாமி கூறினார். 

மனுதாக்கல் செய்து விட்டு வெளியே வந்த அவருக்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். ஏராள மானோர் அவருக்கு கை குலுக்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோகுல இந்திரா,  nullந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி 5​வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி அன்பழகனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் பொன்னையன், வ. சுகுமார் பாபு மற்றும் ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர். வேட்பு மனுதாக்கல் செய்து விட்டு வெளியே வந்த கோகுல இந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:​ 

இன்றைய தினம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏழை​எளியோரின் நலனில் அக்கறை கொண்டு சிறப்பானதொரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயி கள், வியாபாரிகள் போன்ற அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது. நான் அண்ணாநகர் தொகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வெற்றியை ஜெயலலிதா காலடியில் சமர்ப்பிப்பேன். அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நான் தங்கி இருப்பதால் உடனுக்குடன் மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பேன். அண்ணாநகர் தொகுதி மக்களுக்காக சட்டசபையில் குரல் கொடுப்பேன்.

இவ்வாறு கோகுல இந்திரா கூறினார்.

ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா. வளர்மதி, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி அன்பழகனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் நுங்கைமாறன், தே.மு.தி.க. பகுதி செயலாளர் கோவிந்தன், மனிதநேய மக்கள் கட்சி பகுதி செயலாளர் அன்சார், சிவராஜ், முருகேசன், ரமேஷ், ஆறுமுகம் கலந்து கொண்டனர். 

வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரன் எழும்nullர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உள்ள சிப்காட் அலுவலகம் சென்று தேர்தல் அதிகாரி சம்பத்குமாரிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் பாலன், தே.மு.தி.க. செயலாளர் செல்வம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ஏழுமலை, மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் வாஹீது பாய் ஆகியோர் உடன் இருந்தனர்.

சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தமிழன் சைதாப்பேட்டை மண்டல அலுவலகம் சென்று தேர்தல் அதிகாரி பன்னீர் செல்வத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மைத்ரேயன் எம்.பி., பகுதிச் செயலாளர் என்.எஸ். மோகன், வக்கீல் பாலசுப்பிரமணியன், விஜயராஜ் ஆகியோர் உடன் சென்றனர். 

தியாகராயநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கலைராஜன் கோடம்பாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மைலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலட்சுமி, மயிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி இன்னசென்ட் திவ்யாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் மயிலை பகுதி செயலாளர் ஜெயசந்திரன்  மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திரு.வி.க.நகர் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வ.நீலகண்டன், புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி 3வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி விசாகனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தே.மு.தி.க. பகுதி செயலாளர் லிங்கம்,  அ.தி.மு.க. பகுதி செயலாளர் சுகுமார், முன்னாள் கவுன்சிலர் வீரமணி உள்பட  கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தண்டையார்பேட்டை மணிகூண்டு அருகே உள்ள 1வது மண்டல அலுவலரிடம் வேட்புமனு தாக்கல்செய்தார். அப்போது அவருடன் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், பகுதி செயலாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பழ.கருப்பையாவும் நேற்று வேட்புமனு தாக்கல்செய்தார்.

வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.கே.அசோக், சென்னை எழிலகத்தில் தேர்தல் அதிகாரி கார்பிலினிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் சுரேஷ், முருகன், வழக்கறிஞர் கேசர், காளின்ஸ் உடனிருந்தனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க. வேட்பாளர்கள் கு.நல்லதம்பி(எழும்பூர்), ப.பார்த்தசாரதி(விருகம்பாக்கம்) ஆகியோரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்