எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச். 24 - டி.ஜெயக்குமார், வி.பி.கலைராஜன், சைதை துரைசாமி, பழ.கருப்பையா, ஜே.சி.டி.பிரபாகரன்,கோகுலஇந்திரா, வளர்மதி உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் சென்னையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் நேற்று தமிழகம் முழுவதும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதன்படி சென்னையில் நேற்று வேட்புமனுக்கலை தாக்கல் செய்தவர்கள் விவரம் வருமாறு:
ராயபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமார், மூலகொத்தளத்தில் உள்ள மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சுந்தரவள்ளியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அ.தி.மு.க. பகுதி செயலாளர் பழனி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி 4வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ராஜரத்தினத்திடம் பகல் 11 மணிக்கு மனுதாக்கல் செய்தார். அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணை செயலாளர் பாலகங்கா எம்.பி., பகுதி செயலாளர் வெற்றிநகர் மு.சுந்தர், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் வசந்த ராமன், பகுதி செயலாளர் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக மனுதாக்கல் செய்ய வந்த சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏ.எஸ். முருகன், ஜெகதீசன், ஐ.சி.எப். உதயகுமார், வெற்றி துரைசாமி, மெய்யப்பன், வேலு, சாரதி, லில்லி, சந்திரன், நைனியப்பன், கடும்பாடி, சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். அப்போது புரட்சித் தலைவி வாழ்க, வெற்றி உறுதி என்று கோஷமிட்ட னர்.
மனுதாக்கல் செய்த பின் சைதை துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்னை தேர்வு செய்துள்ளார். நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பம். எனவே இந்த தொகுதி மக்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பார்கள். எங்களுடன் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும், 350க்கும் மேற்பட்ட அமைப்புகளும் ஆதரவு அளிக்கின்றன. எனவே எங்கள் கூட்டணி பலமான கூட்டணி.
தமிழ்நாடு முழுவதும் அமோக ஆதரவு பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்அமைச்சர் ஆவார். தற்போதைய ஆட்சி மாறும். கொளத்தூர் தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.
கேள்வி: தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி எப்படி இருக்கும்?
பதில்: அ.தி.மு.க. வெற்றி யில் எந்த சந்தேகமும் இல்லை. அம்மா என்ற சக்தி சுனாமியாக இருக்கும்போது எந்த சக்தியும் தடையாக இருக்காது.
இவ்வாறு சைதை துரைசாமி கூறினார்.
மனுதாக்கல் செய்து விட்டு வெளியே வந்த அவருக்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். ஏராள மானோர் அவருக்கு கை குலுக்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோகுல இந்திரா, nullந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி 5வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி அன்பழகனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் பொன்னையன், வ. சுகுமார் பாபு மற்றும் ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர். வேட்பு மனுதாக்கல் செய்து விட்டு வெளியே வந்த கோகுல இந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:
இன்றைய தினம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏழைஎளியோரின் நலனில் அக்கறை கொண்டு சிறப்பானதொரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயி கள், வியாபாரிகள் போன்ற அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது. நான் அண்ணாநகர் தொகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வெற்றியை ஜெயலலிதா காலடியில் சமர்ப்பிப்பேன். அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நான் தங்கி இருப்பதால் உடனுக்குடன் மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பேன். அண்ணாநகர் தொகுதி மக்களுக்காக சட்டசபையில் குரல் கொடுப்பேன்.
இவ்வாறு கோகுல இந்திரா கூறினார்.
ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா. வளர்மதி, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி அன்பழகனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் நுங்கைமாறன், தே.மு.தி.க. பகுதி செயலாளர் கோவிந்தன், மனிதநேய மக்கள் கட்சி பகுதி செயலாளர் அன்சார், சிவராஜ், முருகேசன், ரமேஷ், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.
வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரன் எழும்nullர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உள்ள சிப்காட் அலுவலகம் சென்று தேர்தல் அதிகாரி சம்பத்குமாரிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் பாலன், தே.மு.தி.க. செயலாளர் செல்வம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ஏழுமலை, மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் வாஹீது பாய் ஆகியோர் உடன் இருந்தனர்.
சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தமிழன் சைதாப்பேட்டை மண்டல அலுவலகம் சென்று தேர்தல் அதிகாரி பன்னீர் செல்வத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மைத்ரேயன் எம்.பி., பகுதிச் செயலாளர் என்.எஸ். மோகன், வக்கீல் பாலசுப்பிரமணியன், விஜயராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.
தியாகராயநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கலைராஜன் கோடம்பாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மைலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலட்சுமி, மயிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி இன்னசென்ட் திவ்யாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் மயிலை பகுதி செயலாளர் ஜெயசந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திரு.வி.க.நகர் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வ.நீலகண்டன், புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி 3வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி விசாகனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தே.மு.தி.க. பகுதி செயலாளர் லிங்கம், அ.தி.மு.க. பகுதி செயலாளர் சுகுமார், முன்னாள் கவுன்சிலர் வீரமணி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தண்டையார்பேட்டை மணிகூண்டு அருகே உள்ள 1வது மண்டல அலுவலரிடம் வேட்புமனு தாக்கல்செய்தார். அப்போது அவருடன் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், பகுதி செயலாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பழ.கருப்பையாவும் நேற்று வேட்புமனு தாக்கல்செய்தார்.
வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.கே.அசோக், சென்னை எழிலகத்தில் தேர்தல் அதிகாரி கார்பிலினிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் சுரேஷ், முருகன், வழக்கறிஞர் கேசர், காளின்ஸ் உடனிருந்தனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க. வேட்பாளர்கள் கு.நல்லதம்பி(எழும்பூர்), ப.பார்த்தசாரதி(விருகம்பாக்கம்) ஆகியோரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.