தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச். 24 - டி.ஜெயக்குமார், வி.பி.கலைராஜன், சைதை துரைசாமி, பழ.கருப்பையா, ஜே.சி.டி.பிரபாகரன்,கோகுலஇந்திரா, வளர்மதி உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் சென்னையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் நேற்று தமிழகம் முழுவதும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதன்படி சென்னையில் நேற்று வேட்புமனுக்கலை தாக்கல் செய்தவர்கள் விவரம் வருமாறு:
ராயபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமார், மூலகொத்தளத்தில் உள்ள மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சுந்தரவள்ளியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அ.தி.மு.க. பகுதி செயலாளர் பழனி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி 4வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ராஜரத்தினத்திடம் பகல் 11 மணிக்கு மனுதாக்கல் செய்தார். அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணை செயலாளர் பாலகங்கா எம்.பி., பகுதி செயலாளர் வெற்றிநகர் மு.சுந்தர், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் வசந்த ராமன், பகுதி செயலாளர் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக மனுதாக்கல் செய்ய வந்த சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏ.எஸ். முருகன், ஜெகதீசன், ஐ.சி.எப். உதயகுமார், வெற்றி துரைசாமி, மெய்யப்பன், வேலு, சாரதி, லில்லி, சந்திரன், நைனியப்பன், கடும்பாடி, சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். அப்போது புரட்சித் தலைவி வாழ்க, வெற்றி உறுதி என்று கோஷமிட்ட னர்.
மனுதாக்கல் செய்த பின் சைதை துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்னை தேர்வு செய்துள்ளார். நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பம். எனவே இந்த தொகுதி மக்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பார்கள். எங்களுடன் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும், 350க்கும் மேற்பட்ட அமைப்புகளும் ஆதரவு அளிக்கின்றன. எனவே எங்கள் கூட்டணி பலமான கூட்டணி.
தமிழ்நாடு முழுவதும் அமோக ஆதரவு பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்அமைச்சர் ஆவார். தற்போதைய ஆட்சி மாறும். கொளத்தூர் தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.
கேள்வி: தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி எப்படி இருக்கும்?
பதில்: அ.தி.மு.க. வெற்றி யில் எந்த சந்தேகமும் இல்லை. அம்மா என்ற சக்தி சுனாமியாக இருக்கும்போது எந்த சக்தியும் தடையாக இருக்காது.
இவ்வாறு சைதை துரைசாமி கூறினார்.
மனுதாக்கல் செய்து விட்டு வெளியே வந்த அவருக்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். ஏராள மானோர் அவருக்கு கை குலுக்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோகுல இந்திரா, nullந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி 5வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி அன்பழகனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் பொன்னையன், வ. சுகுமார் பாபு மற்றும் ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர். வேட்பு மனுதாக்கல் செய்து விட்டு வெளியே வந்த கோகுல இந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:
இன்றைய தினம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏழைஎளியோரின் நலனில் அக்கறை கொண்டு சிறப்பானதொரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயி கள், வியாபாரிகள் போன்ற அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது. நான் அண்ணாநகர் தொகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வெற்றியை ஜெயலலிதா காலடியில் சமர்ப்பிப்பேன். அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நான் தங்கி இருப்பதால் உடனுக்குடன் மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பேன். அண்ணாநகர் தொகுதி மக்களுக்காக சட்டசபையில் குரல் கொடுப்பேன்.
இவ்வாறு கோகுல இந்திரா கூறினார்.
ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா. வளர்மதி, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி அன்பழகனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் நுங்கைமாறன், தே.மு.தி.க. பகுதி செயலாளர் கோவிந்தன், மனிதநேய மக்கள் கட்சி பகுதி செயலாளர் அன்சார், சிவராஜ், முருகேசன், ரமேஷ், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.
வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரன் எழும்nullர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உள்ள சிப்காட் அலுவலகம் சென்று தேர்தல் அதிகாரி சம்பத்குமாரிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் பாலன், தே.மு.தி.க. செயலாளர் செல்வம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ஏழுமலை, மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் வாஹீது பாய் ஆகியோர் உடன் இருந்தனர்.
சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தமிழன் சைதாப்பேட்டை மண்டல அலுவலகம் சென்று தேர்தல் அதிகாரி பன்னீர் செல்வத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மைத்ரேயன் எம்.பி., பகுதிச் செயலாளர் என்.எஸ். மோகன், வக்கீல் பாலசுப்பிரமணியன், விஜயராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.
தியாகராயநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கலைராஜன் கோடம்பாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மைலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலட்சுமி, மயிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி இன்னசென்ட் திவ்யாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் மயிலை பகுதி செயலாளர் ஜெயசந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திரு.வி.க.நகர் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வ.நீலகண்டன், புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி 3வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி விசாகனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தே.மு.தி.க. பகுதி செயலாளர் லிங்கம், அ.தி.மு.க. பகுதி செயலாளர் சுகுமார், முன்னாள் கவுன்சிலர் வீரமணி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தண்டையார்பேட்டை மணிகூண்டு அருகே உள்ள 1வது மண்டல அலுவலரிடம் வேட்புமனு தாக்கல்செய்தார். அப்போது அவருடன் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், பகுதி செயலாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பழ.கருப்பையாவும் நேற்று வேட்புமனு தாக்கல்செய்தார்.
வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.கே.அசோக், சென்னை எழிலகத்தில் தேர்தல் அதிகாரி கார்பிலினிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் சுரேஷ், முருகன், வழக்கறிஞர் கேசர், காளின்ஸ் உடனிருந்தனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க. வேட்பாளர்கள் கு.நல்லதம்பி(எழும்பூர்), ப.பார்த்தசாரதி(விருகம்பாக்கம்) ஆகியோரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இந்தோ - பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக 'குவாட்' இருக்கிறது : பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
24 May 2022டோக்கியோ : உலக அரங்கில் குவாட் அமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
-
சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை
24 May 2022வேலூர் : சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
24 May 2022சென்னை : வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு
24 May 2022சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தா
-
கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் மெத்தனம் கூடாது : அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்
24 May 2022சென்னை : ”கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக்கூடாது” என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்
-
கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் இருக்கக்கூடாது : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
24 May 2022மதுரை : கோவில் திருவிழாக்களில் நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்று ம
-
வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள்
24 May 2022புது டெல்லி : வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை: இந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தும் வாக்கியங்கள் மட்டுமே நீக்கியுள்ளோம் : கர்நாடக கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
24 May 2022பெங்களூரு : பாடப்புத்தகத்திலிருந்து பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை.
-
பிரசாந்த் கிஷோருக்கு பதில் சுனில்: 2024 பார்லி. தேர்தலுக்கு தயாராக காங்கிரஸில் குழுக்கள் அறிவிப்பு : நாடு தழுவிய பேரணி நடத்தவும் திட்டம்
24 May 2022புதுடெல்லி : 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாக புதிய குழுக்களை கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளா
-
3-வது நாளாக தொடர்ந்து சரிவு: இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675 ஆக குறைந்தது
24 May 2022புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675 - ஆக குறைந்துள்ளது.
-
ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கோரியதாக புகார்: பஞ்சாப் சுகாதார அமைச்சர் டிஸ்மிஸ் : முதல்வர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு
24 May 2022சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தனது அமைச்சரவையின் சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய் சிங்லாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார்.
-
சென்னையில் 20 நாட்களில் 18 கொலைகள்: கொலைநகராக மாறும் தலைநகர்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
24 May 2022சென்னை : சென்னையில் கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வரும், எதிரக்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
-
கேரள மாநிலத்தையே உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
24 May 2022கொல்லம் : கேரள மாநிலத்தையே உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என்று அறிவித்திருந்த நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நேற்று க
-
சர்வதேச யோகா தினத்தில் மைசூரில் 21-ம் தேதி மக்களுடன் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு
24 May 2022புதுடெல்லி : சர்வதேச யோகா தினம்- மைசூரில் 21-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் : பிரஷாந்த் கிஷோர் கணிப்பு
24 May 2022புதுடெல்லி : பாரதிய ஜனதா கட்சியை யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியை மையப்படுத்தியே இந்தியாவின் அரசியல் இருக்கும் என்று தேர்தல்
-
15-18 வயதுடைய 80 சதவீத சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி: மாண்டவியா
24 May 2022புதுடெல்லி : இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறார்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை
-
டி-20 உலக கோப்பை : இந்திய அணியில் அஸ்வினை சேர்க்க வேண்டும் - கவாஸ்கர்
24 May 2022மும்பை : பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்
-
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பான செயல்பாடு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் பாராட்டு
24 May 2022டோக்கியோ : கொரோனா தொற்றை இந்தியா சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இலங்கையில் இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் லிட்டர் ரூ.420-ம், டீசல் ரூ.400 ஆகவும் உயர்வு
24 May 2022கொழும்பு : இலங்கையில் நேற்று ஒரே நாளில் பெட்ரோல் விலை 24.3 வீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
10-ம் வகுப்பு கணிதத்தேர்வை எழுதாத 45,618 மாணவர்கள் : தமிழக தேர்வுத்துறை தகவல்
24 May 2022சென்னை : நேற்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
-
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா : வீரேந்திர சேவாக் புகழாரம்
24 May 2022மும்பை : பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன்.
-
கோவை வெள்ளிங்கிரியில் 7 மலைகள் ஏறிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு குவியும் பாராட்டுகள்
24 May 2022சென்னை : கோவை வெள்ளிங்கிரியில் ஏழு மலைகள் ஏறிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
தைவானை தாக்க தயார் நிலையில் வீரர்கள்: சீன அதிபர் பேசிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு
24 May 2022பெய்ஜிங் : 1.40 லட்சம் ராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார்படுத்துமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசிய ஆடியோ சீனாவில் வெளியானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
விராட் கோலி, ரோகித் சர்மா மீண்டும் ரன்களை குவிக்க தொடங்குவார்கள் : பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி நம்பிக்கை
24 May 2022மும்பை : விராட் கோலி மற்றும் ரோகித் இருவர் குறித்தும் கங்குலி பேசுகையில், "அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள்.
-
ரெய்னாவின் பங்களிப்பை நாம் மறந்து விடுகிறோம் : முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து
24 May 2022மும்பை : சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பை நாம் மறந்து விடுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.