முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடியூரப்பா பதவி விலகக்கோரி காங்.போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர்,மார்ச்.- 27 - கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலகக்கோரி காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளனர். கர்நாடக முதல்வர் எடியூரப்பா பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையொட்டி முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா உடனடியாக ராஜினாமா செய்யக்கோரி காங்கிரசார் நேற்று மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளனர். பெங்களூரில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கூடி முதல்வர் பதவியில் நீடித்துக்கொண்டியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். நிலப்பேர ஊழலில் சிக்கியுள்ள எடியூரப்பா, உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று தர்ணா போராட்டக்காரர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா பேசினார். எடியூரப்பா மீது போலீசார் வழக்கப்பதிவு செய்தபோதே அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்றும் பரமேஸ்வரா வற்புறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்