எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.28 - தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக்க வங்கிகள் தங்கள் பணிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் ஓவர்சீஸ் வங்கியின் பிளாட்டினம் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் பேசியதாவது:-
இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கியின் பிளாட்டினம் விழா கொண்டாட்டங்களில் பங்குபெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த டிசம்பரில் வங்கியின் நிர்வாக இயக்குனர் நரேந்திரா என்னை சந்தித்தபோது தமிழ்நாட்டின் இந்த வங்கி 854 கிளைகளுடன் இணைந்த பணியை மேற்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். நரேந்திராவுக்கும் அவரது குழுவினருக்கும் ஒரு சவாலாக தமிழ்நாட்டில் ஆயிரமாவது கிளையை தொடங்க வேண்டும் என்று நான் கோரினேன். இவ்வளவு பெரிய அளவில் அவர்கள் செயல்படுவார்கள் என்று நான் எதிர் பார்க்கவில்லை. அதாவது, குறைந்த காலமான 6 மாதத்திலேயே அவர்கள் தமிழ்நாட்டில் 150 கிளைகளை தொடங்கிவிட்டார்கள். இந்த சிறப்பான சாதனைக்காக நரேந்திராவையும் அவரது குழுவினரையும் நான் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.
உள்நாட்டு வங்கி முறையில் தமிழர்களுக்கு என்று ஒரு தனித்த மரபு உள்ளது. கடன் அளித்தல், வட்டி விகிதத்தை நிர்ணயத்தல் மற்றும் சரியான கட்டண செலுத்தும் முறை ஆகிய வங்கி பணிகளை தமிழ்நாட்டின் பழம்பெரும் வணிக சமுதாயம் நல்ல முறையில் அறிந்திருந்தது. வரலாற்றின் மிக முக்கியமான கட்டத்தில் இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி 1937-ம் ஆண்டு பழம் பெரும் மரபுகளின் அடிப்படையில் உருவானது. 1930 ஆம் ஆண்டுகளில் வறட்சியின் காரணமாக முக்கிய தானியங்களில் விலை பிரச்சனை உருவானது. அந்த நேரத்தில் இந்தியாவின் ஏற்றுமதி மிகவும் வீழ்ச்சியடைந்தது. நாட்டின் பராமரிப்பு உறுதி தன்மை, ரூபாய் நோட்டு மற்றும் கடன் வழங்கும் முறையை பாதுகாக்கவும், 1935 ஏப்ரலில் இந்திய ரிசர்வ் வங்கி துவக்கப்பட்டது. நிறுவன ரீதியான வங்கி முறையில் இந்த சகாப்தத்தில் இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி முதல் மிகவும் பெரும் வங்கியாக நிர்வாகத்தை பெற்றுள்ளது. எம்.சிதம்பரம் செட்டியார் 30 வயதாக இருந்தபோது இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்தார். இதனை நாம் மிகவும் பெருமையுடனும், நன்றியுடனும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரால் தொடங்கப்பட்ட சிறிய வங்கி, மிகப்பெரிய உலகளாவிய அமைப்பாகவும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து முன்னோடி வங்கியாக திகழ்கிறது.
இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி எனக்கு புதியது அல்ல. அது தேசியமயம் ஆக்கப்பட்டதற்கு. முன்னும் பின்னும் இருந்து அதனை பார்த்து வருகிறேன். இந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் நானும் ஒருவர். மிகப்பெரிய சேவை இணைப்புக்காகவும், 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டு பொறுப்புடன் நடந்து வருவதால் தமிழகத்தில் அது முக்கிய இடத்தை பெற்று வருகிறது. ஓரத்தில் உள்ள கிராமங்கள், மகளிர் குழுக்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் தொகை உட்பட மாநிலத்தில் முன்னணி நடவடிக்கைகளை இந்த வங்கி எடுத்த வருகிறது என்பதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீலகிரி ஆதிவாசி மக்களுக்காக இந்த வங்கி நிதி அடிப்படையில் எடுத்த முன் முயற்சிகளுக்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்று உள்ளது. 2008-ல் உலகளாவிய பொருளாதார சிக்கலினால் மிகப்பெரிய தடுமாற்றம் ஏற்பட்டபோது, சில்லறை வங்கியியல் திட்டம் என்ற வாய்ப்பை பயன்படுத்தி இந்த வங்கி மீண்டும் தன்னை உருவாக்கியுள்ளது. இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கியை போல, உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பான நிறுவனங்களின் தமிழ்நாட்டில் நிதிமுறையை உண்மையில் மிகப்பெரிய அளவில் விரிவுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. நிதி என்பது பொருளாதாரத்தின் உயிர் தரும் இரத்தம் போன்றது. தன்னிறைவுக்கும் முக்கியமானது, பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியது. சேமிப்பு, வைப்புத் தொகை, தொகை செலுத்தும் சேவைகள் மற்றும் கடன் போன்ற நிதி சேவைகளில் மிகப்பெரிய எண்ணிகையிலான குடும்பங்கள் இணைவதை அதிகரிக்கும் வகையில் வங்கி பணிகள் உள்ளன. மேலும் மேலும் அதிக மக்களுக்கு நிதித் தேவைகள் அதிகமாக உள்ளது. மின்சாரம், குடிநீர் வழங்கல் மற்றும் தொலைபேசி போல பொது மக்கள் சேவையில் வங்கி பணியும் மிக முக்கியமாக வளர்ந்து வருகிறது.
பொருளாதார மேம்பாட்டை பொருத்தவரையில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் சேமிப்பை உற்பத்தி துறையில் முதலீடு செய்கின்றன. உற்பத்தி இல்லாத துறைகளில் முதலீடு செய்வது இல்லை. தற்போது இந்தியாவில் குடும்பங்களின் சேமிப்பில் 50 சதவிதம் நிதி சொத்துக்களுக்காகவும், மற்றவை நிலையான சொத்துகளுக்காகவும் முதலீடு செய்யப்படுகிறது. மேலும் இந்த சேமிப்புகளில் வணிக வங்கிகளில் 42 சதவிகிதமும், வங்கி சேமிப்புகளில் 61.2 சதவிதமும் செலுத்தப்படுகின்றன. 2010-11 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் இதைத் தெரிவிக்கிறது. நிதி சேமிப்புகளில் பங்கு பெறுவதிலும், வணிக வங்கிகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதை இது காட்டுகிறது. உலகிலுள்ள 2.5 மில்லியன் வங்கி கணக்கு வைத்தில்லாத மக்கள் தொகையின் 6-ல் ஒரு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
இந்தியாவின் மாநிலங்களை ஒப்பிடும்போது நிதி குறியீட்டில் தமிழகம் 7-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு முதன்மையானதாக வளர வேண்டும் என்ற எனது கனவுகள் அடிப்படையில் நிதி துறையிலும் தமிழகம் முதலாவது இடத்தை பெற வங்கிகள் அனைத்தும் தன்னுடைய நடவடிக்கைகளை இரட்டிப்பாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தொலைபேசி மூலம் வங்கியில் பதிவு செய்தல் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் போன்றவை வளர்ந்தும் வரும் நேரத்தில் தொழில்நுட்ப அடிப்படையில் வங்கி பணிகளை விரிவுப்படுத்த வேண்டி உள்ளது. வங்கிகள் தொழில்நுட்பத்தை வளர்த்து அதில் அதிக மக்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
அரசின் வரிகளையும் நீண்டகாலமாக வசூலித்து வருகின்றன. தற்போது சம்பளங்களையும் வங்கிகளின் மூலமாக அரசு அளித்து வருகிறது. சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களையும் வங்கிகளின் மூலமாகவே விநியோக்கிறோம். இந்த நடவடிக்கை இப்போது ஆரம்பித்துள்ளது. இதை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டமும் வங்கிகளின் மூலமே நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொகுப்பான ஓய்வூதியம், கூலி, கல்வி உதவி தொகைகள் ஆகியவை மிகப்பெரிய வங்கி வணிகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளும், அரசும் தன்னுடைய உறவில் பங்கெடுத்து கொள்கின்றன.
என்னுடைய 2012-13 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் ஒருங்கிணைந்த நிதிமுறை மற்றும் மனிதவள ஆதார பராமரிப்பு முறை திட்டத்தை நான் அறிவித்தேன். இந்த அடிப்படையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை வங்கிகள் முழுமையாக கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மிகப்பெரும் அஸ்திவாரத்தை அமைத்துள்ளன. வறுமையை ஒழிப்பதில் இத்தகைய பணிகளை சிறப்பாக வங்கிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
2012-13-ம் ஆண்டில் பட்ஜெட் உரையில் தமிழ்நாடு நகர்ப்புற ஆதாரத்திட்டதை அறிவித்தேன். வங்கிகளின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாயத்துறையை பொறுத்தவரையில் முன்னுரிமை அளித்து வருகிறது. இத்துறைக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் முன்வரவேண்டும். இதற்கான குறியீட்டு தொகை 48,584 கோடியாகும். இவற்றின் தவணை முறைக்கடன் 17,010 கோடியாகும்.
2011-12-ல் இதற்கான குறியீடு 31,017 கோடியாகும். இதில் தவணைமுறைக்கடன் 7,518 கோடியாகும். இந்த குறியீடு மிஞ்சப்பட்டுள்ளது என்று நான் அறிகிறேன்.
தமிழ்நாடு பொருளாதாரம் மற்றும் சமுகம் மேம்பாட்டின் சகாப்பதத்தில் முக்கிய கட்டத்தில் உள்ளது. என்னுடைய தமிழ்நாடு 2023 தொலைநோக்கு திட்டம் வளமான தமிழ்நாட்டை உருவாக்க என்னுடைய தொலைநோக்கு பார்வையில் அடிப்படையாகக் கொண்டதாகும். அடுத்த 11 ஆண்டுகளில் இதற்கு 15 லட்சம் கோடி தேவைப்படும். 2023 தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்ற இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கி முதலாவதாக முன்வந்ததற்காக நான் பாராட்டுகிறேன்.
இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கி தன்னுடைய சவால்களை நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன். தன்னுடைய பணிகளை தொடர்ந்து நிறைவேற்றும். மேலும் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு வங்கி இணைப்பை பெற்று இந்தியாவிலேயே நிதி துறையில் தமிழகத்தை முதன்மையான மாநிலமாக்க மற்ற வங்கிகளை இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கியின் பணிகள் ஊக்கப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி வருங்காலத்தில் சிறந்த முறையில் வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர், வங்கியின் தலைமை அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.