எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.28 - தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக்க வங்கிகள் தங்கள் பணிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் ஓவர்சீஸ் வங்கியின் பிளாட்டினம் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் பேசியதாவது:-
இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கியின் பிளாட்டினம் விழா கொண்டாட்டங்களில் பங்குபெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த டிசம்பரில் வங்கியின் நிர்வாக இயக்குனர் நரேந்திரா என்னை சந்தித்தபோது தமிழ்நாட்டின் இந்த வங்கி 854 கிளைகளுடன் இணைந்த பணியை மேற்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். நரேந்திராவுக்கும் அவரது குழுவினருக்கும் ஒரு சவாலாக தமிழ்நாட்டில் ஆயிரமாவது கிளையை தொடங்க வேண்டும் என்று நான் கோரினேன். இவ்வளவு பெரிய அளவில் அவர்கள் செயல்படுவார்கள் என்று நான் எதிர் பார்க்கவில்லை. அதாவது, குறைந்த காலமான 6 மாதத்திலேயே அவர்கள் தமிழ்நாட்டில் 150 கிளைகளை தொடங்கிவிட்டார்கள். இந்த சிறப்பான சாதனைக்காக நரேந்திராவையும் அவரது குழுவினரையும் நான் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.
உள்நாட்டு வங்கி முறையில் தமிழர்களுக்கு என்று ஒரு தனித்த மரபு உள்ளது. கடன் அளித்தல், வட்டி விகிதத்தை நிர்ணயத்தல் மற்றும் சரியான கட்டண செலுத்தும் முறை ஆகிய வங்கி பணிகளை தமிழ்நாட்டின் பழம்பெரும் வணிக சமுதாயம் நல்ல முறையில் அறிந்திருந்தது. வரலாற்றின் மிக முக்கியமான கட்டத்தில் இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி 1937-ம் ஆண்டு பழம் பெரும் மரபுகளின் அடிப்படையில் உருவானது. 1930 ஆம் ஆண்டுகளில் வறட்சியின் காரணமாக முக்கிய தானியங்களில் விலை பிரச்சனை உருவானது. அந்த நேரத்தில் இந்தியாவின் ஏற்றுமதி மிகவும் வீழ்ச்சியடைந்தது. நாட்டின் பராமரிப்பு உறுதி தன்மை, ரூபாய் நோட்டு மற்றும் கடன் வழங்கும் முறையை பாதுகாக்கவும், 1935 ஏப்ரலில் இந்திய ரிசர்வ் வங்கி துவக்கப்பட்டது. நிறுவன ரீதியான வங்கி முறையில் இந்த சகாப்தத்தில் இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி முதல் மிகவும் பெரும் வங்கியாக நிர்வாகத்தை பெற்றுள்ளது. எம்.சிதம்பரம் செட்டியார் 30 வயதாக இருந்தபோது இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்தார். இதனை நாம் மிகவும் பெருமையுடனும், நன்றியுடனும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரால் தொடங்கப்பட்ட சிறிய வங்கி, மிகப்பெரிய உலகளாவிய அமைப்பாகவும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து முன்னோடி வங்கியாக திகழ்கிறது.
இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி எனக்கு புதியது அல்ல. அது தேசியமயம் ஆக்கப்பட்டதற்கு. முன்னும் பின்னும் இருந்து அதனை பார்த்து வருகிறேன். இந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் நானும் ஒருவர். மிகப்பெரிய சேவை இணைப்புக்காகவும், 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டு பொறுப்புடன் நடந்து வருவதால் தமிழகத்தில் அது முக்கிய இடத்தை பெற்று வருகிறது. ஓரத்தில் உள்ள கிராமங்கள், மகளிர் குழுக்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் தொகை உட்பட மாநிலத்தில் முன்னணி நடவடிக்கைகளை இந்த வங்கி எடுத்த வருகிறது என்பதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீலகிரி ஆதிவாசி மக்களுக்காக இந்த வங்கி நிதி அடிப்படையில் எடுத்த முன் முயற்சிகளுக்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்று உள்ளது. 2008-ல் உலகளாவிய பொருளாதார சிக்கலினால் மிகப்பெரிய தடுமாற்றம் ஏற்பட்டபோது, சில்லறை வங்கியியல் திட்டம் என்ற வாய்ப்பை பயன்படுத்தி இந்த வங்கி மீண்டும் தன்னை உருவாக்கியுள்ளது. இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கியை போல, உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பான நிறுவனங்களின் தமிழ்நாட்டில் நிதிமுறையை உண்மையில் மிகப்பெரிய அளவில் விரிவுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. நிதி என்பது பொருளாதாரத்தின் உயிர் தரும் இரத்தம் போன்றது. தன்னிறைவுக்கும் முக்கியமானது, பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியது. சேமிப்பு, வைப்புத் தொகை, தொகை செலுத்தும் சேவைகள் மற்றும் கடன் போன்ற நிதி சேவைகளில் மிகப்பெரிய எண்ணிகையிலான குடும்பங்கள் இணைவதை அதிகரிக்கும் வகையில் வங்கி பணிகள் உள்ளன. மேலும் மேலும் அதிக மக்களுக்கு நிதித் தேவைகள் அதிகமாக உள்ளது. மின்சாரம், குடிநீர் வழங்கல் மற்றும் தொலைபேசி போல பொது மக்கள் சேவையில் வங்கி பணியும் மிக முக்கியமாக வளர்ந்து வருகிறது.
பொருளாதார மேம்பாட்டை பொருத்தவரையில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் சேமிப்பை உற்பத்தி துறையில் முதலீடு செய்கின்றன. உற்பத்தி இல்லாத துறைகளில் முதலீடு செய்வது இல்லை. தற்போது இந்தியாவில் குடும்பங்களின் சேமிப்பில் 50 சதவிதம் நிதி சொத்துக்களுக்காகவும், மற்றவை நிலையான சொத்துகளுக்காகவும் முதலீடு செய்யப்படுகிறது. மேலும் இந்த சேமிப்புகளில் வணிக வங்கிகளில் 42 சதவிகிதமும், வங்கி சேமிப்புகளில் 61.2 சதவிதமும் செலுத்தப்படுகின்றன. 2010-11 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் இதைத் தெரிவிக்கிறது. நிதி சேமிப்புகளில் பங்கு பெறுவதிலும், வணிக வங்கிகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதை இது காட்டுகிறது. உலகிலுள்ள 2.5 மில்லியன் வங்கி கணக்கு வைத்தில்லாத மக்கள் தொகையின் 6-ல் ஒரு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
இந்தியாவின் மாநிலங்களை ஒப்பிடும்போது நிதி குறியீட்டில் தமிழகம் 7-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு முதன்மையானதாக வளர வேண்டும் என்ற எனது கனவுகள் அடிப்படையில் நிதி துறையிலும் தமிழகம் முதலாவது இடத்தை பெற வங்கிகள் அனைத்தும் தன்னுடைய நடவடிக்கைகளை இரட்டிப்பாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தொலைபேசி மூலம் வங்கியில் பதிவு செய்தல் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் போன்றவை வளர்ந்தும் வரும் நேரத்தில் தொழில்நுட்ப அடிப்படையில் வங்கி பணிகளை விரிவுப்படுத்த வேண்டி உள்ளது. வங்கிகள் தொழில்நுட்பத்தை வளர்த்து அதில் அதிக மக்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
அரசின் வரிகளையும் நீண்டகாலமாக வசூலித்து வருகின்றன. தற்போது சம்பளங்களையும் வங்கிகளின் மூலமாக அரசு அளித்து வருகிறது. சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களையும் வங்கிகளின் மூலமாகவே விநியோக்கிறோம். இந்த நடவடிக்கை இப்போது ஆரம்பித்துள்ளது. இதை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டமும் வங்கிகளின் மூலமே நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொகுப்பான ஓய்வூதியம், கூலி, கல்வி உதவி தொகைகள் ஆகியவை மிகப்பெரிய வங்கி வணிகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளும், அரசும் தன்னுடைய உறவில் பங்கெடுத்து கொள்கின்றன.
என்னுடைய 2012-13 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் ஒருங்கிணைந்த நிதிமுறை மற்றும் மனிதவள ஆதார பராமரிப்பு முறை திட்டத்தை நான் அறிவித்தேன். இந்த அடிப்படையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை வங்கிகள் முழுமையாக கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மிகப்பெரும் அஸ்திவாரத்தை அமைத்துள்ளன. வறுமையை ஒழிப்பதில் இத்தகைய பணிகளை சிறப்பாக வங்கிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
2012-13-ம் ஆண்டில் பட்ஜெட் உரையில் தமிழ்நாடு நகர்ப்புற ஆதாரத்திட்டதை அறிவித்தேன். வங்கிகளின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாயத்துறையை பொறுத்தவரையில் முன்னுரிமை அளித்து வருகிறது. இத்துறைக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் முன்வரவேண்டும். இதற்கான குறியீட்டு தொகை 48,584 கோடியாகும். இவற்றின் தவணை முறைக்கடன் 17,010 கோடியாகும்.
2011-12-ல் இதற்கான குறியீடு 31,017 கோடியாகும். இதில் தவணைமுறைக்கடன் 7,518 கோடியாகும். இந்த குறியீடு மிஞ்சப்பட்டுள்ளது என்று நான் அறிகிறேன்.
தமிழ்நாடு பொருளாதாரம் மற்றும் சமுகம் மேம்பாட்டின் சகாப்பதத்தில் முக்கிய கட்டத்தில் உள்ளது. என்னுடைய தமிழ்நாடு 2023 தொலைநோக்கு திட்டம் வளமான தமிழ்நாட்டை உருவாக்க என்னுடைய தொலைநோக்கு பார்வையில் அடிப்படையாகக் கொண்டதாகும். அடுத்த 11 ஆண்டுகளில் இதற்கு 15 லட்சம் கோடி தேவைப்படும். 2023 தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்ற இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கி முதலாவதாக முன்வந்ததற்காக நான் பாராட்டுகிறேன்.
இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கி தன்னுடைய சவால்களை நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன். தன்னுடைய பணிகளை தொடர்ந்து நிறைவேற்றும். மேலும் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு வங்கி இணைப்பை பெற்று இந்தியாவிலேயே நிதி துறையில் தமிழகத்தை முதன்மையான மாநிலமாக்க மற்ற வங்கிகளை இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கியின் பணிகள் ஊக்கப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி வருங்காலத்தில் சிறந்த முறையில் வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர், வங்கியின் தலைமை அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு: ஐ.ஏ.எஸ். தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வழங்கியது
30 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ்.
-
துருக்கியில் போலீசார் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி
30 Dec 2025அங்காரா, துருக்கியில் 6 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
30 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் குறித்து கருத்துகளை கேட்டறிய புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு: பாதுகாப்பு பணிக்கு 1 லட்சம் போலீசார் குவிப்பு
30 Dec 2025சென்னை, இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம்: நாளை முதல் அதிகரிப்பு
30 Dec 2025சென்னை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். பேச்சு
30 Dec 2025திருவள்ளூர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
-
தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
30 Dec 2025சென்னை, தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோவையில் 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் துணை முதல்வர் உதயநி
-
அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்: வீரபாண்டியில் ஜனவரி 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
30 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
-
பிரியங்காவின் மகன் ரைஹானுக்கு இன்று ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் டெல்லி பெண்ணை மணக்கிறார்
30 Dec 2025ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி.
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் பயணம்
30 Dec 2025டெல்லி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் செல்கிறார்.
-
ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி? அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு
30 Dec 2025கீவ், ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் படைகளால் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷ்ய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்பட்ட நிலையில் உக்ரைன
-
யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம்
30 Dec 2025சென்னை, யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அதிபர் புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் பகையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
30 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
30 Dec 2025சென்னை, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Dec 2025- திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
- ஆவுடையார்கோவில் மாணிக்க வாசகர் எல்லாம் வல்ல சித்தராய் காட்சி. இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.
- திருவிண்ணாழி பிரதட்சணம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Dec 2025 -
இன்றைய ராசிபலன்
30 Dec 2025



