முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சலபிரதேச பா.ஜ.க.ஆட்சியில் ஊழல் மலிந்துகிடக்கிறது காங்.குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 7 ஜூன் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஜுன் - 7 - இமாச்சல பிரதேச பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் மலிந்து கிடப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இமாச்சலபிரதேச பா.ஜ.க. அரசு பெருமளவு ஊழலில் ஈடுபட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து  இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பீரேந்திரசிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் நில ஊழல்கள் மற்றும் தொழிற்சாலை, நீர்மின் திட்டம் என்ற பெயர்களில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நில ஒதுக்கீடு செய்தது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சட்டத்திற்கு புறம்பாக நில பேரங்களை நடத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழல் பா.ஜ.க. அமைச்சர்கள் மீதும், அதிகாரிகள் மீதும்  விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்றும் அவர் கூறினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சட்டக் குழு ஆய்வுக்குப் பிறகு இமாச்சல பிரதேச பா.ஜ.க. அரசின் ஊழல்கள் குறித்த குற்றச்சாட்டு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இமாச்சல பிரதேச மாநிலத்தை விலைபேசி  விற்கும் பா.ஜ.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் பீரேந்திர சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்