எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கவுகாத்தி, ஜுலை - 2 - ஜனாதிபதி தேர்தலில் மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள் என்று எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பி.ஏ.சங்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற 24 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதி தேர்தல் வருகிற 19 ம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அ.தி.மு.க., பாரதிய ஜனதா, பிஜு ஜனதாதளம் மற்றும் பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவும் நேருக்கு நேர் களம் காண்கிறார்கள். பிரணாப் முகர்ஜிக்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தாலும் தான் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்று சங்மா உறுதியாக தெரிவித்துள்ளார். அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் செய்தியாளர்களை சந்தித்த பி.ஏ.சங்மா, ஜனாதிபதி தேர்தல் கட்சி சார்பாக நடத்தப்படும் தேர்தல் அல்ல, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் எதுவும் ஒதுக்கப்படாது. எம்.பி.க்களுக்கோ, எம்.எல்.ஏ.க்களுக்கோ கட்சிகளின் கொறடாக்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அரசியல் சட்ட விதிமுறைகளின்படி மிகவும் ரகசியமாக இந்த வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நானும், பிரணாப்பும் எந்த கட்சிகளையும் சாராதவர்களாக உள்ளோம். ஏனெனில் நாங்கள் இருவருமே அவரவர் சார்ந்த கட்சிகளில் இருந்து ராஜினாமா செய்துவிட்டோம். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் என்னை முன்மொழிந்துள்ளனர். மேலும் தேசிய முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனதா தளம், சிவசேனா போன்ற சில கட்சிகளைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் எனக்கு ஆதரவளித்துள்ளன. கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எனக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெறத் தேவையான ஓட்டுக்கள் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் இதுவரை 9 முறை பாராளுமன்றத்திற்கும், இரண்டு முறை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். நான் போட்டியிட்ட எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளேன். அதேபோல் இந்த ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றிபெறுவேன். ஜனாதிபதி தேர்தலின் முடிவு வந்தபிறகுதான் எனக்கு கிடைத்துள்ள ஆதரவு குறித்து அனைவரும் ஆச்சரியப்பட இருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் எனக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள கட்சிகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் ஆதரவை கோரியிருக்கிறேன். அவர் தமது கட்சி நிர்வாகக் குழுவைக் கூட்டி இதுகுறித்து விரைந்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார். அசாமில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள போடோ லேண்ட் மக்கள் முன்னணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வரும் எனக்கு அதிசயங்கள் அற்புதங்கள் மீது நம்பிக்கையுண்டு. அதே நேரத்தில் அந்த நம்பிக்கை மட்டும் வெற்றியை தந்துவிடாது கடுமையான உழைப்பும் வேண்டும் என்பதால் இந்த தேர்தலில் கடுமையாக பாடுபட்டு வருகிறேன். எனென்றால் நான் ஒரு கடுமையான உழைப்பாளி என்றும் சங்மா தெரிவித்தார். அசாம் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சங்மா, மத்திய அமைச்சராகவும், பாராளுமன்ற சபாநாயகராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் 375 பொருட்களின் விலை மேலும் குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
20 Sep 2025கோவில்பட்டி, ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி.
-
சாலை விபத்தில் ஆசிரியை பலி: குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
20 Sep 2025விழுப்புரம், விழுப்புரத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்
21 Sep 2025கர்நாடகா : கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா.
-
எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் : மத்திய அரசு கருத்து
21 Sep 2025புதுடெல்லி : எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.