எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கவுகாத்தி, ஜுலை - 2 - ஜனாதிபதி தேர்தலில் மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள் என்று எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பி.ஏ.சங்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற 24 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதி தேர்தல் வருகிற 19 ம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அ.தி.மு.க., பாரதிய ஜனதா, பிஜு ஜனதாதளம் மற்றும் பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவும் நேருக்கு நேர் களம் காண்கிறார்கள். பிரணாப் முகர்ஜிக்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தாலும் தான் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்று சங்மா உறுதியாக தெரிவித்துள்ளார். அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் செய்தியாளர்களை சந்தித்த பி.ஏ.சங்மா, ஜனாதிபதி தேர்தல் கட்சி சார்பாக நடத்தப்படும் தேர்தல் அல்ல, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் எதுவும் ஒதுக்கப்படாது. எம்.பி.க்களுக்கோ, எம்.எல்.ஏ.க்களுக்கோ கட்சிகளின் கொறடாக்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அரசியல் சட்ட விதிமுறைகளின்படி மிகவும் ரகசியமாக இந்த வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நானும், பிரணாப்பும் எந்த கட்சிகளையும் சாராதவர்களாக உள்ளோம். ஏனெனில் நாங்கள் இருவருமே அவரவர் சார்ந்த கட்சிகளில் இருந்து ராஜினாமா செய்துவிட்டோம். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் என்னை முன்மொழிந்துள்ளனர். மேலும் தேசிய முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனதா தளம், சிவசேனா போன்ற சில கட்சிகளைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் எனக்கு ஆதரவளித்துள்ளன. கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எனக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெறத் தேவையான ஓட்டுக்கள் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் இதுவரை 9 முறை பாராளுமன்றத்திற்கும், இரண்டு முறை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். நான் போட்டியிட்ட எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளேன். அதேபோல் இந்த ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றிபெறுவேன். ஜனாதிபதி தேர்தலின் முடிவு வந்தபிறகுதான் எனக்கு கிடைத்துள்ள ஆதரவு குறித்து அனைவரும் ஆச்சரியப்பட இருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் எனக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள கட்சிகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் ஆதரவை கோரியிருக்கிறேன். அவர் தமது கட்சி நிர்வாகக் குழுவைக் கூட்டி இதுகுறித்து விரைந்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார். அசாமில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள போடோ லேண்ட் மக்கள் முன்னணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வரும் எனக்கு அதிசயங்கள் அற்புதங்கள் மீது நம்பிக்கையுண்டு. அதே நேரத்தில் அந்த நம்பிக்கை மட்டும் வெற்றியை தந்துவிடாது கடுமையான உழைப்பும் வேண்டும் என்பதால் இந்த தேர்தலில் கடுமையாக பாடுபட்டு வருகிறேன். எனென்றால் நான் ஒரு கடுமையான உழைப்பாளி என்றும் சங்மா தெரிவித்தார். அசாம் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சங்மா, மத்திய அமைச்சராகவும், பாராளுமன்ற சபாநாயகராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சோனியா மருத்துவமனையில் அனுமதி
06 Jan 2026புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
திடீர் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு: இந்தோனேசியாவில் 9 பேர் பலி
06 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான வடக்கு சுலவேசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முகமது சமி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் சம்மன்
06 Jan 2026கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
06 Jan 2026டோக்கியோ, ஜப்பானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சுனாமி ஏற்படும் அச்சம் மக்கள் இடையே ஏற்பட்டது.
-
அதிபர் ட்ரம்ப்புடன் நோபல் பரிசை பகிர விரும்பும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்
06 Jan 2026காரகஸ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
வெனிசுலாவில் தேர்தல் கிடையாது: ட்ரம்ப்
06 Jan 2026வாஷிங்டன், வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெனிசுலாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவ
-
தொடர்ந்து சாதனைகளை படையுங்கள்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
06 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை நிச்சயம் பழிதீர்ப்போம்: நிகோலஸ் மதுரோவின் மகன் உறுதி
06 Jan 2026நியூயார்க், அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம் என்று அமெரிக்க படையால் கைது செய்யப்பட்ட நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-01-2026
07 Jan 2026


