எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம், ஜூலை. 28 - இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா பிரதமரை வலியுறுத்தியதால் மீனவர்கள் 23 பேரையும் நேற்று இலங்கை அரசு விடுதலை செய்தது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21 ம் தேதி படகுகளில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மோட்சம், செல்லதுரை, முருகன், ஜஸ்டின் ஆகியோருக்கு சொந்தமான 5 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் படகில் இருந்த மீனவர்கள் ராஜூ, சூலியான்ஸ், விவால்டன், எஸ்ரோம், கிறிஸ்டோபர், பாலமுருகன், மாரி, பஞ்சவர்ணம், முருகன், சுப்பிரமணி, முருகேசன், திருமுருகன், முனியசாமி, மாயமுருகன், நம்புராஜன், முத்துமாணிக்கம், அண்ணாமலை, முருகன், அந்தோணி சிலுவை, கருப்பையா, நசீர், கோவிந்தன் உள்ளிட்ட 23 பேரையும் கைது செய்து தலைமன்னார் போலீசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
இதன் பின்னர் கடந்த 22 ம் தேதி மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி வரை அனுராதபுரம் சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மீனவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கை தொடர்ந்து வலியுறுத்தியும், கடிதமும் எழுதினார். அதன்படி மீனவர்களை விடுதலை செய்யும்படி மத்திய அரசு இலங்கை அரசை கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில் நேற்று மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்ற நீதிபதி அந்தோணிபிள்ளை சூட்சன் உத்தரவிட்டார். இம்மீனவர்கள் 5 படகுடன் ஓரிரு தினங்களில் இந்திய கடலோர காவல் படை மூலம் பாதுகாப்புடன் ராமேஸ்வரம் கரைக்கு திரும்ப உள்ளதாகவும், மீனவர்கள் 23 பேரும் வெகு விரைவில் விடுதலை செயப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவுதான் காரணம். அதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா முயற்சி வெற்றி:
முதல்வர் ஜெயலலிதா எடுத்த தொடர் முயற்சிகளை அடுத்து தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
21.7.2012 அன்று மீன்பிடிப்பதற்காக ஐந்து படகுகளில் புறப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 22.7.2012 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சார்ந்த 23 மீனவர்களையும், 5 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், தங்களது வாழ்வாதாரத்திற்காக இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை சிறைபிடிக்கக் கூடாது என இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்துமாறு இலங்கை அரசை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் 23.7.2012 நாளிட்ட கடிதத்தில் பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டார்.
மேலும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு சிறையிடப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவினையடுத்து, தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் சிறை பிடிக்கப்பட்ட 23 மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து முயற்சி எடுத்தனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடனடி நடவடிக்கையினையடுத்து, 22.07.2012 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் மன்னார் குற்றவியல் நடுவர் திமன்றத்தால் நேற்று (27.7.2012) விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.