தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, ஆக. - 16 - மும்பையில் 1993 ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு முன்பாக தீவிரவாதி தாவூத் இப்ராகிம் தனது வீட்டில் வைத்த விருந்து நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார். 1993 ம் ஆண்டு மும்பையில் தொடர் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. அதில் 277 பேர் கொல்லப்பட்டனர். 700 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். அவர் மீது துப்பாக்கி வைத்திருந்தது, தாவூத்துடன் தொடர்பு கொண்டிருந்தது என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் சஞ்சய் தத். இந்த வழக்கின் விசாரணையின்போது, மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு முன்பாக தாவூத் இப்ராகிம் சார்பில் சஞ்சய் தத்திடம் ஏ.கே 56 ரக துப்பாக்கிகள், ஒரு பிஸ்டல், கிரனேடுகள் ஆகியவற்றைக் கொடுத்துள்ளனர். அதை சில நாட்களில் சஞ்சய் தத் திருப்பி அனுப்பி விட்டார். ஆனால் ஒரே ஒரு ஏ.கே 56 ரக துப்பாக்கியை மட்டும் தன்னிடமே வைத்துக் கொண்டார். சஞ்சய் தத்திடம் கொடுக்கப்பட்ட ஆயுதங்களைத்தான் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தாவூத் கும்பலைச் சேர்ந்த தீவிரவாதிகள் பயன்படுத்தினர் என்று சி.பி.ஐ குற்றம் சாட்டியிருந்தது. மேலும் தாவூத்துடன் சஞ்சய் தத்துக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் கூறியிருந்தது. இந்த வழக்கில் 2007ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், சட்டவிரோதமாக துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்ததற்காக சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. பின்னர் அவர் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். ஜாமீனும் கோரினார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட் சஞ்சய் தத்துக்கு ஜாமீன் அளித்தது. தற்போது அப்பீல் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, தாவூத் இப்ராகிமுக்கும், சஞ்சய் தத்துக்கும் இடையிலான நட்பு குறித்து நீதிபதிகள் கேட்டனர். நேற்றைய விசாரணையின்போது சஞ்சய் தத் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் அவரது வக்கீல் ஹரீஷ் சால்வே கூறுகையில், மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு முன்பு துபாயில் தாவூத் இப்ராகிம் தனது வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் சஞ்சய் தத் கலந்து கொண்டார்.
இந்த விருந்தில் பாலிவுட் தயாரிப்பாளர்கள் இருவரும் கூட கலந்து கொண்டனர். இதைத் தவிர சஞ்சய் தத்துக்கும், தாவூத் இப்ராகிமுக்கும் வேறு எந்த உறவும், தொடர்பும் இல்லை என்றார் சால்வே. சால்வே மேலும் கூறுகையில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் மும்பையில் அப்போது பிரபலமான காங்கிரஸ் எம்.பியாக இருந்த சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தத்துக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால்தான் பாதுகாப்புக்காக இந்த துப்பாக்கிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை சஞ்சய் தத் குடும்பத்தினர் திருப்பி அனுப்பி விட்டனர் என்று வக்கீல் ஹரீஸ் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 23-05-2022
23 May 2022 -
காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்
23 May 2022இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு- அதிபர் ஜெலன்ஸ்கி கவலை
23 May 2022உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
-
குரங்கு காய்ச்சல் - 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு
23 May 2022ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
23 May 2022குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
23 May 2022கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக பதவியேற்றார் அந்தோணி அல்பானீஸ்
23 May 2022கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்: பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 May 2022பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'
23 May 2022தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
-
போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு
23 May 2022ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை
23 May 2022கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் அதிபர் ஜோ பைடன் சூளுரை
23 May 2022தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்து பேசுகிறார் : அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்
23 May 2022கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
-
போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை
23 May 2022சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.