எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத், நவ.22 - இந்திய மீனவர்கள் 12 பேரை பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அரபிக் கடலில் இந்திய மீனவர்கள் 12 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் மீனவர்களின் படகுகளை தடுத்து நிறுத்தினர்.
பாகிஸ்தான் எல்லைக்குள் மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு மாதத்தில்மட்டும் இதுவரை 78 பேரை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். தற்போது கைதான 12 மீனவர்களும், பாகிஸ்தான் துறைமுக போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் முகமது பரூக் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீனவர் அமைப்பின் பிரதிநிதி சசி மேனன் இதுபற்றி கூறியதாவது: பாகிஸ்தான் சிறையில் தற்போது 160 மீனவர்கள் உள்ளனர். இந்த ஆண்டு 676 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக பாகிஸ்தான் மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 64 பேரை இந்தியா விடுதலை செய்துள்ளது. இன்னும் 125 பேரை இந்கியா விடுதலை செய்ய வேண்டும்.
மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் இருநாட்டு மீனவர்களுக்கும் குறிப்பிட்ட தூரம் வரை கடலில் சென்று மீன் பிடிக்க லைசென்ஸ் வழங்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


