எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, பிப்.10 - தமிழ்நாடு கலாச்சார பெருமையும்,தொய்மையும் வாய்ந்த நாடு என்று கவர்னர் ரோசய்யா தெரிவித்தார். மதுரையின் தொன்மையையும், பழம்பெருமையையும் அனைவருக்கும் எடுத்துக் கூறுகின்ற வகையில் மதுரை மக்களால் கொண்டாடப்பட்டு வரும் மாமதுரை போற்றுவோம் விழாவின் இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் கே.ரோசைய்யா பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி விழாப்பேருரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் கே.ரோசைய்யா பேசும் பொழுது தெரிவித்ததாவது,
மதுரையின் வரலாற்று சிறப்புகளை நினைவு கூறுகின்ற வகையிலும், கலாச்சாரத்தை போற்றுகின்ற வகையிலும் இந்த மாமதுரை விழாவை நடத்துகின்ற விழாக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்குவதிலும், விழாப்பேருரையாற்றுவதிலும் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியா மிகப்பெரிய கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், நாகரீகத்திலும் பெருமை வாய்ந்த நாடாக 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து திகழ்ந்து வருகிறது. பல மொழிகள், பல மதங்கள், என்று பல்வேறுபட்ட மக்கள் வாழும் நாடு இந்தியா. தமிழ்நாடு கலாச்சார பெருமையும், தொன்மையும் வாய்ந்த நாடு. குறிப்பாக மதுரைக்கென்று தனிவரலாறு உள்ளது. மதுரையில்தான் திறமைவாய்ந்த தமிழ்புலவர்களைக் கொண்டு பழமைவாய்ந்த மூன்று தமிழ்ச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துக் கூறிய இடம் மதுரை.
நமது கலாச்சாரத்தின் பெருமைகள் கோயில்களை பார்த்தாலே தெரியும். பழங்காலத்தில் கோயில் என்பது புலவர்கள், இசைஆர்வலர்கள், நாட்டியமாடுபவர்கள், தங்களின் திறமையை முதல் முதலில் வெளிப்படுத்தும் இடமாக இருந்தது. கோயில்கள் நாகரீகத்தின் மையமாக திகழ்ந்தது. கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் பெருமை வாய்ந்த கோயில் நகரமாக மதுரை திகழ்கிறது.
அத்தகைய பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க மதுரையின் தொன்மையை விளக்குகின்ற வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதைப்போன்றே தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழாக்கள் கொண்டாடப்பட வேண்டும் என்றார்.
கலெக்டர் அன்சுல்மிஸ்ரா பேசும்போது,மதுரை மாவட்ட நிர்வாகம் மாமதுரை போற்றுவோம் விழாக்குழுவிற்கு முடிந்த வரையில் அனைத்து வகையிலும் இயன்ற உதவியை செய்திருக்கிறது. இந்த மாமதுரை விழா இனிவரும் காலங்களிலும் ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை ்ர்க்கும் வண்ணம் மிகப்பெரிய விழாவாக அமைய வேண்டும்;. இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கும், விழாவை நடத்திக்கொண்டிருக்கும் விழாக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மாமதுரை போற்றுவோம் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, வினாடிவினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா முன்னிலை உரையாற்றினார். விழாக்குழுத்தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் ஆர்.நந்தகோபால் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், உதவி இயக்குநர் (தணிக்கை) ராஜசேகர், தேசிய தகவல் மைய அலுவலர் மைக்கேல் உள்ளிட்ட அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விழாக்குழுவின் துணைத்தலைவர்கள் திரு.கே.எஸ்.பரத் வரவேற்புரையாற்றினார். முடிவில் சு.வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.
கண்கவர் நடனம்- மேளத்துடன் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு
மதுரையில் கடந்த மூன்று நாட்களாக மதுரையை போற்றுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார ஊர்தி அணிவகுப்பு நேற்று மாலை 5 மணியளவில் மதுரை கல்லூரி மைதானத்தில் இருந்து புறப்பட்டது. இதை கவர்னர் ரோசய்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். கரகாட்ட கலைஞர்கள் முதலில் நடனம் ஆடியபடி வந்தனர். இதைதொடர்ந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், குறவன்குறத்தி ஆட்டம், செண்டை மேளம், நையாண்டி மேளம், ராகமேளம் என இசைத்தபடி வந்தனர். பின்னர் கல்லூரி மாணவ, மாணவிகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
இதை தொடர்ந்து அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. பெரியாறு அணை, அதை கட்டிய பென்னிகுவிக் உருவ சிலையுடன் கூடிய ஊர்தி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதை போல் மதுரை சந்திப்பு என்ற தலைபில் வந்த அலங்கார ஊர்தியும் பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்தது. இந்த ஊர்தி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த அலங்கார ஊர்தி ஊர்வலம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை ரோட்டின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு: 'பிரிக்ஸ்' கண்டனம்
07 Jul 2025ரியோ டி ஜெனிரோ, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.