எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, பிப்.10 - தமிழ்நாடு கலாச்சார பெருமையும்,தொய்மையும் வாய்ந்த நாடு என்று கவர்னர் ரோசய்யா தெரிவித்தார். மதுரையின் தொன்மையையும், பழம்பெருமையையும் அனைவருக்கும் எடுத்துக் கூறுகின்ற வகையில் மதுரை மக்களால் கொண்டாடப்பட்டு வரும் மாமதுரை போற்றுவோம் விழாவின் இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் கே.ரோசைய்யா பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி விழாப்பேருரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் கே.ரோசைய்யா பேசும் பொழுது தெரிவித்ததாவது,
மதுரையின் வரலாற்று சிறப்புகளை நினைவு கூறுகின்ற வகையிலும், கலாச்சாரத்தை போற்றுகின்ற வகையிலும் இந்த மாமதுரை விழாவை நடத்துகின்ற விழாக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்குவதிலும், விழாப்பேருரையாற்றுவதிலும் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியா மிகப்பெரிய கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், நாகரீகத்திலும் பெருமை வாய்ந்த நாடாக 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து திகழ்ந்து வருகிறது. பல மொழிகள், பல மதங்கள், என்று பல்வேறுபட்ட மக்கள் வாழும் நாடு இந்தியா. தமிழ்நாடு கலாச்சார பெருமையும், தொன்மையும் வாய்ந்த நாடு. குறிப்பாக மதுரைக்கென்று தனிவரலாறு உள்ளது. மதுரையில்தான் திறமைவாய்ந்த தமிழ்புலவர்களைக் கொண்டு பழமைவாய்ந்த மூன்று தமிழ்ச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துக் கூறிய இடம் மதுரை.
நமது கலாச்சாரத்தின் பெருமைகள் கோயில்களை பார்த்தாலே தெரியும். பழங்காலத்தில் கோயில் என்பது புலவர்கள், இசைஆர்வலர்கள், நாட்டியமாடுபவர்கள், தங்களின் திறமையை முதல் முதலில் வெளிப்படுத்தும் இடமாக இருந்தது. கோயில்கள் நாகரீகத்தின் மையமாக திகழ்ந்தது. கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் பெருமை வாய்ந்த கோயில் நகரமாக மதுரை திகழ்கிறது.
அத்தகைய பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க மதுரையின் தொன்மையை விளக்குகின்ற வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதைப்போன்றே தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழாக்கள் கொண்டாடப்பட வேண்டும் என்றார்.
கலெக்டர் அன்சுல்மிஸ்ரா பேசும்போது,மதுரை மாவட்ட நிர்வாகம் மாமதுரை போற்றுவோம் விழாக்குழுவிற்கு முடிந்த வரையில் அனைத்து வகையிலும் இயன்ற உதவியை செய்திருக்கிறது. இந்த மாமதுரை விழா இனிவரும் காலங்களிலும் ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை ்ர்க்கும் வண்ணம் மிகப்பெரிய விழாவாக அமைய வேண்டும்;. இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கும், விழாவை நடத்திக்கொண்டிருக்கும் விழாக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மாமதுரை போற்றுவோம் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, வினாடிவினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா முன்னிலை உரையாற்றினார். விழாக்குழுத்தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் ஆர்.நந்தகோபால் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், உதவி இயக்குநர் (தணிக்கை) ராஜசேகர், தேசிய தகவல் மைய அலுவலர் மைக்கேல் உள்ளிட்ட அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விழாக்குழுவின் துணைத்தலைவர்கள் திரு.கே.எஸ்.பரத் வரவேற்புரையாற்றினார். முடிவில் சு.வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.
கண்கவர் நடனம்- மேளத்துடன் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு
மதுரையில் கடந்த மூன்று நாட்களாக மதுரையை போற்றுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார ஊர்தி அணிவகுப்பு நேற்று மாலை 5 மணியளவில் மதுரை கல்லூரி மைதானத்தில் இருந்து புறப்பட்டது. இதை கவர்னர் ரோசய்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். கரகாட்ட கலைஞர்கள் முதலில் நடனம் ஆடியபடி வந்தனர். இதைதொடர்ந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், குறவன்குறத்தி ஆட்டம், செண்டை மேளம், நையாண்டி மேளம், ராகமேளம் என இசைத்தபடி வந்தனர். பின்னர் கல்லூரி மாணவ, மாணவிகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
இதை தொடர்ந்து அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. பெரியாறு அணை, அதை கட்டிய பென்னிகுவிக் உருவ சிலையுடன் கூடிய ஊர்தி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதை போல் மதுரை சந்திப்பு என்ற தலைபில் வந்த அலங்கார ஊர்தியும் பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்தது. இந்த ஊர்தி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த அலங்கார ஊர்தி ஊர்வலம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை ரோட்டின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு: சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் 2 23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏற்பாடு
07 Jan 2026சென்னை, தமிழக மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இன
-
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு
07 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்தால் பரபரப்பு
07 Jan 2026திண்டுக்கல், முதல்வர் ஸ்டாலின் சென்ற கார் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: ட்ரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்
07 Jan 2026நியூயார்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான புதிய தகவல்
07 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க.வுக்கு 17 முதல் 20 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு
07 Jan 2026தமிழகத்தில் ஜன. 9-ம் தேதி முதல் 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
என் தந்தை விரைவில் நாடு திரும்புவார்: வெனிசுலா நாடாளுமன்றத்தில் மதுரோ மகன் உருக்கமான பேச்சு
07 Jan 2026காரக்கா, அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் நாடு திரும்புவார் என பேரவையில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசினார் அவர
-
அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: டாக்டர் ராமதாஸ் முக்கிய தகவல்
07 Jan 2026சென்னை, இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.
-
பாக்.கிற்கு ரகசிய தகவல்களை அளித்த இந்திய சிறுவன் கைது
07 Jan 2026சண்டிகார், பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அளித்த பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
-
தமிழ்நாடு மக்களின் எண்ணப்படி அ.தி.மு.க. நல்லாட்சி அமைக்கும் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
07 Jan 2026சென்னை, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி அ.தி.மு.க. நல்லாட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
அதிகமான வரிவிதிப்பால் மோடி என் மீது வருத்தத்தில் உள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
07 Jan 2026வாஷிங்டன், நான் விதித்துள்ள வரிகளால் பிரதமர் மோடி தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
வரும் 2026 தேர்தல் நமது சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கும் சவால்: தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? அல்லது டெல்லயில் உள்ளவர்களா..? திண்டுக்கல் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
07 Jan 2026சென்னை, 2026 தேர்தல் என்பது, "தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டெல்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா?
-
இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளுக்கான இணையதள முன்பதிவை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி
07 Jan 2026சென்னை, இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளுக்கான இணையதள முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
திண்டுக்கல் மாவட்டத்திற்கு எட்டு புதிய அறிவிப்புகள்
07 Jan 2026திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்துக்கான 8 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.
-
நாளை நடைபெறவிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம்
07 Jan 2026சென்னை, சென்னையில் நாளை நடைபெறவிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம் செய்யப்பட்டது.
-
மாணவர்களுக்கு மடிக்கணினிகளை 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியிருக்க வேண்டும்: செங்கோட்டையன் கருத்து
07 Jan 2026சென்னை, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விவகாரம் குறித்து செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஜன. 28-ம் தேதி பிரதமர் தமிழ்நாடு வருகிறார்...? கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிரம்
07 Jan 2026சென்னை, வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகயுள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இறுதி செய்ய பா.ஜ.க.
-
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு: இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்த ஆலோசனை
07 Jan 2026புதுடெல்லி, இந்தியா-இஸ்ரேல் நட்புறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி கூறினார்.
-
இ.பி.எஸ்.சுடன் அன்புமணி சந்திப்பு: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க..!
07 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. இ.பி.எஸ்.
-
கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த விவகாரம்: மாணவிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
07 Jan 2026மதுரை, கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: வங்கதேசத்துக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்பு
07 Jan 2026லண்டன், இந்தியாவில் வங்கதேச அணி விளையாட இருந்த டி-20 உலக கோப்பைக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்முறைகள் அதிகரிப்பு...
-
அரசுக்கு எதிரான போராட்டங்கள்: ஈரானில் உயிரிழப்பு 36 ஆக உயர்வு
07 Jan 2026டெஹ்ரான், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அது தொடர்பான வன்முறைகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
-
கீழ் நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறை நிறுத்திவைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு
07 Jan 2026சென்னை, கீழ் நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
நியூசி.க்கு எதிரான தொடரில் விளையாடுகிறார் ஷ்ரேயாஸ் : பி.சி.சி.ஐ. வெளியிட்ட முக்கிய தகவல்
07 Jan 2026புதுடெல்லி, பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு ஷ்ரேயாஸ் அய்யருக்கு முழுஉடற்தகுதி சான்று அளித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் திருத்தம்: 6.20 லட்சம் பேர் விண்ணப்பம்
07 Jan 2026சென்னை, கடந்த சனி, ஞாயிறு அன்று நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் பெயர் சேர்க்க, திருத்தும் செய்ய 6.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து


