எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, பிப்.10 - தமிழ்நாடு கலாச்சார பெருமையும்,தொய்மையும் வாய்ந்த நாடு என்று கவர்னர் ரோசய்யா தெரிவித்தார். மதுரையின் தொன்மையையும், பழம்பெருமையையும் அனைவருக்கும் எடுத்துக் கூறுகின்ற வகையில் மதுரை மக்களால் கொண்டாடப்பட்டு வரும் மாமதுரை போற்றுவோம் விழாவின் இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் கே.ரோசைய்யா பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி விழாப்பேருரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் கே.ரோசைய்யா பேசும் பொழுது தெரிவித்ததாவது,
மதுரையின் வரலாற்று சிறப்புகளை நினைவு கூறுகின்ற வகையிலும், கலாச்சாரத்தை போற்றுகின்ற வகையிலும் இந்த மாமதுரை விழாவை நடத்துகின்ற விழாக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்குவதிலும், விழாப்பேருரையாற்றுவதிலும் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியா மிகப்பெரிய கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், நாகரீகத்திலும் பெருமை வாய்ந்த நாடாக 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து திகழ்ந்து வருகிறது. பல மொழிகள், பல மதங்கள், என்று பல்வேறுபட்ட மக்கள் வாழும் நாடு இந்தியா. தமிழ்நாடு கலாச்சார பெருமையும், தொன்மையும் வாய்ந்த நாடு. குறிப்பாக மதுரைக்கென்று தனிவரலாறு உள்ளது. மதுரையில்தான் திறமைவாய்ந்த தமிழ்புலவர்களைக் கொண்டு பழமைவாய்ந்த மூன்று தமிழ்ச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துக் கூறிய இடம் மதுரை.
நமது கலாச்சாரத்தின் பெருமைகள் கோயில்களை பார்த்தாலே தெரியும். பழங்காலத்தில் கோயில் என்பது புலவர்கள், இசைஆர்வலர்கள், நாட்டியமாடுபவர்கள், தங்களின் திறமையை முதல் முதலில் வெளிப்படுத்தும் இடமாக இருந்தது. கோயில்கள் நாகரீகத்தின் மையமாக திகழ்ந்தது. கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் பெருமை வாய்ந்த கோயில் நகரமாக மதுரை திகழ்கிறது.
அத்தகைய பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க மதுரையின் தொன்மையை விளக்குகின்ற வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதைப்போன்றே தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழாக்கள் கொண்டாடப்பட வேண்டும் என்றார்.
கலெக்டர் அன்சுல்மிஸ்ரா பேசும்போது,மதுரை மாவட்ட நிர்வாகம் மாமதுரை போற்றுவோம் விழாக்குழுவிற்கு முடிந்த வரையில் அனைத்து வகையிலும் இயன்ற உதவியை செய்திருக்கிறது. இந்த மாமதுரை விழா இனிவரும் காலங்களிலும் ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை ்ர்க்கும் வண்ணம் மிகப்பெரிய விழாவாக அமைய வேண்டும்;. இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கும், விழாவை நடத்திக்கொண்டிருக்கும் விழாக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மாமதுரை போற்றுவோம் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, வினாடிவினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா முன்னிலை உரையாற்றினார். விழாக்குழுத்தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் ஆர்.நந்தகோபால் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், உதவி இயக்குநர் (தணிக்கை) ராஜசேகர், தேசிய தகவல் மைய அலுவலர் மைக்கேல் உள்ளிட்ட அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விழாக்குழுவின் துணைத்தலைவர்கள் திரு.கே.எஸ்.பரத் வரவேற்புரையாற்றினார். முடிவில் சு.வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.
கண்கவர் நடனம்- மேளத்துடன் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு
மதுரையில் கடந்த மூன்று நாட்களாக மதுரையை போற்றுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார ஊர்தி அணிவகுப்பு நேற்று மாலை 5 மணியளவில் மதுரை கல்லூரி மைதானத்தில் இருந்து புறப்பட்டது. இதை கவர்னர் ரோசய்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். கரகாட்ட கலைஞர்கள் முதலில் நடனம் ஆடியபடி வந்தனர். இதைதொடர்ந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், குறவன்குறத்தி ஆட்டம், செண்டை மேளம், நையாண்டி மேளம், ராகமேளம் என இசைத்தபடி வந்தனர். பின்னர் கல்லூரி மாணவ, மாணவிகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
இதை தொடர்ந்து அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. பெரியாறு அணை, அதை கட்டிய பென்னிகுவிக் உருவ சிலையுடன் கூடிய ஊர்தி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதை போல் மதுரை சந்திப்பு என்ற தலைபில் வந்த அலங்கார ஊர்தியும் பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்தது. இந்த ஊர்தி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த அலங்கார ஊர்தி ஊர்வலம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை ரோட்டின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,