முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழ் நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறை நிறுத்திவைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 7 ஜனவரி 2026      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, கீழ் நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான அனைத்து கோர்ட்டுகளிலும், அனைத்து வகையான வழக்குகளையும் இ-பைலிங் முறையில்தான் தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மாநிலம் முழுவதும் வக்கீல்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நடைமுறை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சங்கங்கள் சார்பில் வழக்குகளும் தொடரப்பட்டு, விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கீழ் நீதிமன்றங்களில் இ - பைலிங் முறையை கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. 

ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘கீழ் கோர்ட்டுகளில் இ-பைலிங் முறையில் மட்டுமே வழக்குகளை தாக்கல் செய்யவேண்டும் என்ற நடைமுறையை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இ-பைலிங் நடைமுறை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து