முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானை தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.27 - காட்டு யானை தாக்கியதில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், குத்தியாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த  சித்தன் என்பவரின் மனைவி  சுசிலா 23.4.2013 அன்று காட்டு யானையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காட்டு யானை தாக்கியதில் அகால மரணமடைந்த சுசிலாவின்  குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தத்  துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சுசிலா குடும்பத்திற்கு  வனத்துறை மூலம் மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்