முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் சூதாட்டம் அம்பலமானது எப்படி? புதிய தகவல்கள்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே. 22 - கிரிக்கெட் சூதாட்டம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பது குறித்து மேலும் பல புதிய தகவல் கிடைத்துள்ளன. 

சென்ற மாதம், பெங்களூரில் பாரதீய ஜனதா அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் குற்றவாளிகளான 10 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது நடத்திய அதிரடி சோதனையில் பெங்களூர் போலீசாரின் கையில் கிரிக்கெட் சூதாட்ட ஆவணம் ஒன்று கிடைத்தது. அதன் மூலமே ஐ.பி.எல். லில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது வெளிச்சத்துக்கு வந்தது. 

கைதான அந்த தீவிரவாதி சூதாட்ட கும்பல் ஒன்றிடம் பணம் கட்டி ஏமாந்து உள்ளதும் தெரிய வந்தது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் இந்த தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் பேரிலேயே போலீசாரின் அதிரடி வேட்டையில் வீரர்களும், சூதாட்ட தரகர்களும் பிடிபட்டனர். கிரிக்கெட் சூதாட்ட தரகர்களின் தலைவனாக கருதப்படும் பிரசாந்த்துடன் ஸ்ரீசாந்த்க்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். ஸ்ரீசாந்த் சென்னை வரும் போதெல்லாம் பிரசாந்த்துடன் காரில் பல இடங்களில் சுற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவருக்கும் இடையேயான நட்பு பற்றி தற்போது போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago