முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஸ்கர்-இ-தைபா தீவிரவாதி என்கவுன்டரில் சாவு

வியாழக்கிழமை, 23 மே 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், மே.24 - ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் லஸ்கர்-இ-தைபா என்ற தீவிரவாத இயக்கத் தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர்  என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். ஸ்ரீநகரில் நர்பாரிஸ்தான் என்ற இடத்தில் ஹிலால் மவுல்வி என்ற தீவிரவாதி கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றபோது, ஒரு சப்இன்ஸ்பெக்டர், இரு போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.

போலீஸார் இவரை சுற்றிவளைத்து பிடிக்க முயற்சித்தபோது  இந்த என்கவுன்டர் நடந்தது. அவரை சரணடையுமாறு

நாங்கள் சமாதானம் செய்தபோது, அவர் தன் வசம் வைத்திருந்த பயங்கரமன ஆயுதத்தால் சுட்டார். பின்னர் போலீஸார் திருப்பிச் சுட்டனர்.  இதில் ஹிலால் மவுல்வி இறந்தார். இதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர். இவரை போலீஸார் பல வழக்ககுளில் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்