எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி,மே.5 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்தது தெரிந்ததே. இந்த வழக்கு தொடர்பாக நாளை 6 ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை தி.மு.க. எம்.பியுமான கனிமொழிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது, இதே வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குனர் கரீம் மொராணி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துக்கள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளனர்.
2 ஜி ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினியுக் நிறுவனத்தின் வழியாக கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரிப்பார்கள் எனத் தெரிகிறது.
இந்த வழக்கை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சி.பி.ஐ. அமைப்பும் விசாரித்து வருகிறது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் நாட்டுக்கு ரூ. 30,984 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தனது முதல் குற்றப்பத்திரிக்கையில் கூறிய சி.பி.ஐ. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா, ராசாவின் தனிச் செயலர் சந்தோலியா உள்ளிட்டோர் மீதும் ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறது. இதன் பிறகு கடந்த ஏப்ரல் 25 ம் தேதி தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிக்கையில் 2 ஜி முறைகேடு தொடர்பான சதியில் உடந்தையாக இருந்ததாக கனிமொழி மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. சரத்குமார், மொரானி உள்ளிட்ட 5 பேரின் பெயர்களும் துணை குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்தன.
இவர்கள் 5 பேரும் 6 ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி. சைனி அப்போது உத்தரவிட்டார். இந்த நிலையில் இவர்கள் 5 பேருக்கும் அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பி உள்ளது. ஒரு வேளை நாளை இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு அதனால் இவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில் இவர்களிடம் ஆய்வு செய்வதற்கு அமலாக்கத்துறை கோர்ட்டில் அனுமதி கோரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முன் ஜாமீன் கோரி சினியுக் நிறுவன இயக்குனர் மொரானி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க டெல்லி ஐகோர்ட் மறுத்து விட்டது. விசாரணை நீதிமன்றத்திலேயே இந்த மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இதற்கிடையில் அரசியல் தரகர் நீரா ராடியா சார்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு பத்திரிக்கையாளர் ஒருவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாகவும் மத்திய புலனாய்வு துறை பூர்வாங்க விசாரணையை தொடங்கியிருக்கிறது. ஆனால் பத்திரிக்கையாளர் உபேந்திரா ராயும், நீரா ராடியாவும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். ஆனால் அமலாக்கப்பிரிவு துறையோ இது தொடர்பாக சி.பி.ஐ. யில் ஒரு புகார் கொடுத்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் அது கேட்டுள்ளது. முன்னதாக பத்திரிக்கையாளர் உபேந்திரா ராய், அமலாக்கப் பிரிவின் உதவி இயக்குனர் ராஜேஸ்வர் சிங் என்பவரை சந்தித்து அவருக்கு ரூ. 2 கோடி கொடுக்க முன்வந்தாராம். ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைப்பதற்காக இப்படி கொடுக்க அவர் முயன்றாராம். இது தொடர்பாகவும் விசாரணை நடக்கவிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்
21 Sep 2025கர்நாடகா : கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா.
-
வாக்கு திருட்டு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : கர்நாடக அரசு நடவடிக்கை
21 Sep 2025பெங்களூரு : 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு
-
விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிரதமரின் தாயாரை அவமதித்ததாக ஆர்.ஜே.டி. மீது பா.ஜ.க. மீண்டும் குற்றச்சாட்டு
21 Sep 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பா.ஜ.க. மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி