எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, ஜூலை. 20 - தமிழ்நாடு முழுவதும் திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டிட விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட திமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஒரு கோஷ்டியாகவும், மற்றொரு முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் இன்னொரு கோஷ்டியாகவும், செயல்பட்டு வருகிறார்கள். இதனால் திருச்சி மாவட்ட திமுகவில் இரு கோஷ்டிகளும் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே வரும் 22ந்தேதியுடன் விண்ணப்பங்கள் வழங்கும் பணி முடிவடைய இருப்பதால் விண்ணப்பங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருச்சியை அடுத்த வயலூரில் மணிகண்டம் ஒன்றிய நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வந்தது. ஒரு திருமண மண்டபத்தில் கே.என்.நேரு கோஷ்டியினர் விண்ணப்பங்களை நேற்று காலை வழங்கினார்கள். மற்றொரு திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் கோஷ்டியினர் விண்ணப்பங்களை திமுகவினரிடம் வழங்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருதிருமண மண்டபத்திலும் திமுகவினர் குவிந்திருந்தனர். ஒரு மண்டபத்திற்கு நேற்று காலை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சென்று விண்ணப்பங்களை வழங்கி விட்டு மற்றொரு மண்டபத்திற்கு செல்ல ஆயத்தமானார். இதையடுத்து கே.என்.நேருவின் கார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டபோது ஒரு இருசக்கர வாகனம் மீது லேசாக உரசியது. அதில் வந்தவர் கே.என்.நேருவை பார்த்து ஆத்திரத்துடன் திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் நேருவின் அடியாள் ஒருவர் மொபட் ஓட்டிவந்தவர் மீது கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. அவரது சட்டையும் கிழிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கே.என்.நேரு வந்த கார் மீது இன்னொரு கோஷ்டியை சேர்ந்த திமுகவினர் சரமாரியாக கற்களை வீசினார்கள். இதனால் நேருவின் கார் பலத்த சேதமடைந்தது. இதையடுத்து இரு கோஷ்டியினரும் மாரிமாரி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் சில திமுகவினருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதி பெரும் கலவரப்பகுதியாக காட்சியளித்தது. பிறகு கே.என்.நேரு இன்னொரு மண்டபத்திற்கு சென்று விண்ணப்ப படிவங்களை கொடுத்து விட்டு சென்று விட்டார்.
கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் ஸ்ரீரங்கம் நகரில் நடந்த திமுக நிகழ்ச்சிகளில் இரு கோஷ்டியினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி திருச்சி மாவட்ட திமுக சார்பில் கே.என்.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மற்றொரு முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் ஏறாமல் நேருவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓரமாக நின்று போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஆகமொத்தம் திருச்சி மாவட்ட திமுகவில் கோஷ்டி சல் நீருத்த நெருப்பாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து: புதிதாக 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
07 Dec 2025சென்னை, மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025
07 Dec 2025 -
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் சனாதனத்தை எதிர்க்கிறோம்: அமைச்சர்
07 Dec 2025சென்னை, “இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு.
-
படைவீரர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு
07 Dec 2025டெல்லி, படைவீரர் கொடி நாள் நிதிக்கு மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு
07 Dec 2025கீர்ட், மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
-
பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம்: துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தல்
07 Dec 2025சென்னை, படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
07 Dec 2025கோவா, கோவா தீவிபத்தில் 23 பேர் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
07 Dec 2025கோவை, கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
07 Dec 2025பிரிஸ்பென், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
-
நாம் தமிழர் கட்சி சார்பில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
07 Dec 2025சென்னை, சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
-
கோவா தீ விபத்து குறித்து விரிவான விசாரணை தேவை: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
07 Dec 2025புதுடெல்லி, வடக்கு கோவாவின் அர்போராவில் இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள
-
4 மணிநேரம் காத்திருந்து திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
07 Dec 2025திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை நாளான நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீரா
-
களைகட்டும் விழாக்கால கொண்டாட்டம்: நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்
07 Dec 2025வாஷிங்டன், நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
-
ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு: அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
07 Dec 2025அலாஸ்கா, அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
டிச.13 வரை மழை பெய்ய வாய்ப்பு
07 Dec 2025சென்னை, தமிழகத்தில் டிச.13 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டம்: அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
07 Dec 2025கரூர், வருகிற 16-ம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
வளர்ச்சி திட்டங்களை சகித்துக்கொள்ளாமல் சதி செய்கிறார்கள்: மதுரையில் பிரிவினையை உருவாக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
07 Dec 2025மதுரை, வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியததால், சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது என்றும் எப்பட
-
சென்னையில் ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் 4-வது நாளாக அவதி
07 Dec 2025சென்னை, சென்னையில் ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் 4-வது நாளாக அவதிகுள்ளாகினர்.
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்னொரு முகத்தை காட்டி உள்ளார் நயினார்: சபாநாயகர் அப்பாவு தாக்கு
07 Dec 2025நெல்லை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்னொரு முகத்தை காட்டி உள்ளார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மீது சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: அமைச்சர் பெரியசாமி கருத்து
07 Dec 2025திண்டுக்கல், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை என அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
சட்டம் - ஒழுங்கு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
07 Dec 2025சென்னை, அ.தி.மு.க.
-
புதிய பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகள்: வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
07 Dec 2025மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி புதிய பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
-
கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள்: திருப்பூரில் டி.டி.வி.தினகரன் பேட்டி
07 Dec 2025திருப்பூர், கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025
07 Dec 2025 -
சூடானில் நடந்த டிரோன் தாக்குதலில் 116 பேர் பலி
07 Dec 2025கார்டூமின், சூடானில் டிரோன் தாக்குதலில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 116 பேர் பலியான சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


