முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்த் கெட்ட சவகாசத்தால் இப்படி ஆனான்! பாட்டி வேதனை

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஆக. 25 - மும்பையில் இளம் பத்திரிக்கையாளரை பலாத்காரம் செய்துவிட்டு சாவகாசமாக வீட்டில் போய் பாவ்பாஜி சாப்பிட்டுள்ளான் குற்றவாளி சந்த். மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் புகைப்பட நிருபராகப் பணிபுரிந்து வந்த 23 வயது பெண், கடந்த வியாழக்கிழமை மாலை தனது ஆண் நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுப்பதற்காக மும்பை லோயர் பேரல் பகுதியில் ஆள் அரவமின்றி பாழடைந்து கிடக்கும் சக்தி மில்ஸ் வளாகத்துக்கு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்தது. அப்பெண்ணின் நண்பரை தாக்கி, கட்டிப் போட்டது. பின்னர் அந்த 5 பேரும் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் இரவு 8.30 மணியளவுக்கே போலீசாருக்கு தெரியவந்தது. முன்னதாக 8 மணியளவில் அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களில் ஒருவரான சந்த் அப்துல் என்பவனை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு வீட்டில் போய் சாவகாசமாக வீட்டிற்குப் போய் சாப்பிட்டது தெரியவந்துள்ளது.

ஜெய் பவானி நகரில் பாட்டியுடன் வசித்து வந்த சந்த் அப்துல்க்கு பெற்றோர்கள் கிடையாது. வியாழனன்று மாலை 5.30 மணியளவில் அவனது நண்பர்கள் போன் செய்து சந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். உடனே கிளம்பி போன அவன் சில மணிநேரத்தில் திரும்பி வந்து விட்டதாக பாட்டி கூறியுள்ளார். பலமுறை கெட்ட நண்பர்களுடன் சேரவேண்டாம் என்று எச்சரித்தும் கேட்காமல் அவன் இவ்வாறு செய்து விட்டதாக பாட்டி கூறினார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வரும் போது பாவ்பாஜி வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட்டு விட்டு உறங்க போய் விட்டான் என்று அவனது பாட்டி கூறியுள்ளார்.

சந்த்திற்கு இரண்டு அண்ணன்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர். 9 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சந்த் நிலைமையை நினைத்து அவனது பாட்டி சர்னாபாய் கவலைப்படுகிறார். இளம் வயதிலேயே அவனது பெற்றோர்கள் மரணமடைந்துவிட்ட நிலையில் அவனை வளர்க்க சிரமப்பட்டதாக கூறுகிறார் பாட்டி. கெட்ட நண்பர்களின் சவகாசம்தான் இந்த அளவிற்கு அவனை செய்ய தூண்டிவிட்டதாக கூறுகிறார் பாட்டி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago