முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன் ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

ஐதராபாத், செப். 20 - வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வவும் 21 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் தமக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு அரசியல் செல்வாக்கை தவறாக பயன்படுத்தி முதலீடு திரட்டியதாகவும் கடந்த ஆண்டு மே மாதம் 27 ம் தேதி ஜெகன்மோகன் கைது செய்யப்பட்டு சஞ்சீவ் குடா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவரது நீதிமன்ற காவல் வருகிற 20 ம் தேதி முடிவடைகிறது. 

இந்நிலையில் இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் வழங்க கோரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஜெகன்மோகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெகனுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 23 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்