முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலார் பேனல் மோசடி: கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

திருவனந்தபுரம், அக். 27 - கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாக தொழிலதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக முதல்வர் உம்மன் சாண்டி குற்றம் சாட்டப்பட்டார். இதனால் இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த கேரள போலீசார் பத்தனம்திட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இது தொடர்பான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகை 239 பக்கங்களை கொண்டது. முதல் குற்றவாளியாக சரிதாநாயரும், 2, 3 வது குற்றவாளியாக அவரது கணவர் ராதாகிருஷ்ணனும், முதல்மந்திரியின் உதவியாளர் டென்னிஜோப்பனும் சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகையில் முதல்வரிடம் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியதாகவும் அதில் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ரூ. 40 லட்சத்தை இழந்த ஸ்ரீதரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடந்த வழக்கில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வேறு வழக்குகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்