எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.24 - வேலூர் பேருந்து நிலையத்திற்கான 9.75 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் தி.மு,க.வினருக்கு உறுதுணையாக இருந்து வருவதோடு பாதாள சாக்கடை திட்டத்தை கிடப்பில் போட்டிருக்கும் மைனாரிட்டி கருணாநிதி அரசை கண்டித்து நாளை (25.2.2011) அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே தி.மு.க.வினரால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலூர் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கென அரசால் கையகப்படுத்தப்பட உள்ள 9.75 ஏக்கர் நிலம் தி.மு.க.வினரின் கைக்குப் போகும் நிலை உருவாகி உள்ளது. எனது ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 8.7 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதோடு, பெருகி வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு தனியாருக்கு சொந்தமான 9.75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து தனியாரால் சென்னை உயர் nullநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் துரதிருஷ்டவசமாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை மைனாரிட்டி தி.மு.க. அரசு ஏற்றது. இதனையடுத்து, நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்த சென்னை உயர் nullநீதிமன்றம், விதிகளுக்கு உட்பட்டு பொது நோக்கத்திற்காக நிலத்தினை கையகப்படுத்த அனுமதி அளித்து 2008ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, தனியாருக்கு சொந்தமான 9.75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ஆட்சியருக்கு கருத்துரு அனுப்புவது தொடர்பான தீர்மானம் வேலூர் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு, இந்த நிலத்தை கையகப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மேற்படி 9.75 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு நில உரிமையாளரிடமிருந்து உள்ளூர் தி.மு.க. நபர் வாங்கிவிட்டதாகவும், மேற்படி நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை ரத்து செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, மாநகராட்சி ஆணையரிடம் கேட்கப்பட்டதற்கு, மாநகர் மன்றக் கூட்டத்தில் போடப்பட்ட ஒரு தீர்மானத்தை 6 மாதம் கழித்து ரத்து செய்ய முடியும் என்றும், புதிய இடத்தை கையகப்படுத்துவதற்கான நிதி மாநகராட்சியிடம் இல்லை என்றும், இந்தச் சூழ்நிலையில் அங்கு நடைபெறும் பணிகளில் தலையிட இயலாது என்றும், தற்போதுள்ள பேருந்து நிலையம் 25 ஆண்டுகளுக்குப் போதுமானது என்றும் பேட்டி அளித்திருக்கிறார். இது பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்துள்ளது. மாநகராட்சி ஆணையரின் இந்தப் பேட்டி மக்களின் புகாரினை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. மக்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சினை ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள். பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், 30 விழுக்காடு பணிகள் கூட முடிவடையவில்லை என்றும், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளிலும் சாக்கடை நீnullர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருப்பதாகவும், சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் அபகரிக்கப்படுவது குறித்தோ, பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிப்பது குறித்தோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மைனாரிட்டி தி.மு.க. அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, வேலூர் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 9.75 ஏக்கர் நிலத்தை அபகரிக்க திட்டமிட்டிருந்தும் தி.மு.க.வினருக்கு உறுதுணையாக செயல்படுகின்ற, பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆமை வேகத்தில் மேற்கொண்டு இருக்கின்ற மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், தி.மு.க.வினரின் நில அபகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், 25.2.2011 வெள்ளிக் கிழமை அன்று காலை 10 மணி அளவில், வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆதிராஜாராம் தலைமையிலும், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே. சிவசங்கரன், வேலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் வி. ரேணுகோபால் மற்றும் சத்துவாச்சாரி நகர அ.தி.மு.க. செயலாளர் ஏ.பி.எல். சுந்தரம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்
03 Dec 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்.
-
என்னை கொல்ல முயற்சி: பாக்., ராணுவம் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு
03 Dec 2025இஸ்லாமாபாத், என்னை கொல்ல பாகிஸ்தான் ராணுவம் முயல்வதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03/12/2025
03 Dec 2025 -
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு
03 Dec 2025கொல்கத்தா, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு அமித்ஷா தான் காரணம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
தேர்தல் ஆணையத்தை கண்டித்து மன்சூர் அலிகான் உண்ணாவிரத போராட்டம்
03 Dec 2025சென்னை : தேர்தல் ஆணையத்தை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஈடுபட்டுள்ளார்.
-
புதுச்சேரி முதல்வருடன் த.வெ.க. பொதுச்செயலாளர் மீண்டும் சந்திப்பு
03 Dec 2025புதுவை : புதுச்சேரி முதல்வருடன் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் சந்தித்து பேசினார்.
-
தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து மண்டலம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
03 Dec 2025சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனம
-
கார்த்திகை தீபத்திருவிழா: சுவாமிமலையில் தேரோட்டம்
03 Dec 2025சுவாமிமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் தேரோட்டம் நடைபெற்றது.
-
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைப்பு
03 Dec 2025டெல்லி : பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு
03 Dec 2025சென்னை : சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
-
சஞ்சார் சாதி செயலி: ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு
03 Dec 2025டெல்லி : சஞ்சார் சாதி செயலியால் மத்திய அரசுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் துணை முதல்வர் ஆய்வு செய்தாரா? - தமிழக அரசு விளக்கம்
03 Dec 2025சென்னை : மழை பாதிப்பு புகார் மீதான நடவடிக்கைக்கு கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
-
மும்பை விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
03 Dec 2025மும்பை : மும்பை விமான நிலையத்தில் உயரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
-
மதுரை அருகே சோகம்: டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
03 Dec 2025மதுரை : மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியில் வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு தொங்க விட்ட டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
-
மாலியில் கடத்தப்பட்ட ஐந்து இந்தியர்களை மீட்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை
03 Dec 2025புதுடெல்லி, ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 5.5 கோடி பேர் பாதிப்பு
03 Dec 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
ரஷ்ய கப்பல்கள் மீது தாக்குதல்: உக்ரைனுக்கு புதின் கடும் எச்சரிக்கை
03 Dec 2025மாஸ்கோ : உக்ரைன் துறைமுகங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்வு
03 Dec 2025சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மாயமான மலேசிய விமானம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு தேடும் பணி வரும் 30-ம் தேதி மீண்டும் தொடக்கம்
03 Dec 2025கோலாலம்பூர் : 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை மீண்டும் தேடும் பணி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
-
கார்த்திகை தீபத்திருவிழா: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
03 Dec 2025பழனி : கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது
-
வெனிசுலா மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
03 Dec 2025வாஷிங்டன் வெனிசுலாவுக்குள் புகுந்து விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு
03 Dec 2025சென்னை : தங்கம் விலை நேற்றும்அதிகரித்து விற்பனையானது.
-
திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பா?
03 Dec 2025சென்னை : திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வங்காளதேசத்தை சேர்ந்த கர்ப்பிணிப்பெண் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் அனுமதி
03 Dec 2025புதுடெல்லி, வங்காளதேசத்தில் இருந்து கர்ப்பிணிப்பெண்கள் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படை வழங்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தானில் எச்.ஐ.வி அதிகரிப்பு
03 Dec 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 80 சதவீதம் பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


