எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.24 - வேலூர் பேருந்து நிலையத்திற்கான 9.75 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் தி.மு,க.வினருக்கு உறுதுணையாக இருந்து வருவதோடு பாதாள சாக்கடை திட்டத்தை கிடப்பில் போட்டிருக்கும் மைனாரிட்டி கருணாநிதி அரசை கண்டித்து நாளை (25.2.2011) அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே தி.மு.க.வினரால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலூர் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கென அரசால் கையகப்படுத்தப்பட உள்ள 9.75 ஏக்கர் நிலம் தி.மு.க.வினரின் கைக்குப் போகும் நிலை உருவாகி உள்ளது. எனது ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 8.7 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதோடு, பெருகி வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு தனியாருக்கு சொந்தமான 9.75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து தனியாரால் சென்னை உயர் nullநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் துரதிருஷ்டவசமாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை மைனாரிட்டி தி.மு.க. அரசு ஏற்றது. இதனையடுத்து, நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்த சென்னை உயர் nullநீதிமன்றம், விதிகளுக்கு உட்பட்டு பொது நோக்கத்திற்காக நிலத்தினை கையகப்படுத்த அனுமதி அளித்து 2008ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, தனியாருக்கு சொந்தமான 9.75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ஆட்சியருக்கு கருத்துரு அனுப்புவது தொடர்பான தீர்மானம் வேலூர் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு, இந்த நிலத்தை கையகப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மேற்படி 9.75 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு நில உரிமையாளரிடமிருந்து உள்ளூர் தி.மு.க. நபர் வாங்கிவிட்டதாகவும், மேற்படி நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை ரத்து செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, மாநகராட்சி ஆணையரிடம் கேட்கப்பட்டதற்கு, மாநகர் மன்றக் கூட்டத்தில் போடப்பட்ட ஒரு தீர்மானத்தை 6 மாதம் கழித்து ரத்து செய்ய முடியும் என்றும், புதிய இடத்தை கையகப்படுத்துவதற்கான நிதி மாநகராட்சியிடம் இல்லை என்றும், இந்தச் சூழ்நிலையில் அங்கு நடைபெறும் பணிகளில் தலையிட இயலாது என்றும், தற்போதுள்ள பேருந்து நிலையம் 25 ஆண்டுகளுக்குப் போதுமானது என்றும் பேட்டி அளித்திருக்கிறார். இது பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்துள்ளது. மாநகராட்சி ஆணையரின் இந்தப் பேட்டி மக்களின் புகாரினை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. மக்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சினை ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள். பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், 30 விழுக்காடு பணிகள் கூட முடிவடையவில்லை என்றும், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளிலும் சாக்கடை நீnullர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருப்பதாகவும், சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் அபகரிக்கப்படுவது குறித்தோ, பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிப்பது குறித்தோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மைனாரிட்டி தி.மு.க. அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, வேலூர் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 9.75 ஏக்கர் நிலத்தை அபகரிக்க திட்டமிட்டிருந்தும் தி.மு.க.வினருக்கு உறுதுணையாக செயல்படுகின்ற, பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆமை வேகத்தில் மேற்கொண்டு இருக்கின்ற மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், தி.மு.க.வினரின் நில அபகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், 25.2.2011 வெள்ளிக் கிழமை அன்று காலை 10 மணி அளவில், வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆதிராஜாராம் தலைமையிலும், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே. சிவசங்கரன், வேலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் வி. ரேணுகோபால் மற்றும் சத்துவாச்சாரி நகர அ.தி.மு.க. செயலாளர் ஏ.பி.எல். சுந்தரம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.