முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது ஒரு நாள் போட்டி: மே.இ.தீவு அணி வெற்றி

புதன்கிழமை, 15 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

ஆன்டிகுவா, ஜூன். 15 - இந்திய அணிக்கு எதிராக ஆன்டிகுவா தீவில் நடைபெற்ற 4 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 103 ரன் வித்தியாச த்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியைச் சந்தித்தது. 

மே.இ.தீவு அணி தரப்பில் துவக்க வீரர் சிம்மன்ஸ் மற்றும் அதிரடி வீர ரான பொல்லார்டு ஆகியோர் அபாரமாக ஆடி அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். பாக் மற்றும் ரஸ்செல் ஆகியோர் அவருக்குப் பக்க பலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, மார்டின் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக் கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர, ரஸ்செல் மற்றும் சம்மி ஆகி யோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 4 -வது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவா தீவில் நார்த் சவுண்டில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. 

முன்னதாக நடைபெற்ற முதல் 3 போட்டியிலும் இந்திய அணி தொட ர்ந்து வெற்றி பெற்று 3 - 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதனால் இந்தப் போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டது. 

இதில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பீல்டிங்கை தேர் வு செய்தது. மே.இ.தீவு அணி தரப்பில், சிம்மன்ஸ் மற்றும் ஹியாட் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் களம் இறங்கிய மே.இ.தீவு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரி ல் 8 விக்கெட்டை இழந்து 249 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

அதிரடி வீரரான பொல்லார்டு அதிகபட்சமாக 72 பந்தில் 70 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் அஸ்வின் வீசிய பந்தில் இஷாந்த் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக துவக்க வீரர் சிம்மன்ஸ் 78 பந்தில் 67 ரன்னை எடுத்தா ர். இதில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, கார்ல்டன் பாக் 57 பந்தில் 39 ரன்னையும், ரஸ்செல் 14 பந்தில் 25 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி தரப்பில், பிரவீன் குமார் 37 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். அமித் மிஸ்ரா 56 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

இந்திய அணி 250 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை மே.இ.தீவு அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந் த அணி 39 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 146 ரன்னை எடுத்தது. 

இதனால் மே.இ.தீவு அணி இந்த 4 - வது போட்டியில் 103 ரன் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொ  ண்ட இந்தத் தொடர் 3 - 1 என்ற கணக்கில் உள்ளது. 

இந்திய அணி தரப்பில், 2 வீரர்கள் மட்டுமே கால் சதத்தை தாண்டினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். ரோகித் சர்மா அதிகபட்சமாக 39 ரன்னை எடுத்தார். தவிர, படேல் 26 ரன்னையும், கோக்லி 22 ரன்னையும், அஸ்வின் 15 ரன்னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி சார்பில், மார்டின் 36 ரன்னைக் கொடுத்து 4 விக்கெ ட் எடுத்தார். ரஸ்செல் 16 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, சம்மி 2 விக்கெட்டையும், சிம்மன்ஸ் 1 விக்கெட்டையும் எடுத்த னர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மார்டின் தேர்வு செய்யப் பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்