முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா தலைமையில் ஆட்சிமன்ற குழுக்கூட்டம்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.30 - ஜெயலலிதா தலைமையில் ஆட்சிமன்ற குழுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைப்பெற்றது.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்,  தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று காலை (29.6.2011 ​ புதன் கிழமை),  ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள,  அவைத் தலைவர் இ.மதுசூதனன், பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்,  அமைப்புச் செயலாளர் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைப்புச் செயலாளரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சருமான சொ. கருப்பசாமி, முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர் எஸ்.பி.எம். சையதுகான், சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தலைமையில்,  ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில், 22.7.2011 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்