முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை குண்டுவெடிப்பு மக்களிடையே மோதலை ஏற்படுத்த சதி

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.15 - மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மும்பையில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தியுள்ளனர் என்று இடது கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது. மும்பையில் நேற்றுமுன்தினம் 3 இடங்களில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து இடது கம்யூனிஸ்ட் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மும்பையில் 3 இடங்களில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளனர். மக்களிடையே மோதலையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நாட்டில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு பின்னணியாக இருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தார்களுக்கு கட்சி சார்பாகவும் தொண்டர்கள் சார்பாகவும் ஆழ்ந்த வருத்ததையும் வேதனையும் தெரிவித்துக்கொள்கிறோம். காயம் அடைந்தவர்களுக்கும் எங்களுடைய அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்