எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,அக்.18 - மதுரை மாநகராட்சியில் மேயர் - வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று காலை 9.30 மணிக்கு மதுரை மீனாட்சி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குசாவடியில் தாயார் ஒச்சம்மாள், மனைவி ஜெயந்தி ஆகியோருடன் வந்து ஓட்டு போட்டார். ஒட்டுபோட்டு விட்டு வெளியே வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், கடந்த சட்டசபை தேர்தலில் அம்மா முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் வாக்கு அளித்தனர். 5 மாத அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு உள்ளது. சிறப்பான நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
அம்மா அறிவித்துள்ள நலத்திட்டம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் அம்மா நிரந்திரமாக முதல்வராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்றால்தான் திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர்.
எனவே மேயர் பதவிக்கு போட்டியிடும் ராஜன்செல்லப்பா 1 1/2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அனைத்து மாமன்றத்திலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அமோக வெற்றிபெறுவார்கள். 100 சதவீதம் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


