எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மார்ச்.- 13 - கடுமையான விலைவாசி உயர்வு, தி.மு.க.வின் ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்கள், கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் இவற்றின் காரணமாக மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதால் அ.தி.மு.க. கூட்டணிவரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் என்று தனது கருத்துக் கணிப்பின் மூலம் வெளியிட்டிருக்கிறது இந்திய வாக்காளர் பேரவை. இந்த பேரவை கோவையை மையமாக வைத்து இயங்கி வரும் ஒரு அமைப்பு ஆகும்.
கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்தித்த இன்னல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அவை ஓராயிரம் என்று சொல்லலாம். தொடர்ந்து 5 ஆண்டுகளாக இடைவிடாத மின்வெட்டை அமுல்படுத்தி மக்களை வாட்டி வதைத்தது. உப்பு முதல் உளுந்து வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, செங்கல், சிமிண்ட், மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களின் தாறுமாறான விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது, பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கத் தவறியது இவையெல்லாம் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரேசன் அரிசி கடத்தல், மணல் கடத்தல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்றவற்றாலும் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவை தவிர, அன்றாடம் நடக்கும் கொலைகள், கொள்ளைகள் இவற்றாலும் மக்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் அடுத்த மாதம் 13 ம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தே.மு.தி.க. போன்ற முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணி 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடும் என்று இந்திய வாக்காளர் பேரவை தெரிவித்துள்ளது. கோவையை மையமாக வைத்து இயங்கி வரும் இந்த அமைப்பில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2004 ல் நடந்த தேர்தலில் இந்திய அளவில் ஒரு மெகா சர்வே நடத்தி சோனியா காந்தி தலைமையில் இடதுசாரிகள் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்ற கருத்துக் கணிப்பை இந்த அமைப்புதான் வெளியிட்டது. அதற்கடுத்து 2006 சட்டமன்ற தேர்தலின் போது இழுபறியான சீட்டுக்களை பெற்று தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சிதான் ஏற்படும் என்ற சர்வேயையும் இந்த அமைப்புதான் வெளியிட்டது.
தற்போதும் இந்த அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. கடந்த 5 ஆண்டுகளில் கருணாநிதி அரசு பற்றி வெளிவந்த விமர்சனங்கள் பலவற்றை கேள்விகளாக தொகுத்து அவற்றுக்கு மக்களிடம் பதில்களை இந்த அமைப்பு பெற்றுள்ளது. முதல் கேள்வியாக, தமிழ்நாட்டில் நடக்கும் தி.மு.க. ஆட்சி நல்லாட்சி என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு வெறும் 5 சதவீதம் பேர் ஆம் என்றும் 95 சதவீதம் பேர் இல்லை என்றும் பதிலளித்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தினரின் கையில் ஆட்சி இருப்பதை விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என்று 90 சதவீதம் பேரும், ஆமாம் என்று 10 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர்.
ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி வழங்குவது, கடத்தல் வியாபாரிகளுக்குத்தான் அதிக பயனுள்ளதாக மக்கள் கருதுகிறார்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என்று 80 சதவீதம் பேரும், இல்லை என்று 20 சதவீதம் பேரும் குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியே வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 98 சதவீதம் பேர் இல்லை என்றே கருத்து கூறியிருக்கிறார்கள். மொத்தமுள்ள 25 கேள்விகளில் 22 கேள்விகளுக்கு தி.மு.க. ஆட்சிக்கு எதிரான கருத்துக்களையே 93.40 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.
நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்று மக்கள் நினைக்கிறார்களா? தி.மு.க. ஆட்சி கூடாது என்று விரும்புவோர் ஓரணியில் திரள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களா? என்பது போன்ற கேள்விகளுக்கும் ஆம் என்றே 100 க்கு நூறு சதவீதம் பேர் தங்கள் பதிலை டிக் அடித்திருக்கிறார்கள். இவர்களது சர்வேயின்படி கடுமையான விலைவாசி உயர்வு, ஆ. ராசா மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு, கருணாநிதி குடும்பத்தின் அதிகார ஆதிக்கம் ஆகியவை தமிழக மக்களிடம் கடுமையான வெறுப்பை ஏற்படுத்தியிருப்பது தெளிவாக தெரிகிறது.
இலவச கலர் டி.வி பற்றி கேட்ட போது, கேபிள் இணைப்பை இலவசமாக கொடுக்கவில்லையே என்று மக்கள் கிண்டலாக பதிலளித்தார்களாம். இந்த முறையும் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்களே... என்று கேட்ட போது கொடுக்கட்டும், யார் வீட்டு பணம். எங்கள் பணம்தானே. பணத்தை வாங்கிக் கொண்டு மாற்றிப் போடுவோம் என்று மக்கள் பதிலளித்தார்களாம். மக்களின் இந்த பதில் மூலம் ஆய்வு செய்த போது 234 தொகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் கைப்பற்றும் என்று தெரிகிறது என இந்திய வாக்காளர் பேரவை தெரிவித்துள்ளது. இந்த சர்வே கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.