முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்ணெணெய் விநியோகிக்காதவர் இடமாற்றம்: அமைச்சர்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு சென்னை, ஆலந்தூர் பகுதியில் உள்ள டி.யூ.சி.எஸ். நடத்தும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையத்தில் திடீர் ஆய்வினை மேற்கொண்டு தவறு செய்த அலுவலரை பணியிடமாற்றம் செய்ய உத்தரவிட்டார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு சென்னை, ஆலந்தூர் பகுதியில் உள்ள டி.யூ.சி.எஸ். நடத்தும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை என தகவல் அறிந்து திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.

இவ்வாய்வின்போது, மண்ணெண்ணெய் வழங்கும் நிலையத்தின் பதிவேடுகளை ஆய்வு செய்தபோது தவறுகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சார் பதிவாளர் / வட்டார மேலாளர் பி.குபேந்திரன் உடனடியாக பணியிடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாத ஒதுக்கீட்டின்படி மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வழங்காத பட்சத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிரதிமாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் உதவி ஆணையாளர், பரங்கிமலை மண்டல ஆய்வு செய்து, அவரது நேரடி கண்காணிப்பில் மண்ணெண்ணெய் வழங்கப்படவேண்டும் என்றும்  அமைச்சர் உத்தரவிட்டார்.

இவ்வாய்வின்போது வந்திருந்த உதவி ஆணையாளரிடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்ய அறிவுரை வழங்கினார்.

இவ்வாய்வின்போது, டி.யூ.சி.எஸ். தனி அலுவலர் ஆர்.சக்தி சரவணன், நுகர்பொருள் வழங்கல் துறை உதவி ஆணையாளர், பரங்கிமலை மண்டலம் எஸ்.செளந்தரராணி ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்