முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்டில் ஹசாரே குழுவினர் மீது செருப்புவீச்சு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஜன. - 23 - உத்தரகாண்டில் காங்கிரசுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட குழுவினர் மீது பார்வையாளர்கள் செருப்பு வீசினர். 

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறிய காங்கிரஸ் அரசை கண்டிக்கும் விதமாகவும், லோக்பால் தேவை பற்றி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலும் ஹசாரே குழு உறுப்பினர்கள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஹசாரே குழுவினர் தங்கள் பிரச்சாரத்தை துவக்கினர். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் தனது காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி வீசினார். ஆனால் அந்த குறி தவறி விட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கிரண்பேடி உள்ளிட்ட மற்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர். முதல் செருப்பு இலக்கு தவறியதால் மற்றொரு செருப்பை கழற்றி வீச முனைந்தார் அந்த நபர். உடனே உத்தரகாண்ட் போலீசார் தாக்குதல் நடத்த முயன்றவரை கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்