முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன. 28 - தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பினை வெளியிட்டுள்ளது. உள்துறை முதன்மைச் செயலராக இருந்த ரமேஷ்ராம் மிஷ்ரா வருவாய்த்துறை தலைமைச் செயலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேப்போல, வருவாய்த்துறை தலைமைச் செயளராக பணியாற்றி வந்த ராஜகோபால், உள்துறை முதன்மைச் செயலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த செய்திகுறிப்பு கூறுகிறது. ஐ.பி.எஸ்.அதிகாரிகள் மாற்றம்;மூன்று ஐ.பி.எஸ்.அதிகாரிகளை மாற்றி தமிழக அரசின் முதன்மைச்செயலாளர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சேலம் மாவட்ட போலீஸ் எஸ்,பி.யாக இருந்த,எம்.எஸ்.முத்துசாமி.சென்னையில்,சி.ஐ.டி.பிரிவில் பாதுகாப்புப்பிரிவு​1ன் எஸ்.பியாக இருந்த ஏ.சரவணனுக்குப் பதிலாக மாற்றப்பட்டுள்ளார்.ஏ.சரவணன் பரங்கிமலையில்,இணைக்கமிஷ்னராக இருந்த கோட்னிஸ் அஷ்வின் முகுந்த்துக்குப்பதிலாக மாற்றப்பட்டுள்ளார். கோட்னிஸ் அஷ்வின்முகுந்த் சேலம்மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு கூறுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்