முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி ஓய்வு

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி சனக்கிழமையுடன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இவருக்கான பிரிவு உபச்சார விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீதிபதி அக்பர் அலி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் 1952-ஆம் ஆண்டு பிறந்தார். 1977-ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பை முடித்தார். பிறகு, நகர உரிமையில் நீதிமன்றம், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றம் என தனது பயிற்சியைத் தொடங்கினார்.
பிறகு, 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நவம்பர் 22-ஆம் தேதியுடன் நீதிபதி அக்பர் அலி ஓய்வு பெறுகிறார். இவர் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 43-ஆக குறையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து